"இறைவன் ஒருவனே" என்று சொல்லப்படும் பொழுது வௌ;வேறு உருவங்களில் சொல்லப்படுவது எவ்வாறு?
ஆம். இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வௌ;வேறு பெயர் கொண்டு வௌ;வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வௌ;வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வௌ;வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுளைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள்
Thursday, November 6, 2008
நலம் தரும் குத்துவிளக்கு
'குத்து விளக்கு' தெய்வீகமானது. தெய்வ அம்சம் பொருந்தியது என்பர்.
இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம்,
மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும்
நெய் - நாதம், திரி - பிந்து, சுடர் - அலை மகள், சுடர் - கலை மகள், தீ -
மலை மகள் இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.
இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.
பஞ்சுத் திரிதான் விளக்கேற்ற மிகவும் உகந்தது. மெல்லிய திரிகளாகத் திரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திரிக்கும்போது ஒரு பக்கம் மட்டுமே உருட்ட வேண்டும். குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றித் தொழுவது நலம் தரும். முதலில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய
பிறகுதான் திரியிட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.
குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினைச் செய்ய குறிப்பிட்ட நாள்கள் உண்டு.
ஞாயிறு, திங்கள், வியாழன், சனி கிய நாள்களில் மட்டும்தான் குத்து விளக்கினைத் தேய்த்தல் வேண்டும்.
திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும்,
குககுரு தன தாட்சாயணியும் குத்து விளக்கில் பூரணமாகக் குடியிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே இந்த நாள்களில் விளக்கினைத் தேய்த்துக் கழுவுவதால் இந்தச் சக்திகள்
விலகிப் போகும் என நம்புகின்றனர். வெள்ளியன்று கழுவுவதால் அதில்
குடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி விலகிப் போய் விடுவாள்
என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை.
விளக்கை முதலில் நீரால் கழுவிப் பின்பு எண்ணெய்ப் பிசுக்கு நீங்கும் வண்ணம்
தேங்காய் நார் கொண்டு பச்சைப்பயறு, வெந்தயம், பச்சரிசி, எலுமிச்சைத் தோல்
சேர்த்து அரைத்த சிகைக்காய்ப் பொடி போட்டுத் தேய்க்க வேண்டும்.
கடைசியில் எலுமிச்சைச்சாறு ஊற்றி சுத்தப்படுத்தித் தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.
ஞாயிறன்று விளக்கைத் துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும்.
மனம் நிலைப்பட திங்கள் அன்று தீபம் போட வேண்டும்.
'குரு பார்வை' இருந்தாலும் கடினமான வேலைகளையும் கூட எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல்
எளிதாகச் செய்ய முடியுமே! வியாழன் அன்று தீபமேற்றினால் 'குருவின் பார்வையும் -
அது தரும் கோடி நன்மையும்' நமக்கே கிடைக்கும்.
வாகன விபத்துக்களைத் தவிர்க்க உதவுவதுதான் சனியன்று விளக்குத் துலக்கி நாம் போடும் தீபம்.
மற்ற நாள்களில் விளக்குத் துலக்காமல் தீபம் போடலாம்.
விளக்குத் துலக்காத நாள்களில் விசேஷமான நோன்பு, பூஜைகள் வந்தால்,
விளக்கை நீரில் கழுவித் துடைத்து விபூதி கொண்டு தேய்த்துச் சுத்தமான
துணியினால் விளக்கைத் துடைத்து தீபம் ஏற்றலாம்.
விளக்கில்லாத கோயிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்டுத் தீபம்
ஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில்
செய்யப்பட வேண்டிய ஒன்று. தாமரை நூல் தீபம், மனதுக்குப் பிடித்த துணையுடன் இணைத்து வைக்கும்.
வாழைத் தண்டின் நூலில் திரி செய்து தீபம் ஏற்றுவது மக்கட் பேற்றைத் தரும்.
வெள்ளெருக்குப் பட்டையில் திரித்துத் தீபம் ஏற்றுவது காற்று சேட்டையை விலகச் செய்யும்.
பஞ்சமி திதியில் விளக்கேற்றுவது அகால மரணத்தைத் தவிர்க்கும். புதிதாக நெய்த பருத்தி
ஆடையில் அரைத்த சந்தனம், பன்னீர் சேர்த்துத் தடவிக் காய வைத்து,
அதைத் திரியாக்கி வடக்குமுகமாக வைத்து, 'பஞ்ச தீப' எண்ணெய் ஊற்றித்
திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து ஓராண்டு விளக்கேற்ற நோய்களின் வேகம் குறையும்.
பல காலமாக வராமலிருந்த பணம் தேடி வரும். இது அருந்ததிக்குச் சாவித்திரி தேவி அருளிய வாக்கு.
ஒரு தீபம் ஏற்றுவது தவறு. சிறிய ஜோதி விளக்கானாலும் இரண்டு திரி போட்டு
இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். இது குடும்பத்திற்குப் பல நலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.
இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம்,
மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும்
நெய் - நாதம், திரி - பிந்து, சுடர் - அலை மகள், சுடர் - கலை மகள், தீ -
மலை மகள் இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.
இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.
பஞ்சுத் திரிதான் விளக்கேற்ற மிகவும் உகந்தது. மெல்லிய திரிகளாகத் திரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திரிக்கும்போது ஒரு பக்கம் மட்டுமே உருட்ட வேண்டும். குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றித் தொழுவது நலம் தரும். முதலில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய
பிறகுதான் திரியிட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.
குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினைச் செய்ய குறிப்பிட்ட நாள்கள் உண்டு.
ஞாயிறு, திங்கள், வியாழன், சனி கிய நாள்களில் மட்டும்தான் குத்து விளக்கினைத் தேய்த்தல் வேண்டும்.
திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும்,
குககுரு தன தாட்சாயணியும் குத்து விளக்கில் பூரணமாகக் குடியிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே இந்த நாள்களில் விளக்கினைத் தேய்த்துக் கழுவுவதால் இந்தச் சக்திகள்
விலகிப் போகும் என நம்புகின்றனர். வெள்ளியன்று கழுவுவதால் அதில்
குடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி விலகிப் போய் விடுவாள்
என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை.
விளக்கை முதலில் நீரால் கழுவிப் பின்பு எண்ணெய்ப் பிசுக்கு நீங்கும் வண்ணம்
தேங்காய் நார் கொண்டு பச்சைப்பயறு, வெந்தயம், பச்சரிசி, எலுமிச்சைத் தோல்
சேர்த்து அரைத்த சிகைக்காய்ப் பொடி போட்டுத் தேய்க்க வேண்டும்.
கடைசியில் எலுமிச்சைச்சாறு ஊற்றி சுத்தப்படுத்தித் தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.
ஞாயிறன்று விளக்கைத் துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும்.
மனம் நிலைப்பட திங்கள் அன்று தீபம் போட வேண்டும்.
'குரு பார்வை' இருந்தாலும் கடினமான வேலைகளையும் கூட எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல்
எளிதாகச் செய்ய முடியுமே! வியாழன் அன்று தீபமேற்றினால் 'குருவின் பார்வையும் -
அது தரும் கோடி நன்மையும்' நமக்கே கிடைக்கும்.
வாகன விபத்துக்களைத் தவிர்க்க உதவுவதுதான் சனியன்று விளக்குத் துலக்கி நாம் போடும் தீபம்.
மற்ற நாள்களில் விளக்குத் துலக்காமல் தீபம் போடலாம்.
விளக்குத் துலக்காத நாள்களில் விசேஷமான நோன்பு, பூஜைகள் வந்தால்,
விளக்கை நீரில் கழுவித் துடைத்து விபூதி கொண்டு தேய்த்துச் சுத்தமான
துணியினால் விளக்கைத் துடைத்து தீபம் ஏற்றலாம்.
விளக்கில்லாத கோயிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்டுத் தீபம்
ஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில்
செய்யப்பட வேண்டிய ஒன்று. தாமரை நூல் தீபம், மனதுக்குப் பிடித்த துணையுடன் இணைத்து வைக்கும்.
வாழைத் தண்டின் நூலில் திரி செய்து தீபம் ஏற்றுவது மக்கட் பேற்றைத் தரும்.
வெள்ளெருக்குப் பட்டையில் திரித்துத் தீபம் ஏற்றுவது காற்று சேட்டையை விலகச் செய்யும்.
பஞ்சமி திதியில் விளக்கேற்றுவது அகால மரணத்தைத் தவிர்க்கும். புதிதாக நெய்த பருத்தி
ஆடையில் அரைத்த சந்தனம், பன்னீர் சேர்த்துத் தடவிக் காய வைத்து,
அதைத் திரியாக்கி வடக்குமுகமாக வைத்து, 'பஞ்ச தீப' எண்ணெய் ஊற்றித்
திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து ஓராண்டு விளக்கேற்ற நோய்களின் வேகம் குறையும்.
பல காலமாக வராமலிருந்த பணம் தேடி வரும். இது அருந்ததிக்குச் சாவித்திரி தேவி அருளிய வாக்கு.
ஒரு தீபம் ஏற்றுவது தவறு. சிறிய ஜோதி விளக்கானாலும் இரண்டு திரி போட்டு
இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். இது குடும்பத்திற்குப் பல நலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.
Saturday, August 30, 2008
காலமும் இடமும் கருதிச் செயற்படுவோம்
"பருவத்தே பயிர்செய்” என்பது பழமொழி. பருவகாலங்களுக்கு உகந்தவாறு பயிர்ச்செய்கை செய்வதே அனுபவம் வாய்ந்த விவசாயின் செயலாக இருக்கும். விவசாயின் முயற்சி விதையின் தன்மை, பசளை, நீர்ப்பாசனம் முதலியபோஷணைகள் இவை எல்லாம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் காலம்; தப்பிய பயிர்ச்செய்கை தகுந்த விளைச்சலைத் தராது.
இதேபோல, ஒவ்வொரு பயிரும் அதற்கென உரிய சீதோஷ்ண நிலைகளுக்கமைந்த இடங்களிலேயே நல்விளைச்சல் தரும். பொருத்தமற்ற இடங்களில்; உரிய விளைச்சலைப் பெறமுடியாது.
இதுபோன்ற நிலைமையே மனித செயற்பாட்டில் எல்லா முயற்சிகளுக்கும் இருக்கிறது. எந்தஒரு கருமமும் உரியகாலத்திலும் உரிய இடத்திலும் செய்யப்படவேண்டும். அப்போதுதான் அக்கருமங்களின்; பலன்களை முறைப்படி பெறலாம்;;
“காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்;
ஞாலத்தின் மாணப் பெரிது” என்கிறார் வள்ளுவரும்.
சிறிய உதவியையும் பெரிதாக்காட்டும் இயல்பு காலத்திற்கு இருக்கிறது. இதுபோல எமது சமயக் கிரியை மரபுகளிலும் சரியான நேரகாலத்தையும், உரிய இடத்தையும் அறிந்து செய்தால் நற்பயனைப் பெறலாம்;;;;;;.
சூரியகாந்தக் கல்;லினூடாக (பூதக்கண்ணாடி) வருகின்ற சூரியஒளிக்கு எரிக்கும் சக்தி உண்டு. ஆனால் சரியான குவியதூரத்தில் வைக்கும்போதுதான் பஞ்சு எரிகிறது. இதேநிகழ்வு காலையில்; அல்லது மாலையில் நிகழ்வதைவிட மதியவேளையிலெனில் மிகவிரைவாகவும் இலகுவாகவும் நிகழ்கிறது. இங்கு காலமும் இடமும் பெறும் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.
சமயக்கிரியைகள் ஆரம்பத்தில் சங்கல்பம் சொல்கிறோமே, அதன் நோக்கம் காலமும் இடமும் சரியாக அமைவதை நிச்சயப்படுத்துவதே. எந்த ஒரு கிரியையும் சங்கல்ப ப+ர்வமாகவே செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும்;. எந்தக் காரணத்துக்காக, எந்தக்கிரியைகளை, எந்தக்காலத்தில், எந்த இடத்தில் செய்கிறேன் என்றுகூறி மனஉறுதியுடன் அக்காரியத்தில்; ஈடுபடத்தொடங்குவதே சங்கல்பத்தின் நோக்கமாகும்.
பல்வேறு சிறிய கிரியைகள் அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழும் கும்பாபிஷேகம் முதலிய வைபவங்களில் முதலில் எல்லாக் கிரியைகளுக்கும் பொதுவான சங்கல்பம்; கூறப்பட்டதும் பின்னால் ஒவ்வொரு கிரியைகளுக்கும்; முன் சிவாச்சாரியார் தாம் சங்கல்பம்; செய்துகொள்வதைக் காணலாம். இது சங்கல்பத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது.
சங்கல்பம் செய்யும்போது முதலில் பிரபஞ்ச உற்பத்தியிலிருந்து இன்றுவரையான காலம் நிர்ணயிக்கப்படுகிறது. மாதம், வாரம் என்பவை போன்று மிக நீண்டகாலக் கணக்குகள் பரார்த்தம், கல்பம்;, மன்வந்தரம், யுகம் முதலியவை.
இப்போது நாம் வசிப்பது இரண்டாவது பரார்த்தம் (துவிதீயபரார்த்தே) சுவேதவராக கல்பம், வைவஸ்வத மனுஅந்தரம், கலியுகம், இதன் முற்பகுதியில் விபவ முதல் அசஷய வரையான 60 வருடங்கள் தொடர்ந்து சக்கரமாக வரும். வருடத்தில் 12 மாதம் (சித்திரை முதல் பங்குனி வரை) இருபசஷம் (ப+ர்வம், அபரம்) பசஷத்தில் 16 திதிகள் (பிரதமை முதல் பௌர்ணமி, அமாவாசைவரை) என்பனவும் வாரத்தில் ஏழு நாட்களும் வருகின்றன.27 நட்சத்திரங்கள் தொடர்கின்றன. இவற்றைவிட யோகங்களும் கரணங்களும் அமைகின்றன.
நாம் கிரியை செய்யும் போது உள்ளகால நேரப் பகுதிக்கு அமைய மேற்கூறப்பட்ட அத்தனையும் சங்கல்பத்தில் சொல்கிறோம். ,வையாவும் சுபமாக அமையவேண்டும் என்பதற்காகவே சுபயோக, சுபகரண..... என்று சொல்லப்படுகிறது. தற்செயலாக இவற்றில் தோஷங்களும் ஏதும் இருக்கக்கூடும் என்பதால் அவற்றின் தீயவிளைவுகள் நம்மைத் தாக்காமலிருக்கும் பொருட்டாகவே சங்கல்பம் தொடங்கமுன்,
“திதி சிவஸ் ததா வாரோ நசஷத்ரம் சிவ ஏவ ச
யோகஸ்ச கரணம் சைவ சர்வம் சிவசமயம் ஐகத்”
என்று பிரார்த்திக்கப்படுகிறது. பஞ்சாங்க உறுப்புக்களான ஐந்துகாலப் பகுதிகளும் திதி, வாரம், நசஷத்திரம், யோகம்;, கரணம், சிவமயமாக மங்கலமாக அமையட்டும் என்று வேண்டுவதே இதன் பொருள்.
இதன்பின் தர்ப்பை (பவித்ரம்) அணியும் போதும்,
“ததேவ லக்னம் சுதினம் ததேவ
தாராபலம் சந்த்ரபலம் ததேவ”
(அதுவே நல்ல லக்னம், அதுவே நல்ல தினம். நற்பலனை கொடுக்கும் சுபவேளை அதுவே) என்ற நம்பிக்கையோடு அணியப்படுகின்றது.
சங்கல்;பத்தின் முதற்பகுதி இவ்வாறு காலத்தை எடுத்துக் கூறும்போது தொடர்ந்து வரும் பகுதி இடத்தைக்; கூறுகின்றது. இந்த இடத்திலே நாம் இக்கிரியையைச் செய்கிறோம் என்பது இதன்பொருள்.
“ஐம்ப+த்துவீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோர்தஷிணே பார்ஸ்வே……”
இவையாவும் ஏழாம் வேற்றுமையில், இடப்பொருளில் வருதலைக் காண்க. ஐம்புத்தீவு, பாரத வர்;ஷம், பரதகண்டம் என்பன யாவும் நமது தென்னாசியப் பிராந்தியமனைத்தையும் உள்ளடக்கியதாக முற்காலத்தில் ஒரு நிலப்பரப்பாகக் காணப்பட்ட பெரும் பகுதிகளின் பெயர், முகவரி குறிப்பிட்டு கண்டம், நாடு, நகரம், கிராமம் எனச் சுட்டுவதுபோல பரந்த நிலப்பரப்பிலிருந்து குறுகிவருவது இது. பரதகண்டத்திலே மேரு மலைக்குத் தென்பகுதியிலே அமைந்திருக்கும் நமது நாடு (லங்காத் த்வீபே) நகரம் (வீணாகானபுரெ) கிராமம் (கோப்பாய்க் கிராமே) குறிச்சி (கலட்டி சேஷத்ரே) என்பவற்றைக் கூறுவது மரபு.
பதினான்கு உலகங்கள் இருப்பினும் கர்மப+மி எனப்படுவது இப்ப+வுலகம் தான்.
“புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம்;
போக்கு கின்றோம் அவமே” எனத் தேவர்கள் வருந்தி, “இந்தப் ப+மி சிவனுய்யக் கொள்கின்ற ஆறு” என்று இப்ப+மியிள் மகிமையைக் கூறுவதாக மணிவாசகர் போற்றுகிறார். இப்ப+மியில் பிறந்து கர்மவினைகளைச் செய்துதான் பாவபுண்ணியங்களை அனுபவித்துத் தீர்க்கலாம்.
இந்தப் ப+மியிலும் பாரததேசம் முதலியன புண்ணிய பகுதிகள். அங்கும் சில தலங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றால் மகிமைபெற்றுச் சிறந்து விளங்குகின்றன. அவற்றுள்ளும் எந்தெந்த தோஷங்களை எங்கெங்கு போக்கலாம், எந்தெந்த நற்பயன்களை எங்கெங்கு பெறலாம் என்றெல்லாம் அனுபவப+ர்வமாக நம் முன்னோர்கள் கூறிவந்;திருக்கின்றனர். இவற்றால் நாம் நமது சமயக் கிரியைகளில் காலமும் இடமும் பெறும் முக்கியத்துவத்தை உணர்கிறோம்.
காலம் என்ற விடயத்தை இன்னும் சிறிது சிந்திப்போம். இறைவனுக்கான வழிபாடுகள் காலை, மாலை முதலிய சந்;;திப் பொழுதுகளி;ல் மேன்மையுறுகின்;றன. இரவுப் பொழுது பொதுவாக சக்தி வழிபாட்டுக்குரியது. பகற்பொழுது சிவனுக்குரியது. இரண்டும் கூடிப்பிரிகின்ற அந்தி சந்திகள் சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதாகவும் அருள்விளக்கமுடையவையாகவும் இருக்கும். இதேபோல நள்ளிரவுப் பொழுதும் நடுப்பகலும் சிறப்புடையவையே. நண்பகல்வேளையைத் தேவேந்திர முகூர்த்தம் என்பர்;.
ஆறுகாலப் பூiஐகள், பன்னிருகாலப் ப+iஐகள் என்பன ஆலயங்களில்; விசேஷ வழிபாட்டுக்; காலங்களாகும். இப்ப+iஐகள் நிகழ்வதற்குரிய காலநேரக் கணக்குகள் ஆகமங்களில் விதித்துக் கூறப்பட்டிருக்கின்றன. காலைப்பூ+iஐ சூரியனில்; ஆரம்பிப்பதும் மாலைப்ப+iஐ சந்திரனில் ஆரம்பிப்பதும் குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேகம், மஹோற்சவம் முதலிய விஷேச நிகழ்வுகளில் யாகப+iஐ நடைபெறுகிறது. நாளொன்றுக்கு இரண்டு காலம் யாகப+iஐ நிகழவேண்டும். யாகப+iஐயின்; நாட்கணக்கு மூன்று முதல்; ஒன்பதுவரை ஒற்றைப்படையாகவும் காலங்கள் இரட்டைப்படையாகவும் (உதாரணமாக மூன்று நாள் எனின் ஆறு காலம் ) அமையவேண்டுமென்பது விதியாகும்.
அங்குரார்ப்பணத்துடன்; ஆரம்பமாகும் யாகப+iஐ எப்போதும் மாலையில்தான் தொடங்கப்படும். கலாகர்ஷணம், ஸ்பர்ஸாகுதி முதலிய கிரியைகள் இரவுப் பொழுதுக்குரியவை. இவ்வாறே விரதங்களுக்கும் காலநியதிகள் உண்டு. நட்சத்திர, திதி வியாபகங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் விரதங்களை அதற்குரிய காலங்களில் அநுஷ்டிப்பதும் அடுத்தநாட் காலையில் எட்;டு மணிக்குமுன் பாரணை செய்வதும் அந்தந்த விரதங்களுக்குரிய ஆண்டுகளுக்கு அநுஷ்டித்தபின் (உதாரணமாக கந்தசஷ்டி-ஆறு வருடங்கள் ) விரத உத்;தியாபனம் செய்;து இறைவனிடம் சமர்ப்பித்து மறுபடி ஆரம்பிப்பது அவசியமாகும்.
மந்திரஐபங்கள் எந்தெந்த வேளையில் செய்யப்படவேண்டும், எத்தனை உருக்கள் ஜபிக்கப்படவேண்டும். என்றெல்லாம் கணக்குகள் உண்டு. தினமும் நாம் செய்யும் பிரார்த்தனைகளை ஒரு குறித்த நேரத்தில் தொடர்ந்து செய்துவரும்போது அதிக பயனைப் பெறலாம்.
இடம் என்பதுபற்றி இன்னும்சிறிது சிந்திப்பின் ஆலயம்;; ஒன்றிலே வசந்தமண்டபம், யாகசாலை, பாகசாலை முதலிய ஒவ்வோர் அங்கமும் எந்தெந்த ஸ்தானத்தில்; எந்த அளவுப்பிரமாணத்தில் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகள்; ஆகமங்களில் விதிக்கப்;பட்டிருக்க காணலாம். கிரியைகள் செய்வதற்கான இடங்களும்; நிர்ணயிக்கப்பட்;;டுள்ளன. கிராமசாந்தி தென்மேற்கு அல்லது ஈசானத்தில் செய்யப்படவேண்டும். பிரவேச பலி, சுற்றுப்பலி முதலியன வெளிவீதியில் செய்யப்படும். சாந்திக்கிரியைகள் உள்வீதியிலும் ஸ்தம்ப மண்டபத்திலும் செய்யப்படும். கும்ப ப+ஜைகள் ஸ்நபனமண்டபத்தில் நிகழ்த்தப்படும்.
இல்லறமென்னும் நல்லறத்தை நடத்துவதற்குரிய இல்லம் அமையவேண்டிய இடம், அமைப்புமுறை என்பவற்றையும் வாஸ்து சாஸ்திரம் விரிவாகக் கூறுகின்றது. மனைகோலுதல் அல்லது நிலையம் எடுத்தல் என்று கூறுவதற்கிணங்க, முறையாக இடமெடுத்து உரியகாலத்தில் கிருஹப் பிரவேசம் செய்து வாழ்ந்தால் இல்லறம் செழிக்கும். நாம் வாழ்ந்து கொண்டிருக்;கும் வீட்டிலேயே தளபாடங்கள், உபகரணங்கள், கருவிகள் முதலியவற்றையும் ஒளி, ஒலி, மின் சக்திகளை வெளிப்படுத்தும் நவீன சாதனங்களையும் உரிய முறைப்படி அவ்வவற்றுக்குரிய ஸ்தானங்களில் அமைப்பதன் மூலம் பெரும் சக்தியை விளைவித்து வளம்பெருக்கி அமைதியும் இன்பமும் பெறலாம் என விளக்கி நவீன வாஸ்து சாஸ்திர நூல்கள் பல இன்று வெளிவந்;;துகொண்டிருக்கின்றன.
எனவே காலமும் இடமும் கருதிக் கவின்மிகு வாழ்க்கையை நடத்துவோமாக.
இதேபோல, ஒவ்வொரு பயிரும் அதற்கென உரிய சீதோஷ்ண நிலைகளுக்கமைந்த இடங்களிலேயே நல்விளைச்சல் தரும். பொருத்தமற்ற இடங்களில்; உரிய விளைச்சலைப் பெறமுடியாது.
இதுபோன்ற நிலைமையே மனித செயற்பாட்டில் எல்லா முயற்சிகளுக்கும் இருக்கிறது. எந்தஒரு கருமமும் உரியகாலத்திலும் உரிய இடத்திலும் செய்யப்படவேண்டும். அப்போதுதான் அக்கருமங்களின்; பலன்களை முறைப்படி பெறலாம்;;
“காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்;
ஞாலத்தின் மாணப் பெரிது” என்கிறார் வள்ளுவரும்.
சிறிய உதவியையும் பெரிதாக்காட்டும் இயல்பு காலத்திற்கு இருக்கிறது. இதுபோல எமது சமயக் கிரியை மரபுகளிலும் சரியான நேரகாலத்தையும், உரிய இடத்தையும் அறிந்து செய்தால் நற்பயனைப் பெறலாம்;;;;;;.
சூரியகாந்தக் கல்;லினூடாக (பூதக்கண்ணாடி) வருகின்ற சூரியஒளிக்கு எரிக்கும் சக்தி உண்டு. ஆனால் சரியான குவியதூரத்தில் வைக்கும்போதுதான் பஞ்சு எரிகிறது. இதேநிகழ்வு காலையில்; அல்லது மாலையில் நிகழ்வதைவிட மதியவேளையிலெனில் மிகவிரைவாகவும் இலகுவாகவும் நிகழ்கிறது. இங்கு காலமும் இடமும் பெறும் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.
சமயக்கிரியைகள் ஆரம்பத்தில் சங்கல்பம் சொல்கிறோமே, அதன் நோக்கம் காலமும் இடமும் சரியாக அமைவதை நிச்சயப்படுத்துவதே. எந்த ஒரு கிரியையும் சங்கல்ப ப+ர்வமாகவே செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும்;. எந்தக் காரணத்துக்காக, எந்தக்கிரியைகளை, எந்தக்காலத்தில், எந்த இடத்தில் செய்கிறேன் என்றுகூறி மனஉறுதியுடன் அக்காரியத்தில்; ஈடுபடத்தொடங்குவதே சங்கல்பத்தின் நோக்கமாகும்.
பல்வேறு சிறிய கிரியைகள் அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழும் கும்பாபிஷேகம் முதலிய வைபவங்களில் முதலில் எல்லாக் கிரியைகளுக்கும் பொதுவான சங்கல்பம்; கூறப்பட்டதும் பின்னால் ஒவ்வொரு கிரியைகளுக்கும்; முன் சிவாச்சாரியார் தாம் சங்கல்பம்; செய்துகொள்வதைக் காணலாம். இது சங்கல்பத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது.
சங்கல்பம் செய்யும்போது முதலில் பிரபஞ்ச உற்பத்தியிலிருந்து இன்றுவரையான காலம் நிர்ணயிக்கப்படுகிறது. மாதம், வாரம் என்பவை போன்று மிக நீண்டகாலக் கணக்குகள் பரார்த்தம், கல்பம்;, மன்வந்தரம், யுகம் முதலியவை.
இப்போது நாம் வசிப்பது இரண்டாவது பரார்த்தம் (துவிதீயபரார்த்தே) சுவேதவராக கல்பம், வைவஸ்வத மனுஅந்தரம், கலியுகம், இதன் முற்பகுதியில் விபவ முதல் அசஷய வரையான 60 வருடங்கள் தொடர்ந்து சக்கரமாக வரும். வருடத்தில் 12 மாதம் (சித்திரை முதல் பங்குனி வரை) இருபசஷம் (ப+ர்வம், அபரம்) பசஷத்தில் 16 திதிகள் (பிரதமை முதல் பௌர்ணமி, அமாவாசைவரை) என்பனவும் வாரத்தில் ஏழு நாட்களும் வருகின்றன.27 நட்சத்திரங்கள் தொடர்கின்றன. இவற்றைவிட யோகங்களும் கரணங்களும் அமைகின்றன.
நாம் கிரியை செய்யும் போது உள்ளகால நேரப் பகுதிக்கு அமைய மேற்கூறப்பட்ட அத்தனையும் சங்கல்பத்தில் சொல்கிறோம். ,வையாவும் சுபமாக அமையவேண்டும் என்பதற்காகவே சுபயோக, சுபகரண..... என்று சொல்லப்படுகிறது. தற்செயலாக இவற்றில் தோஷங்களும் ஏதும் இருக்கக்கூடும் என்பதால் அவற்றின் தீயவிளைவுகள் நம்மைத் தாக்காமலிருக்கும் பொருட்டாகவே சங்கல்பம் தொடங்கமுன்,
“திதி சிவஸ் ததா வாரோ நசஷத்ரம் சிவ ஏவ ச
யோகஸ்ச கரணம் சைவ சர்வம் சிவசமயம் ஐகத்”
என்று பிரார்த்திக்கப்படுகிறது. பஞ்சாங்க உறுப்புக்களான ஐந்துகாலப் பகுதிகளும் திதி, வாரம், நசஷத்திரம், யோகம்;, கரணம், சிவமயமாக மங்கலமாக அமையட்டும் என்று வேண்டுவதே இதன் பொருள்.
இதன்பின் தர்ப்பை (பவித்ரம்) அணியும் போதும்,
“ததேவ லக்னம் சுதினம் ததேவ
தாராபலம் சந்த்ரபலம் ததேவ”
(அதுவே நல்ல லக்னம், அதுவே நல்ல தினம். நற்பலனை கொடுக்கும் சுபவேளை அதுவே) என்ற நம்பிக்கையோடு அணியப்படுகின்றது.
சங்கல்;பத்தின் முதற்பகுதி இவ்வாறு காலத்தை எடுத்துக் கூறும்போது தொடர்ந்து வரும் பகுதி இடத்தைக்; கூறுகின்றது. இந்த இடத்திலே நாம் இக்கிரியையைச் செய்கிறோம் என்பது இதன்பொருள்.
“ஐம்ப+த்துவீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோர்தஷிணே பார்ஸ்வே……”
இவையாவும் ஏழாம் வேற்றுமையில், இடப்பொருளில் வருதலைக் காண்க. ஐம்புத்தீவு, பாரத வர்;ஷம், பரதகண்டம் என்பன யாவும் நமது தென்னாசியப் பிராந்தியமனைத்தையும் உள்ளடக்கியதாக முற்காலத்தில் ஒரு நிலப்பரப்பாகக் காணப்பட்ட பெரும் பகுதிகளின் பெயர், முகவரி குறிப்பிட்டு கண்டம், நாடு, நகரம், கிராமம் எனச் சுட்டுவதுபோல பரந்த நிலப்பரப்பிலிருந்து குறுகிவருவது இது. பரதகண்டத்திலே மேரு மலைக்குத் தென்பகுதியிலே அமைந்திருக்கும் நமது நாடு (லங்காத் த்வீபே) நகரம் (வீணாகானபுரெ) கிராமம் (கோப்பாய்க் கிராமே) குறிச்சி (கலட்டி சேஷத்ரே) என்பவற்றைக் கூறுவது மரபு.
பதினான்கு உலகங்கள் இருப்பினும் கர்மப+மி எனப்படுவது இப்ப+வுலகம் தான்.
“புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம்;
போக்கு கின்றோம் அவமே” எனத் தேவர்கள் வருந்தி, “இந்தப் ப+மி சிவனுய்யக் கொள்கின்ற ஆறு” என்று இப்ப+மியிள் மகிமையைக் கூறுவதாக மணிவாசகர் போற்றுகிறார். இப்ப+மியில் பிறந்து கர்மவினைகளைச் செய்துதான் பாவபுண்ணியங்களை அனுபவித்துத் தீர்க்கலாம்.
இந்தப் ப+மியிலும் பாரததேசம் முதலியன புண்ணிய பகுதிகள். அங்கும் சில தலங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றால் மகிமைபெற்றுச் சிறந்து விளங்குகின்றன. அவற்றுள்ளும் எந்தெந்த தோஷங்களை எங்கெங்கு போக்கலாம், எந்தெந்த நற்பயன்களை எங்கெங்கு பெறலாம் என்றெல்லாம் அனுபவப+ர்வமாக நம் முன்னோர்கள் கூறிவந்;திருக்கின்றனர். இவற்றால் நாம் நமது சமயக் கிரியைகளில் காலமும் இடமும் பெறும் முக்கியத்துவத்தை உணர்கிறோம்.
காலம் என்ற விடயத்தை இன்னும் சிறிது சிந்திப்போம். இறைவனுக்கான வழிபாடுகள் காலை, மாலை முதலிய சந்;;திப் பொழுதுகளி;ல் மேன்மையுறுகின்;றன. இரவுப் பொழுது பொதுவாக சக்தி வழிபாட்டுக்குரியது. பகற்பொழுது சிவனுக்குரியது. இரண்டும் கூடிப்பிரிகின்ற அந்தி சந்திகள் சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதாகவும் அருள்விளக்கமுடையவையாகவும் இருக்கும். இதேபோல நள்ளிரவுப் பொழுதும் நடுப்பகலும் சிறப்புடையவையே. நண்பகல்வேளையைத் தேவேந்திர முகூர்த்தம் என்பர்;.
ஆறுகாலப் பூiஐகள், பன்னிருகாலப் ப+iஐகள் என்பன ஆலயங்களில்; விசேஷ வழிபாட்டுக்; காலங்களாகும். இப்ப+iஐகள் நிகழ்வதற்குரிய காலநேரக் கணக்குகள் ஆகமங்களில் விதித்துக் கூறப்பட்டிருக்கின்றன. காலைப்பூ+iஐ சூரியனில்; ஆரம்பிப்பதும் மாலைப்ப+iஐ சந்திரனில் ஆரம்பிப்பதும் குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேகம், மஹோற்சவம் முதலிய விஷேச நிகழ்வுகளில் யாகப+iஐ நடைபெறுகிறது. நாளொன்றுக்கு இரண்டு காலம் யாகப+iஐ நிகழவேண்டும். யாகப+iஐயின்; நாட்கணக்கு மூன்று முதல்; ஒன்பதுவரை ஒற்றைப்படையாகவும் காலங்கள் இரட்டைப்படையாகவும் (உதாரணமாக மூன்று நாள் எனின் ஆறு காலம் ) அமையவேண்டுமென்பது விதியாகும்.
அங்குரார்ப்பணத்துடன்; ஆரம்பமாகும் யாகப+iஐ எப்போதும் மாலையில்தான் தொடங்கப்படும். கலாகர்ஷணம், ஸ்பர்ஸாகுதி முதலிய கிரியைகள் இரவுப் பொழுதுக்குரியவை. இவ்வாறே விரதங்களுக்கும் காலநியதிகள் உண்டு. நட்சத்திர, திதி வியாபகங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் விரதங்களை அதற்குரிய காலங்களில் அநுஷ்டிப்பதும் அடுத்தநாட் காலையில் எட்;டு மணிக்குமுன் பாரணை செய்வதும் அந்தந்த விரதங்களுக்குரிய ஆண்டுகளுக்கு அநுஷ்டித்தபின் (உதாரணமாக கந்தசஷ்டி-ஆறு வருடங்கள் ) விரத உத்;தியாபனம் செய்;து இறைவனிடம் சமர்ப்பித்து மறுபடி ஆரம்பிப்பது அவசியமாகும்.
மந்திரஐபங்கள் எந்தெந்த வேளையில் செய்யப்படவேண்டும், எத்தனை உருக்கள் ஜபிக்கப்படவேண்டும். என்றெல்லாம் கணக்குகள் உண்டு. தினமும் நாம் செய்யும் பிரார்த்தனைகளை ஒரு குறித்த நேரத்தில் தொடர்ந்து செய்துவரும்போது அதிக பயனைப் பெறலாம்.
இடம் என்பதுபற்றி இன்னும்சிறிது சிந்திப்பின் ஆலயம்;; ஒன்றிலே வசந்தமண்டபம், யாகசாலை, பாகசாலை முதலிய ஒவ்வோர் அங்கமும் எந்தெந்த ஸ்தானத்தில்; எந்த அளவுப்பிரமாணத்தில் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகள்; ஆகமங்களில் விதிக்கப்;பட்டிருக்க காணலாம். கிரியைகள் செய்வதற்கான இடங்களும்; நிர்ணயிக்கப்பட்;;டுள்ளன. கிராமசாந்தி தென்மேற்கு அல்லது ஈசானத்தில் செய்யப்படவேண்டும். பிரவேச பலி, சுற்றுப்பலி முதலியன வெளிவீதியில் செய்யப்படும். சாந்திக்கிரியைகள் உள்வீதியிலும் ஸ்தம்ப மண்டபத்திலும் செய்யப்படும். கும்ப ப+ஜைகள் ஸ்நபனமண்டபத்தில் நிகழ்த்தப்படும்.
இல்லறமென்னும் நல்லறத்தை நடத்துவதற்குரிய இல்லம் அமையவேண்டிய இடம், அமைப்புமுறை என்பவற்றையும் வாஸ்து சாஸ்திரம் விரிவாகக் கூறுகின்றது. மனைகோலுதல் அல்லது நிலையம் எடுத்தல் என்று கூறுவதற்கிணங்க, முறையாக இடமெடுத்து உரியகாலத்தில் கிருஹப் பிரவேசம் செய்து வாழ்ந்தால் இல்லறம் செழிக்கும். நாம் வாழ்ந்து கொண்டிருக்;கும் வீட்டிலேயே தளபாடங்கள், உபகரணங்கள், கருவிகள் முதலியவற்றையும் ஒளி, ஒலி, மின் சக்திகளை வெளிப்படுத்தும் நவீன சாதனங்களையும் உரிய முறைப்படி அவ்வவற்றுக்குரிய ஸ்தானங்களில் அமைப்பதன் மூலம் பெரும் சக்தியை விளைவித்து வளம்பெருக்கி அமைதியும் இன்பமும் பெறலாம் என விளக்கி நவீன வாஸ்து சாஸ்திர நூல்கள் பல இன்று வெளிவந்;;துகொண்டிருக்கின்றன.
எனவே காலமும் இடமும் கருதிக் கவின்மிகு வாழ்க்கையை நடத்துவோமாக.
Wednesday, June 25, 2008
விபூதி (திருநீறு)
சைவ சமய பெருமக்களிற்கு திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமையாதவை. பசுவின் சாணத்தை எடுத்து அதனை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். விபூதி தரிப்பது ஆன்மீக சம்பச்தமான நன்மைகள் விளைவதுடன், உடல்நலம் சார்ந்த நன்மைகளும் உண்டாகும் என்பது சான்றோர்களின் கருத்தாகும். திருநீறு கிருமிநாசினியும் கூட. அதனை உடல் முழுவதும் பூசுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது. நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர்க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது.
இதன் பெருமையை திருஞானசம்பந்தர் தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சிவாயநம, நமசிவாய, சிவ சிவ என்று ஏதாவதொரு பஞ்சாட்சர மந்திரத்தை செபித்தபடி உத்தூளனமாக (நெற்றி முழவதும்) அல்லது திரிபுண்டரிகமாக (3 கோடுகளாக) திருநீற்றினை அணிதல் வேண்டும். இதற்கு ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும். கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். இதனால் நல்வாக்கு, நல்லோர் நட்பு, உயர்ந்த நற்குணங்கள்;, குறைவில்லா செல்வம், சகல விதமான ஐசுவரியங்கள் போன்ற எல்லா நலமும் பெற்று நம் வாழ்வில் சிறப்புடன் வாழலாம்.
மேலும் சில நன்மைகளைப் பார்ப்போம் :-
வாத, பித்த, கப நாடிகளை சமநிலைப்படுத்தக் கூடியது.
மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை தூய்மையாக்கும்.
ஆணவம், கர்மம், மாயை என்ற மும் மலங்களை நீங்கச் செய்யும்.
விதிப்படியமைந்த திருநீற்றை உட்கொண்டால் உடம்பின் அசுத்தங்கள்அனைத்தையும் போக்கி நாடிநரம்புகள் அனைத்திற்கும் வலிமையை கொடுக்கும்.
உடலுக்கும், உயிரிற்கும், இம்மையிற்கும், மறுமையிற்கும் உயர்வளிக்கும் விபூதியினை தினமும் நாம் அணிந்து உயர்வடைவோமாக.
இதன் பெருமையை திருஞானசம்பந்தர் தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சிவாயநம, நமசிவாய, சிவ சிவ என்று ஏதாவதொரு பஞ்சாட்சர மந்திரத்தை செபித்தபடி உத்தூளனமாக (நெற்றி முழவதும்) அல்லது திரிபுண்டரிகமாக (3 கோடுகளாக) திருநீற்றினை அணிதல் வேண்டும். இதற்கு ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும். கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். இதனால் நல்வாக்கு, நல்லோர் நட்பு, உயர்ந்த நற்குணங்கள்;, குறைவில்லா செல்வம், சகல விதமான ஐசுவரியங்கள் போன்ற எல்லா நலமும் பெற்று நம் வாழ்வில் சிறப்புடன் வாழலாம்.
மேலும் சில நன்மைகளைப் பார்ப்போம் :-
வாத, பித்த, கப நாடிகளை சமநிலைப்படுத்தக் கூடியது.
மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை தூய்மையாக்கும்.
ஆணவம், கர்மம், மாயை என்ற மும் மலங்களை நீங்கச் செய்யும்.
விதிப்படியமைந்த திருநீற்றை உட்கொண்டால் உடம்பின் அசுத்தங்கள்அனைத்தையும் போக்கி நாடிநரம்புகள் அனைத்திற்கும் வலிமையை கொடுக்கும்.
உடலுக்கும், உயிரிற்கும், இம்மையிற்கும், மறுமையிற்கும் உயர்வளிக்கும் விபூதியினை தினமும் நாம் அணிந்து உயர்வடைவோமாக.
துளசியின் பெருமை

துளசி ஒரு மருந்துச் செடி மட்டுமல்ல. அதில் தெய்வீகத் தன்மையும் நிறைந்திருப்பதால் வீட்டின் முன் மாடத்தில் துளசியை நட்டு பூஜிப்பது வழக்கம். துளசியின் வேர் மண்ணை தண்ணீரில் குழைத்து நெற்றியில் இட்டுக் கொள்வதால் சகல சம்பத்துகளும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. பெருமாளுக்கு மிகவும் உகந்தது துளசி. சன்யாஸிகள் துளசியால் பூஜை செய்த பிறகு அதை சிறிய அளவில் பிரசாதமாக உட்கொள்வதும், முகர்வதும், காதில் வைத்துக் கொள்வதற்கும் உபயோகிக்கின்றனர்.
பல வகை துளசிகளில் வெண்துளசியும் கருந்துளசியையும் சாதாரணமாக காணப்படுகின்றன. காட்டு துளசி என்னும் ருத்திரசடை (திருநீற்றுப்பச்சை) ராம துளசி (எலுமிச்சம் துளசி) என்றும் வகைகளுன்டு. வெண்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை வெண்மை கலந்த பச்சை நிறமாகவும், கருந்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை கருஞ்சிவப்பு ஏறிய பச்சை நிறமாகவும் காணப்படும். இவ்விரண்டு வகை துளசியும் குணங்களில் அதிக வேறுபாடு இல்லாதவை.
மலேரியா, இன்புளயன்ஸா போன்ற ஜ்வர நிலைகளில் துளசியின் உபயோகத்தால் அவ்வகை நோய்கள் மற்றவருக்கு பரவாமல் தடுக்கும் சக்தியை உடையது.
சுவையில் காரம் கலந்த கசப்புடன் கூடியது. உஷ்ணப் பாங்கான பூமியில் அதிகம் விளையக் கூடியது. உடல் சூட்டை சமச்சீராக வைக்கும் திறன் அதற்கு உண்டு. இறுகியுள்ள மார்ச்சளியை நீர்க்கச் செய்து கபத்தை வெளிக் கொண்டு வருவதால் கபத்தினாலும் உமிழ்நீராலும் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கிவிடும். வாயில் ஏற்பட்டுள்ள குழகுழப்பு, அழுக்கு ஆகியவற்றை துளசி அறவே நீக்கி நாக்கிற்கு சுறுசுறுப்பையும் சுவை அறியும் தன்மையையும் விரைவில் ஏற்படுத்துகிறது. துளசியை மென்று தின்பதால் பசித்தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும்.
குளிர் ஜ்வரம், கபத்தினால் ஏற்படும் இருமல், மூச்சுத்திணறல், நுரையீரலில் ஏற்பட்டுள்ள கபக்கட்டினால் உண்டாகும் விலாவலி, ஜலதோஷம், குழந்தைகளுக்கு இதன் மூலமாக ஏற்படும் பசிமந்தம், காரணம் புரியாத அழுகை, உடலை முறுக்கி அழுதல், உடல் வலி போன்ற நிலைகளில் துளசிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுப்பதால் அதிசயத்தக்கப் பலனை உடன் துளசி உண்டாக்கி, ஆரோக்யத்தை மேம்படச் செய்கிறது.
இன்புளயன்ஸா, மலேரியா போன்றவற்றில் துளசியை போட்டு கொதிக்க வைத்த வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தச் செய்ய வேண்டும். துளசியை வெந்நீருடன் அரைத்து நெற்றியில் பற்று இடுவதால் தலைபாரம், தலைவலி ஆகியவை குறைந்துவிடும். துளசியின் மணம் அபாரமான மனத்தெம்பு அளிக்கிறது. உடல் பகுதிகள் அழுகல், கிருமிகள் ஆகியவற்றை துளசியின் உபயோகத்தின் மூலம் நீக்கலாம்.
உண்ட உணவு சரிவர ஜீரணமாகாமல் பதமழிந்து அதன் மூலம் ஏற்படும் குடல் கீரைப்பூச்சிகள் அனைத்தையும் துளசி அழிக்க வல்லது. உடலில் ஏற்படும்
தேமல், படை, எச்சில் தழும்பு, காணாக்கடி போன்றவற்றில் துளசியை அரைத்து பற்று இடுதல், சாறு அல்லது கஷாயமாக்கி குடிப்பதாலும் அவ்வகை நோய்கள் நீங்கிவிடும். துளசி சாறு அரை முதல் 2 ஸ்பூன் வரை குழந்தைகளுக்கும் கால் முதல் அரை அவுன்ஸ் பெரியவர்களும், சூர்ணம் 2-4 சிட்டிகை குழந்தைக்கும், அரை முதல் 1 அவுன்ஸ் பெரியவர்களும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
துளசியுடன் மிளகும் சேர்த்து சாப்பிட்டால் குளிர் ஜ்வரம், கடுப்பு, வலி, தலைகனம், மார்ச்சளி, முறை ஜ்வரம், யானைக்கால் ஜ்வரம் ஆகியவை நீங்கி விடும். ஜ்வரத்தின் ஆரம்பத்திலேயே துளசியும் மிளகும் சேர்த்துச் சாப்பிடுவதால் ஜ்வரம் மேலும் வளராமல் நின்று விடும். 10 துளசி இலைகளும் 5 மிளகுமே போதுமானது. ஜ்வரம் வந்துவிட்டால் துளசி மிளகும் சேர்த்து கஷாயம் காய்ச்சி தேன் சர்க்கரை கலந்து பருகுவதால் ஜ்வரம் தணிந்து விடும்.
துளசி, மிளகு, பழைய வெல்லம் ஆகியவற்றின் கூட்டு உபயோகம் மலேரியா, யானைக்கால் ஜ்வரம் ஆகியவற்றை வராமல் தடுக்கின்றன. மிளகை துளசி சாற்றில் 7 முதல் 21 நாட்கள் வரை ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, 5 முதல் 10 மிளகு வரை தூள் செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குளிர்ஜ்வரம், காணாக்கடி, முறை ஜ்வரம் ஆகியவை வராது.
துளசி, மிளகு, தும்பை இலை ஆகியவற்றை கஷாயம் செய்து பருகுவதால் குளிர்ஜ்வரம், வாயுவினால் ஏற்படும் குடைச்சல் நீங்கும். விஷஜ்வரமும் வராது. அஜீர்ணம், வாயுப்பொறுமல், வயறு உப்புசம், வலி, அஜீர்ணபேதி, கீரைப்பூச்சி, பூச்சிகளால் ஏற்படும் பேதி ஆகியவற்றில் துளசியுடன் ஓமம் சேர்த்து சாப்பிட அவை நீங்கி விடுகின்றன. துளசி, ஓமக்கஷாயம், ஓமத்தை துளசி சாற்றில் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து சாப்பிடலாம். துளசி, ஓமம் ஆகியவற்றை தண்ணீரில் அரைத்து, வடிகட்டி, தேன் சர்க்கரை கலந்தும் சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மார்ச்சளியில் துளசி, ஓமம், பழைய வெல்லத்தின் நித்திய உபயோகமும் அதுபோல வெற்றிலைச் சாறுடன் துளசி சாறும் கலந்து உபயோகபடுத்தினால் மெச்சத்தக்க பலனை தருகின்றன. சொத்தைப்பல், ஈறுகொழுத்து ஏற்படும் வேதனையில் துளசிச்சாறு, கிராம்புத்தூள், கற்பூரம் ஆகியவற்றை கலந்து உபயோகித்தல் மிகவும் நல்லது. துளசியை அரைத்து தோலில் பற்றிட காணாக்கடி மறைந்து விடும்.
பேன், அரிப்பு, படை, தேமல், வரட்டுசொரி போன்ற நோய்களில் துளசி சாறு, எலுமிச்சம் சாறு, கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து தலைக்குத் தேய்த்து வர விரைவில் குணமாகி விடும்.
கடுமையான தலைவலியில் கிராம்பு, சுக்கு, துளசி சாறு ஆகியவற்றை அரைத்து நெற்றியில் பற்றுப் போட உடன் தலைவலி நீங்கி விடும். மூக்கடைப்பு, மண்டையில் நீர் கோர்த்து ஏற்படும் நீர்க்கோர்வை, தலை குடைச்சல் ஆகியவற்றில் துளசியை தூள் செய்து மூக்குப் பொடியாக உபயோகிக்க நல்ல பலனைத் தரும்.
இப்படிப் பலவகைகளில் உபயோகமாகும் துளசியை அனைவரும் பயிறிட்டு அதன் பலனை முழுவதும் நாம் பெற முயற்சி செய்ய வேண்டும்.
Friday, June 13, 2008
கண்ணில் சிறந்த உறுப்பில்லை


''எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்" என்பது அன்றோர் வாக்கு. 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே" என்பதை தஞ்சை வாணன் கோவை. 'சமஸ்கிருத மொழியிலும், ஸர்யவஸ்ய காத் ரஸ்ய சிரஸ்ப்ரதாநம், ஸ்ர்வேந்திரியானாம் நயநம் ப்ரநாதம்" என்று இக் கருத்தே கூறப்படுகிறது. மக்களின் உடம்பிலுள்ள கருவிகளை இரண்டு வகையாகப் பிரிப்பர். ஒன்று அறிவுக்கருவி, மற்றொன்று தொழிற்கருவி, அறிவுக்கருவிகள் ஐந்து. தொழிற் கருவிகள் ஐந்து. ஊற்றுணர்வுள்ள உடம்பு, சுவையு ணர்வுள்ள நாக்கு, ஒளியுணர்வுள்ள கண் நாற்ற உணர்வுள்ள மூக்கு, ஒலியுணர்வுள்ள காது எனும் அறி வுக்கருவிகளான ஐம் பொறிகளும், அவற்றை உணர்ந்து செயற்படுத்தும் மூளையும் தலையில் இருக்கும் காரணம் பற்றியே ' எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்" என்றனர்.
இவ் ஐம்பெறிகளுள்ளும் கண் சிறந்த இடம் வகிக்கிறது. காரணம் மற்றய பொறிகள் தன்னிடம் வருவனவற்றை அறிந்து மூளைக்கு உணர்த்துவன. ஆனால் கண் மட்டுமே தொலைவிலுள்ள பொருளை யும் சென்றறிந்து அதனை மூளைக்கு உணர்த்தும் திறனுடையது. கண்ணைத் தவிர மற்றய பொறிகள் நினஇறு பற்றுவன. குணஇ மட்டுமே சென்று பற்றும் சிறப்புடையது. இச் சிறப்புக் கருதியே 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே!" என்று தஞ்சை வாணன் கோவையின் ஆசிரியர் பொய்யா மொழிப்புலவர் கூறினார்.
மன்னனே மக்களின் கண்:-
சேக்கிழாரும் மன்னனின் இலக்கணம் கூறவந்த இடத்து 'மண்ணில் வாழ்தரும் மன்னுயிர் கட்கெல்லாம் கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலன்"என்று மொழிகின்றார். மன்னனானவன் தன் நாட்டில் வாழும் உயிர்கட்கெல்லாம் உயிராக வாழ்பவன். தன்னிடம் குறைவேண்டியும், முறைவேண்டியும் வருவோர்க்கு ஆவன செய்வதோடல்லாது தானே பல இடங்களுக்கும் சென்று குறைகளையும், முறைகளையும் கண்டும் கேட்டும் அறிந்து அதற்குத் தக்க தீர் வு செய்யும் கட்டுப்பாடுடையவன் என்பது கருத்தாகும். உயிர் நின்று பற்றுவது, கண் சென்று பற்றுவது, மன்னன் உயிராக இருந்து ஒற்றர் வழி அறிந்துமூளையைப்போல் நின்றும் நீதி வழங்க வேண்டும். கண்ணாக இருந்து சென்று நீதி வழங்க வேண்டும் எனும் உட்கருத்தில் தான் சேக்கிழார் பெருமான் 'கண்ணும் ஆவியும் ஆம்பெரும் காவலன்" என்றருளிச் செய்கின்றார்.
இன்ப துன்பத்தை காட்டுவது கண்:-
மேலும் கண்ணிற்குப் பல சிறப்புக்கள் உண்டு. அறிதற் கருவியாக விளங்கும் கண் அறிவுக் கருவிகளிலும் தொழிற் கருவிகளாகிய கை, கால், வாக்கு, எருவாய், கருவாய் எனும் உடலுறுப்புக்களி லும் ஏதாவது நன்றோ தீதோ திகழுமாயின் அதனைப் புலப்படுத்துகின்ற நிலையில் இன்ப துன்பக் கண்ணீர் வடிப்பதும் அக் கண்ணின் சிறப்பாகும். மனிதனின் உள்ளத்திற்குள் நிகழும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் கருவியாக இலங்கும் சிறப்புடையது கண். ஒரு செயலை ஏற்று இசைவுதருவதும் புறக்கணிப்பதும் கண்ணின் புலப்பாட்டிலேயே அறிந்து கொள்ள இயலும். அத்தகைய சிறப்புடைய கண் திருடனைக் காட்டிக் கொடுக்கவும் ஒழுக்கம் இல்லாதவனை உலகுக்கு உணர்த்தவும் உரிய கருவியாக விளங்குகின்றது.
கற்பினைக் காட்டுவது கண் :-
இதனால்தான் சீதாபிராட்டியின் கற்புத்திறனை இராமபிரானுடன் கூறிவந்த அனுமான் ' கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்" என்று விளக்குகின்றான். சீதை உயிரோடுதான் இருக்கின்றார் பிறர் கூறக் கேட்டு வரவில்லை. நானே என் கண்களால் கண்டுவந்தேன். என்று அனுமான் கூறுகின்றார். என்பதாகப் பொருள் கூறலாம். ஆனால் அம்மையார் கற்போடுதான் இருக்கிறார் என்பதை எங்ஙனம் கூற முடியும் என்பதற்கு விளக்கம் கூறவே இத்தொடருக்கு இன்னும் ஆழமாகச் சிந்தித்துப் பொருள் விளக்கம் காணுதல் அவசியமாகின்றது. 'கண்டனன்" என்பதற்கு அனுமன் தான் தன் கண்களால் பார்த் தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் பார்த்தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் என்னும் சொல்லிற்குச் சீதையின் கண்களால் கற்பினுக் கணியாக இருப்பதைப் பார்த்தே ன் என்னும் பொருளும் கொள்ளுதல் ஒருவகை. மேலும் அனுமன் கண்களால் சீதாபிராட்டியை கண்டன ன் என்றும், சீதாபிராட்டியின் கண்களால் அவரது கற்புநெறி பிறளாது அணியாகத் திகழ்வதைக் கண்டனன் என்றும் கொள்ளுதல் சிறப்பாகும்.
எனவே கண்ணானது மற்றப் பொருள்களை அறிந்து மூளைக்கு உணர்த்துவதோடல்லாது கண்களையுடைய மனிதனின் உள்ள உணர்ச்சிகளைச் சமுதாயத்திற்கு உணர்த்தும் உயர் கருவியாக வும் விளங்குகின்றது.
காக்கவேண்டிய சிறப்பினது கண் :-
இத்தகைய சிறப்புக்கள் பலவுடைய கண்களைக் காண்பதற்கு இறைவனே தக்க பாதுகாப்பு கொடு த்திருக்கின்றார். கண்ணை இமை காப்பது போல் என்று உலகோர் கூறுவதும் ஈண்டு நினைவு கூரத்தக் கது. காக்கும் இமையை கொடுத்துக் காத்துக் கொள் என்று ஆண்டவனே அறிவுறுத்தியுள்ள கண்ணை இன்று பலர் பல காரணங்களினால் கெடுத்துக் கொள்கிறார்கள்.
கண்கெடுவதற்குரிய காரணங்கள் பலவாகும். பொதுவாக மனித வாழ்வில் ஒழுங்கு நெறிமுறைகள் கெடுமானால் அவை கண்களைப் பாதிக்கும். குறிப்பாக ஒழுக்கக் கேட்டினாலும், பொய் சொல்லுவதாலும், கோவப்படுவதாலும், திரைப்படம் தொலைக்காட்சி பார்ப்பதனாலும் கண் கெடும். மற்ற க் காரணங்கள் தெளிவாக விளங்கினாலும் பொய் சொல்வதினால் கண் பாதிக்கும் என்பது பலருக்குப் பரிவதில்லை. பொய் சொல்லுகின்ற போது அவனது மனம் அவனை உறுத்துகின்றது. அதனால் உடம்பிலுள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இவ் வகையில் கண் கெடுகின்றது.
சுந்தரர் வாழ்வில் கண் :-
பொச்சாட்சி சொன்னவர்களுக்கும் கண் தெரியாமல் போய்விடும். ஏனெனின்; 'சாட்சி" என்றாலேயே கண்ணால் கண்டதை கூறுதல் என்பது பொருளாகும். “சட்சு” என்னும் சொல்லுக்குக் கண் என்பது பொ ருளாகும். அதன் அடிப்படையில் வந்ததே “சாட்சி” என்னும் சொல். ஆதலின் சாட்சி சொல்லும் பொழுது தன் கண்களால் காணாத ஒன்றைக் கூறுவானேயானால் இது அவனது மனத்தை உறுத்திப் பின்னே தண்டனைக் குரியதாகிப் கண்களைப் பாதிக்கும். சபதம் பொயத்தாலும் கண் கெடும் என்பதற்கு நாம் ஆசாரிய மூhத்தியாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருள் வரலாற்றை இவ் வகையில் எடுத்துக் கொள்ள லாம். இது தவறுடையது எனினும் வாழ்விய நெறிமுறைகளை விளக்கிக் கொள்வதற்கும் கடவுளின் நடுநிலைத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கும் பயன்படும் என்ற வகையில் அடக்கத்தோடும் அச்சத் தோடும் அவ்வரலாற்றை சிந்திக்கலாம்.
எறும்புக்குக் கண் இல்லை :-
இதுவரை சிந்தித்த கருத்துக்களால் கண் கெடுவதற்குரிய காரணங்களை எண்ணியது போல இனிக் கண்ணைப் பாதுகாத்தற்குரிய சில வழிமுறைகளையும் சிந்திப்போம். கண் நன்கு தெரிவதற்குப் பொதுவாகக் கீரை வகைகளைக் குறிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. மேலும் அறநோக்குப்படி பார்த்தால் கண்பார்வை இல்லாத ஜீவராசிகளுக்கு உணவு அளித்தலும் கண்ணைக் காப்பாற்றும். உலக உயிர்களில் கண்பார்வையில்லாத உயிர் எறும்பாகும். தோல்காப்பியர் ஓரறிவுயிர், ஈரறிவுயிர் என்பது பற்றி ஒரு நூற்பாக் கூறுகின்றார்.
எறும்பு தின்றால் கண் தெரியும் :-
இத்தகைய கண் பார்வையில்லாத உயிருக்கு நெல் முதலிய தானியங்களைப் புற்றில் இடுதலும், வீடுகளின் முன்னர் அரிசி மாக்கோலம் போடுதலும், காரணமாக உணவுதரும் அறச்செயல்கள் நாட்டில் தொன்று தொட்டு நடைபெறுகின்றன. அரிசி மாக்கோலம் போடும் நிலையில் இப்பொழுது மாறுதலாகக் கல்லாலான மாவைக் கொண்டு கோலம் போடுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.அறத்தின் நோக்கத்திற்கே புறம்பானது ஆகும்.
இங்ஙனம் எறும்பு போன்ற கண்பார்வை இல்லாத உயிரினங்களக்கு உணவை இட்டால் கண்பார் வை நன்கு தெரியும் எனும் பொருளில் தான் உலக வழக்கில் 'எறும்பு தின்றால் கண் தெரியும்" என் னும் பழமொழி வழங்கி வருகிறது. ஆனால் இப் பழமொழியன் உண்மைப் பொருள் அறியாத சிலர் உணவுப் பண்டங்களில் எறும்பு இருந்தால் 'பரவாயில்லை சாப்பிடுங்கள் கண் தெரியும்" என்று மாற்றுப் பொருள் கூறி வருகின்றனர். இது தவறு. எறும்பு தின்றால் கண் தெரியும் என்றால் எறும்பு நாம் போடும் உணவைத் தின்றால் நமக்குக் கண் தெரியும் என்ற பொருளே தவிர எறும்பையே தின்றால் தின்பவருக் கு கண் தெரியும் என்பது பொருளில்லை. பழமொழிகளை விழங்கக் கற்றுக் கொண்ட மக்கள் அவற்றின் உண்மைப் பொருளையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
Tuesday, June 10, 2008
Monday, June 9, 2008
தாய்
இந்த உலகில் எந்தவொரு உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் ஆண், பெண் என இரண்டு வகை இருக்கும். ஆண், பெண் இருவருக்கும் ஒவ்வொரு காரியத்திலும் சமமான பொறுப்பு இருந்தாலும் தாயைப் பற்றித்தான் (பெண் இனத்தைத்தான்) அதிகமாக, விசேஷமாக, கௌரவமாக எல்லா அறநூல்களிலும் சொல்லப்படுகிறது. (நம்முடைய அறநூலான வேதத்தை எடுத்துக் கொண்டால் "வேத மாதா" என்றுதான் அதை நாம் கூறுகிறோம். அந்த வேதத்திலும் பல உபதேசங்கள் அருளியிருந்தாலும், முதன் முதலில் 'மாத்ருதேவோ பவ' என்று மாதாவை முதன்மையாகச் சொல்லிவிட்டு, அடுத்ததாகத்தான் 'பித்ரு தேவோ பவ' என்று தகப்பனாரைச் சொல்லுகிறது, தேவாரப்பாடல்களிலும் இறைவனைப்பற்றிப் பாடும் போது. அம்மையே. அப்பா. ஒப்பிலா மணியே என்று முதன்முதலில் அம்மாவைத்தான் குறிப்பிடுகிறது, அன்னையும். பிதாவும் முன்னறி தெய்வம் என்று அன்னையைத் தான் முதலில் குறிப்பிடுகிறது, 'தாயிற் சிறந்த தயாபரத் தத்துவனே' என்று சிவ புராணம் கூறுகிறது, தாயுமானவராக இறைவன் திருச்சியில் விளங்குகிறார்.
ஆணையிடும் போது கூடச் சிலர் தாயின் மேல் ஆணை என்றுதான் கூறுவார்கள், கெட்ட பிள்ளை இருப்பான், கெட்ட தாய் ஒரு நாளும் இருக்க மாட்டாள் என்பது பழமொழி, ராமர் காட்டுக்குப் போகும் போது தாயான கௌஸல்யை முதலியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றதாக வரலாறு, மகாபாரத்தைத் தொடங்கும் போது துரியோதனன் தன் தாயான காந்தாரியிடம் ஆசி பெற்று சென்றதாகவும் வரலாறு. பொதுவாக வீரர்கள் யுத்தத்திற்குச் செல்லும் போது ஆண்களுக்கு பெண்கள்தான் வீரத் திலகமிட்டு அனுப்புவார்கள். பெண் குழந்தையைத் தான் நாம் கன்னிகா பூஜை என்று பூஜை செய்கிறோம், வயதான பிறகு சுவாசினி பூஜை என்ற இல்லறத் தாய்க்குத்தான் பூஜை செய்கிறோம், இந்து மதத்தில் புருஷர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் பூர்த்தி அடைய வேண்டும் என்றால் கடைசியாக இல்லத்தரசிகள் ஜலத்தைப் புருஷன் கையில் விட்டால்தான் பூர்த்தியடைகிறது.
இந்தக் காலத்தில்தான் ஆண். பெண் இருவரும் சம்பாதிக்கிறார்கள் கொஞ்ச காலம் முன்பு வரை ஆண்கள் சம்பாதிப்பதற்கு மாத்திரம் உரிமையுள்ளவராகக், சம்பாதிக்கும் பணத்தை இல்லத்தரசிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகத்தான் வாழ்க்கைக்குத் தேவையான அவ்வளவும் வரவு. செலவு செய்யப்பட்டன. வீட்டிலுள்ள புருஷன் எவ்வளவோ தவறான வழிகளில் சென்றாலும், இல்லத்தரசிகள் பொறுமையுடன் இருந்து தங்களுக்கு என்று சொந்த எண்ணங்கள், ஆசைகள் இருந்தாலும் அவைகளைக் காட்டிலும் தன்னுடைய கணவனுடைய வாழ்க்கையே பெரிதென மதித்துக் கணவனை நல்வழிப்படுத்துவதில், கணவனைத் திருப்தி செய்விப்பதில். பல பெண்மணிகள் எடுத்துக்காட்டாக இருந்தார்கள்.
சைவ சமயத்தைச் சேர்ந்த அப்பர் பெருமான். ஒரு சமயத்தில் சமண சமயத்தைச் சார்ந்த பொழுது, திரும்பவும் தங்களுடைய சொந்த சமயமான சைவ சமயத்திற்கு அப்பர் பெருமானைக் கொண்டு வருவதற்காக இறைவனிடம் பலவித
பிரார்த்தனைகளெல்லாம் செய்து- தவமிருந்து சோதனைகள் எல்லாம் கடந்து, தம்முடைய சொந்தச் சகோதரரான அப்பர் பெருமானைச் சைவ சமயத்திற்குத் திருப்பிய பெருமை, அவரது சகோதரியான திலகவதியாரையே சாரும்.
இதே போல் மதுரையில் கூன்பாண்டியன் சொந்த சமயமான சைவ சமயத்தை விட்டுச் சமண சமயத்திற்குச் சென்ற போது ரகசியமாகவும். பக்தியோடும் உறுதியோடும் தன் கணவனுக்காக இறைவனைப் பிரார்த்தனை செய்து, தவமிருந்து தன்னுடைய சொந்த சமயமான சைவ சமயத்திற்குத் திருப்பிக் கொண்டு வந்தது, கூன்பாண்டியனின் இல்லத்தரசியான மங்கயைர்க்கரசியாரே ஆகும்.

ஒரு சமயம் காரைக்கால் அம்மையாரிடம் அவரது கணவன் இரண்டு உயர்ந்த மாங்கனிகளைக் கொடுத்தனுப்ப அவைகளிலே ஒன்றை அம்மையார் வீட்டீற்கு வந்த விருந்தாளிக்குக் கொடுக்.க மற்றொரு கனியை. சாப்பிடும் சமயத்தில் தன் கணவனுக்குக் கொடுத்தாள். அந்த மாங்கனியின் சுவையை அனுபவித்த அவள் கணவன் மற்றோரு மாங்கனியையும் கேட்டான். அப்பொழுது காரைக்கால் அம்மையார் மிகவும் பயந்து போய்க் கணவன் கேட்பதைக் கொடுக்க முடியாமல் இருக்கிறதே என வருந்தி, எப்படியும் கணவனின் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என இறைவனிடம் கெஞ்சிப் பிரார்த்தித்தாள். இறைவனும் காரைக்கால் அம்மையாருக்கு கணவனிடம் உள்ள பக்தியும், மரியாதையும், இறைவனிடமுள்ள நம்பிக்கையும் பார்த்துப் பூரித்து ஓர் மாங்கனியை அளித்தார். அந்த மாங்கைனியைப் பெற்ற காரைக்கால் அம்மையார். அதைக்கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வணங்கி. கணவனது இஷ்டத்தை மாங்கனி கொடுப்பது மூலம் நிறைவேற்றினாள்.
அப்பொழுது கணவன் "முன்பு சாப்பிட்ட பழத்தைக் காட்டிலும் இது வேறாகவும் அதிக ருசியுள்ளதாகவும் இருக்கிறதே. இது எப்படி வந்தது?" என்று கேட்டான். அப்பொழுது காரைக்கால் அம்மையார் "தாங்கள் அனுப்பிய பழத்தில் ஒன்றை விருந்தாளிக்குக் கொடுத்தேன். தாங்கள் மற்றுமொரு பழம் கேட்டதும் இறைவனிடம் பக்தி செய்து மனமுருகி இறைவன் மூலம் பெற்றேன். ஆகவே இது வேறு கனியாகவும், அதிக ருசியுள்ளதாகவும் இருக்கிறது" என உண்மை நிலையை விளக்கினார். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில் கூடக் கணவன் மனைவியரிடையே புரிந்து கொள்ளும் தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வரவேண்டும். மனைவி கணவனுக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் பக்தியையும், மன உறுதியையும் கொள்ள வேண்டும், உயர்ந்த தாய் ஸ்தானத்தில் பெண்மணிகள் அன்றும், இன்றும், என்றும் போற்றும் வகையிலே விளங்கி வருகிறார்கள்.
ஆணையிடும் போது கூடச் சிலர் தாயின் மேல் ஆணை என்றுதான் கூறுவார்கள், கெட்ட பிள்ளை இருப்பான், கெட்ட தாய் ஒரு நாளும் இருக்க மாட்டாள் என்பது பழமொழி, ராமர் காட்டுக்குப் போகும் போது தாயான கௌஸல்யை முதலியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றதாக வரலாறு, மகாபாரத்தைத் தொடங்கும் போது துரியோதனன் தன் தாயான காந்தாரியிடம் ஆசி பெற்று சென்றதாகவும் வரலாறு. பொதுவாக வீரர்கள் யுத்தத்திற்குச் செல்லும் போது ஆண்களுக்கு பெண்கள்தான் வீரத் திலகமிட்டு அனுப்புவார்கள். பெண் குழந்தையைத் தான் நாம் கன்னிகா பூஜை என்று பூஜை செய்கிறோம், வயதான பிறகு சுவாசினி பூஜை என்ற இல்லறத் தாய்க்குத்தான் பூஜை செய்கிறோம், இந்து மதத்தில் புருஷர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் பூர்த்தி அடைய வேண்டும் என்றால் கடைசியாக இல்லத்தரசிகள் ஜலத்தைப் புருஷன் கையில் விட்டால்தான் பூர்த்தியடைகிறது.
இந்தக் காலத்தில்தான் ஆண். பெண் இருவரும் சம்பாதிக்கிறார்கள் கொஞ்ச காலம் முன்பு வரை ஆண்கள் சம்பாதிப்பதற்கு மாத்திரம் உரிமையுள்ளவராகக், சம்பாதிக்கும் பணத்தை இல்லத்தரசிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகத்தான் வாழ்க்கைக்குத் தேவையான அவ்வளவும் வரவு. செலவு செய்யப்பட்டன. வீட்டிலுள்ள புருஷன் எவ்வளவோ தவறான வழிகளில் சென்றாலும், இல்லத்தரசிகள் பொறுமையுடன் இருந்து தங்களுக்கு என்று சொந்த எண்ணங்கள், ஆசைகள் இருந்தாலும் அவைகளைக் காட்டிலும் தன்னுடைய கணவனுடைய வாழ்க்கையே பெரிதென மதித்துக் கணவனை நல்வழிப்படுத்துவதில், கணவனைத் திருப்தி செய்விப்பதில். பல பெண்மணிகள் எடுத்துக்காட்டாக இருந்தார்கள்.
சைவ சமயத்தைச் சேர்ந்த அப்பர் பெருமான். ஒரு சமயத்தில் சமண சமயத்தைச் சார்ந்த பொழுது, திரும்பவும் தங்களுடைய சொந்த சமயமான சைவ சமயத்திற்கு அப்பர் பெருமானைக் கொண்டு வருவதற்காக இறைவனிடம் பலவித
பிரார்த்தனைகளெல்லாம் செய்து- தவமிருந்து சோதனைகள் எல்லாம் கடந்து, தம்முடைய சொந்தச் சகோதரரான அப்பர் பெருமானைச் சைவ சமயத்திற்குத் திருப்பிய பெருமை, அவரது சகோதரியான திலகவதியாரையே சாரும்.
இதே போல் மதுரையில் கூன்பாண்டியன் சொந்த சமயமான சைவ சமயத்தை விட்டுச் சமண சமயத்திற்குச் சென்ற போது ரகசியமாகவும். பக்தியோடும் உறுதியோடும் தன் கணவனுக்காக இறைவனைப் பிரார்த்தனை செய்து, தவமிருந்து தன்னுடைய சொந்த சமயமான சைவ சமயத்திற்குத் திருப்பிக் கொண்டு வந்தது, கூன்பாண்டியனின் இல்லத்தரசியான மங்கயைர்க்கரசியாரே ஆகும்.

ஒரு சமயம் காரைக்கால் அம்மையாரிடம் அவரது கணவன் இரண்டு உயர்ந்த மாங்கனிகளைக் கொடுத்தனுப்ப அவைகளிலே ஒன்றை அம்மையார் வீட்டீற்கு வந்த விருந்தாளிக்குக் கொடுக்.க மற்றொரு கனியை. சாப்பிடும் சமயத்தில் தன் கணவனுக்குக் கொடுத்தாள். அந்த மாங்கனியின் சுவையை அனுபவித்த அவள் கணவன் மற்றோரு மாங்கனியையும் கேட்டான். அப்பொழுது காரைக்கால் அம்மையார் மிகவும் பயந்து போய்க் கணவன் கேட்பதைக் கொடுக்க முடியாமல் இருக்கிறதே என வருந்தி, எப்படியும் கணவனின் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என இறைவனிடம் கெஞ்சிப் பிரார்த்தித்தாள். இறைவனும் காரைக்கால் அம்மையாருக்கு கணவனிடம் உள்ள பக்தியும், மரியாதையும், இறைவனிடமுள்ள நம்பிக்கையும் பார்த்துப் பூரித்து ஓர் மாங்கனியை அளித்தார். அந்த மாங்கைனியைப் பெற்ற காரைக்கால் அம்மையார். அதைக்கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வணங்கி. கணவனது இஷ்டத்தை மாங்கனி கொடுப்பது மூலம் நிறைவேற்றினாள்.
அப்பொழுது கணவன் "முன்பு சாப்பிட்ட பழத்தைக் காட்டிலும் இது வேறாகவும் அதிக ருசியுள்ளதாகவும் இருக்கிறதே. இது எப்படி வந்தது?" என்று கேட்டான். அப்பொழுது காரைக்கால் அம்மையார் "தாங்கள் அனுப்பிய பழத்தில் ஒன்றை விருந்தாளிக்குக் கொடுத்தேன். தாங்கள் மற்றுமொரு பழம் கேட்டதும் இறைவனிடம் பக்தி செய்து மனமுருகி இறைவன் மூலம் பெற்றேன். ஆகவே இது வேறு கனியாகவும், அதிக ருசியுள்ளதாகவும் இருக்கிறது" என உண்மை நிலையை விளக்கினார். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில் கூடக் கணவன் மனைவியரிடையே புரிந்து கொள்ளும் தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வரவேண்டும். மனைவி கணவனுக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் பக்தியையும், மன உறுதியையும் கொள்ள வேண்டும், உயர்ந்த தாய் ஸ்தானத்தில் பெண்மணிகள் அன்றும், இன்றும், என்றும் போற்றும் வகையிலே விளங்கி வருகிறார்கள்.
Tuesday, March 18, 2008
முருகன்
இறைவன் ஞான வடிவினன். ஞான பண்டிதன் சக்தியின் துணைகொண்டு உலகைப் படைத்துக் காத்து ரட்சிக்கின்றான். அதைவிளக்கும் சொருபமே முருகன். முருகன் ஞான சொருபம். வள்ளி இச்சா சக்தி (விருப்பம், ஆசை). தெய்வானை கிரியா சக்தி (செயலாற்றல்). வள்ளித் திருமணத்தில் சிறந்த தத்துவம் அடங்கியுள்ளது. இறைவன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன். இறைவன் சாதி வித்தியாசங்களைப் பார்ப்பதில்லை. ஆகவே இந்து சமயம் சாதி வித்தியாசக் கொள்கையை ஆதாரிக்கவில்லை என்பதை வள்ளித்திருமணம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் வள்ளித்திருமணம் வள்ளியாகிய சீவன், போரின்பமாகிய சிவத்துடன் கலப்பதை விளக்குகிறது.
முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இக பர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்க வேண்டும். அவ்வறிவைத் தருபவன் .. வாலறிவனாகிய .. இறைவனே.
இதையே திருவள்ளுவர் ..
'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"
... என்கிறார்.
முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும்.
கூவுகின்ற கோழி நாத வடிவானது. கோழிக்கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன். மயில் மனத்தின் சின்னம். பாரிசுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது.
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன். ஆகவே அவனை வைத்தியநாதன் என்றும் வாழ்த்துகின்றோம். கிடைக்காத பொருட்களையும், பேறுகளையும் வேண்டும் பக்தர்களுக்கு வழங்குகின்றவனாதலால் வரதராசன் என்றும் பெயர் பெற்றவன் முருகன்.
முருகன் மூன்று அசுரர்களை அழிக்கின்றார் என்று கந்த புராணத்தில் கூறப்படுகின்றது. மனிதனின் மனத்தை வாட்டுகின்ற ஆணவம், மலம், மாயை .. எனப்படும் மூன்று மலங்களே அந்த அசுரர்கள். நமது மனதிலே தோன்றி, நம்முடைய மனதிலே இருக்கின்ற நல்ல எண்ணங்களை வளர்த்து, தீய எண்ணங்களை வென்று, சிறப்பாக வாழ முயற்சிக்கின்றான். அதற்காக இறைவனை வணங்குகின்றான். கந்தர் சஷ்டி விரதம் அனுஷ்டிப்பதும் மனதைக் கட்டுப்படுத்தி நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளும் பொருட்டே.
முருகனின் சிறப்புக்களை புகழ்ந்து பாடி அவனருளைப்பெற அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை .. முதலிய பாடல்களில் சிலவற்றையாவது பாராயணம் செய்தல் நலந்தரும்.
'ஆறுதலை முருகன் ஆறுதலைத் தருவான்."
முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இக பர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்க வேண்டும். அவ்வறிவைத் தருபவன் .. வாலறிவனாகிய .. இறைவனே.
இதையே திருவள்ளுவர் ..
'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"
... என்கிறார்.
முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும்.
கூவுகின்ற கோழி நாத வடிவானது. கோழிக்கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன். மயில் மனத்தின் சின்னம். பாரிசுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது.
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன். ஆகவே அவனை வைத்தியநாதன் என்றும் வாழ்த்துகின்றோம். கிடைக்காத பொருட்களையும், பேறுகளையும் வேண்டும் பக்தர்களுக்கு வழங்குகின்றவனாதலால் வரதராசன் என்றும் பெயர் பெற்றவன் முருகன்.
முருகன் மூன்று அசுரர்களை அழிக்கின்றார் என்று கந்த புராணத்தில் கூறப்படுகின்றது. மனிதனின் மனத்தை வாட்டுகின்ற ஆணவம், மலம், மாயை .. எனப்படும் மூன்று மலங்களே அந்த அசுரர்கள். நமது மனதிலே தோன்றி, நம்முடைய மனதிலே இருக்கின்ற நல்ல எண்ணங்களை வளர்த்து, தீய எண்ணங்களை வென்று, சிறப்பாக வாழ முயற்சிக்கின்றான். அதற்காக இறைவனை வணங்குகின்றான். கந்தர் சஷ்டி விரதம் அனுஷ்டிப்பதும் மனதைக் கட்டுப்படுத்தி நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளும் பொருட்டே.
முருகனின் சிறப்புக்களை புகழ்ந்து பாடி அவனருளைப்பெற அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை .. முதலிய பாடல்களில் சிலவற்றையாவது பாராயணம் செய்தல் நலந்தரும்.
'ஆறுதலை முருகன் ஆறுதலைத் தருவான்."
பக்நாங் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம்
ஆலயம். ஆ! இந்த லயம்தான் எம் இதயத்தைக்கூட இதமாக இயங்க வைக்கிறது. இந்த லயத்தை அழகு என்றும் கொள்ளலாம், ஒழுங்கென்றும் ஒழுகலாம். உலகில் உறவுகள் எத்தனை இருந்தாலும் இனிய உறவு தாயுறவே.அழகிய உறவும் அதுதான். முதுமை எட்டாத புதுமை உறவு. எனவேதான் தெய்வதரி சனங்களிலும் அப்பாள் தரிசனம் ஒரு தாயும் சேயும் சந்திக்கும் ஒரு இன்ப தரிசனத்திற்கு ஒப்பாகிறது.பக்நாங் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம் அடியவர்கள் கேட்கும் நல்வரங்களை நல்கி பக்தர்கள் உள்ளத்தில் ஆட்சி புரிகின்றாள் மீனாட்சியாக.இந்த ஆலயம் 1994ம் ஆண்டு பங்குனி உத்தரத்தில் சிவாய சுப்பிரமணிய சுவாமிகளது ஆசியுடன் ஆரம்பிக்கப் பட்டது. யேர்மனி நாட்டில் சுற்காட் நகரில் பக்நாங் கிராமத்தில் அமைந்தள்ளது.81 பெரும் தெரிவில் ஸ்ருட்காட்டை நோக்கிச் செல்கையில். அல்லது கல்புறோன் நோக்கிச் செல்கையில் 13வது வெளியேற்றுப் பாதையில் இறக்கி 16கி.மீ வரை செல்ல, அம்பாள் காட்சி தருவாள். போகும் பாதை இருமருங்கிலும் களனிகள். கிராமத்தின் வனப்புள் சென்று, அம்பாளின் வதனத்ததைத் தரிக்கலாம். அம்மனுக்குரிய விஷேட தினங்கள் முறையாக பூஜிக்கப்படுகின்றன. வருடம் தோறும் கௌரிக்காப்பு விரதம் மிகவும் அற்புதமாக நடைபெற்றுவருகின்றது.பக்தர்கள் மெய்மறந்து வணங்குவதும், ஆனந்தக் கண்ணீர் பொழிவதும், பக்தர்களின் வேண்டுதலுக்கு அருள் கொடுக்கும், அம்மனின் தரிசனத்தை பெற்றதாகவே கொள்ளவேண்டும்.அம்பாள் அலங்கரியாக,அகம்பாவம் ஒழித்து, பூமணம் கமழ அழகுத்தேவதையாக, அருள் வடிவாக உள் வீதியை வலம் வரும்போது உள்ளம் மெய்மறக்கும். எங்கள் தேவைகளை தாயிடம் முறையிடுவதுபோல் இந்தத்தாயிடம் கேட்டு வந்தால், நின்மதி கிட்டும.; ஆனந்தப்பெருவாழ்வு மலரும். .
Sri Meenadchi Temple e.v
Eberhard Str.8
71522 Backnang Germany
Tel:07191/88627-Handy:0179 799 6052
Sri Meenadchi Temple e.v
Eberhard Str.8
71522 Backnang Germany
Tel:07191/88627-Handy:0179 799 6052
மஞ்சள் குங்கும மகிமை
நம் பண்பாட்டில் மஞ்சள் ஒரு மங்கலகரமான பொருள். எல்லா முக்கிய விழாக்களிலும் மஞ்சள் இடம் பெறும்.அந்தக் காலத்தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது சிறுவர் முதல் பெரியவர் வரை மேற்கொள்ளும் வழக்கத்தில் இருந்தது .பூப்பு நன்னீராட்டு விழா திருமணச்சடங்கு புதுமனை புகுவிழா ஆகிய மங்கள நிகழ்ச்சிகளில் மஞ்சள் கரைத்து தெளிக்கப்படுகிறது. மஞ்சளில் தண்ணீர் சேர்த்து இறுக்கமாக பிள்ளையார் பிடித்து வழிபடுகிறோம். இப்படியாக மஞ்சள் பலவிதத்திலும் நம் பண்பாட்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சளின் தாவரவியல் பெயர் உரஉஅயடழபெய .மஞ்சள் ஒரு கிழங்கு! இதன் முக்கியமான தன்மை கிருமி அழிப்பு சக்தி. எத்தகைய கிருமிகளையும் அழிக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதன் காரணமாகவே பலவகை புண்கள் மீது மஞ்சள் வேப்பிலை கலந்து பற்றுப் போடும் நாட்டு வைத்தியம் இருக்கிறது.மேலும் மஞ்சளை பூசி குளிப்பதால் தோல் மினுமினுப்பாகும் பருக்கள் வராது தேவையற்ற ரோமம் வளராது என்னும் அனுபவ நன்மைகளும் உண்டு.
இந்த மஞ்சள் பற்றி நம் முன்னோர்கள் அன்றே அறிந்திருந்த உண்மைகளை நவீன உலகின் ஐரோப்பியரும் அமெரிக்கரும் அண்மையில் தான் அறிந்துள்ளார்கள்.அமெரிக்க சுகாதார அறநிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி பண்டாரு ரெட்டி என்பவர் இது பற்றி ஆய்வு நடாத்தி சமயலில் பயண்படும் மஞ்சள் தூளில் கர்கியுமின் எனும் வேதவியல் கலவை உள்ளது, அது பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது என்று கண்டறிந்துள்ளார்.
குங்குமம்
மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது .தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிகிறார்கள் நெற்றியில் புருவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும் .நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது. இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.
நெற்றியின் புருவ மத்திக்கு நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக piநெயட படயனெ எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது. இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள். இதனை நெற்றிக்கண் எனலாம். இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவதும் இப்பகுதியாகும். தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும். யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும். ஞானக் கண் என்றம் அழைக்கப்படும். அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.
அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டனர். இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.
குங்கமத்தை ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது .இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.
நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஸ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும். ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.
மின்கடத்தும் தன்மை நமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். வேப்பிலை, மாவிலை, துளசி, எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடுதான் உபயோகிக்கிறார்கள். அதுமட்டுமல்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன்.
ஆர்த்தி
மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து அந்த மஞ்சள் கரைசலில் கொஞ்சம் சுண்ணாம்பை கலந்தால் அது சிவப்பு நிறமாக மாறும். அதுவே ஆர்த்தியாகும். இவ்வாறு கரைத்த ஆர்த்தியை அகன்ற தாம்பாளத்தில் ஊற்றி அதனை புதுமணமக்களின் முகத்துக்கெதிரே அல்லது புது வீட்டின் வாசல்படி முன்பு அல்லது மங்கள நிகழ்ச்சியின் முக்கிய நபரின் முன்பு காட்டி தட்டை மூன்று முறை சுற்றி பின் ஆர்த்தி நீரை வீட்டுக்கு வெளியே ஊற்றி விடுவார்கள். இந்த செயல்பாட்டில் பல அறிவியல் காரணங்கள் அடங்கியுள்ளன.
1.மஞ்சள் ஒரு கிருமிநாசினி.2.ஒளியுடல் மீது பாதிப்பு.3.மின் காந்த சக்தியலைகள் சீரமைப்பு.
சந்தனம்
குங்குமம் போலவே சந்தனமும் சக்தி வாய்ந்தது. கோயில்களில் திருநீற்றோடு குழைத்த சந்தனத்தையும் குங்குமத்தையும் கொடுப்பார்கள். திருநீறு பூசி சந்தனம் இட்டு அதன் மேல் குங்குமத்தை வைப்பது நம் வழக்கம்.
சந்தன மரத்தில் இருந்து கிடைக்கும் சந்தன கட்டையை அரைத்து சந்தனம் தயாரிக்கப்படுகிறது. சந்தனம் அணிவதால் தெய்வீக உணர்வு மேம்பட்டு நினைத்ததை நிறைவேற்றும் மந்திர சக்தி அதிகரிக்கும். மேலும் சந்தனம் தோலுக்கு மிகவும் நல்லது .சுத்தமான சந்தன தூளையும் கொஞ்சம் மஞ்சளையும் தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி வைத்து காய்ந்த பின் முகத்தை கழுவினால் முகத்தோல் புதுப் பொலிவு பெறும்.
இந்த மஞ்சள் பற்றி நம் முன்னோர்கள் அன்றே அறிந்திருந்த உண்மைகளை நவீன உலகின் ஐரோப்பியரும் அமெரிக்கரும் அண்மையில் தான் அறிந்துள்ளார்கள்.அமெரிக்க சுகாதார அறநிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி பண்டாரு ரெட்டி என்பவர் இது பற்றி ஆய்வு நடாத்தி சமயலில் பயண்படும் மஞ்சள் தூளில் கர்கியுமின் எனும் வேதவியல் கலவை உள்ளது, அது பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது என்று கண்டறிந்துள்ளார்.
குங்குமம்
மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது .தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிகிறார்கள் நெற்றியில் புருவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும் .நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது. இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.
நெற்றியின் புருவ மத்திக்கு நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக piநெயட படயனெ எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது. இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள். இதனை நெற்றிக்கண் எனலாம். இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவதும் இப்பகுதியாகும். தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும். யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும். ஞானக் கண் என்றம் அழைக்கப்படும். அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.
அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டனர். இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.
குங்கமத்தை ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது .இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.
நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஸ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும். ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.
மின்கடத்தும் தன்மை நமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். வேப்பிலை, மாவிலை, துளசி, எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடுதான் உபயோகிக்கிறார்கள். அதுமட்டுமல்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன்.
ஆர்த்தி
மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து அந்த மஞ்சள் கரைசலில் கொஞ்சம் சுண்ணாம்பை கலந்தால் அது சிவப்பு நிறமாக மாறும். அதுவே ஆர்த்தியாகும். இவ்வாறு கரைத்த ஆர்த்தியை அகன்ற தாம்பாளத்தில் ஊற்றி அதனை புதுமணமக்களின் முகத்துக்கெதிரே அல்லது புது வீட்டின் வாசல்படி முன்பு அல்லது மங்கள நிகழ்ச்சியின் முக்கிய நபரின் முன்பு காட்டி தட்டை மூன்று முறை சுற்றி பின் ஆர்த்தி நீரை வீட்டுக்கு வெளியே ஊற்றி விடுவார்கள். இந்த செயல்பாட்டில் பல அறிவியல் காரணங்கள் அடங்கியுள்ளன.
1.மஞ்சள் ஒரு கிருமிநாசினி.2.ஒளியுடல் மீது பாதிப்பு.3.மின் காந்த சக்தியலைகள் சீரமைப்பு.
சந்தனம்
குங்குமம் போலவே சந்தனமும் சக்தி வாய்ந்தது. கோயில்களில் திருநீற்றோடு குழைத்த சந்தனத்தையும் குங்குமத்தையும் கொடுப்பார்கள். திருநீறு பூசி சந்தனம் இட்டு அதன் மேல் குங்குமத்தை வைப்பது நம் வழக்கம்.
சந்தன மரத்தில் இருந்து கிடைக்கும் சந்தன கட்டையை அரைத்து சந்தனம் தயாரிக்கப்படுகிறது. சந்தனம் அணிவதால் தெய்வீக உணர்வு மேம்பட்டு நினைத்ததை நிறைவேற்றும் மந்திர சக்தி அதிகரிக்கும். மேலும் சந்தனம் தோலுக்கு மிகவும் நல்லது .சுத்தமான சந்தன தூளையும் கொஞ்சம் மஞ்சளையும் தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி வைத்து காய்ந்த பின் முகத்தை கழுவினால் முகத்தோல் புதுப் பொலிவு பெறும்.
Sunday, March 16, 2008
இல்லறத்தில் ஆன்மீகம்
இறையுணர்வு என்பதே அன்புவுணர்வுதான். அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்.அன்பு என்பது கடவுளிடம் மட்டும் அன்றி கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும். அருள் நெறி என்பது அன்பு நெறியின் நீடிய தோன்றமாகும்.
எனவேதான் அருள் என்னும் அன்பு ஈன்று குழுவி என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துது இறைவனுக்கு ஆற்றும் தொண்டிற்கு சமமாகும். உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும். அருள் நெறி என்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமய வாழ்வு வாழ்கிறோம் எனில் அது சமுதாய வாழ்வுடன் இணைந்ததாக அமையவேண்டும். இந்த வகையில் இல்லறத்தில் என்றும் இறைவனை அடையலாம் என்பதை இந்து சமயம் காட்டுகிறது.
இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை- என்கிறார் வள்ளுவர்
இல்வாழ்க்கையின் பண்பு அன்புடமை. பயன் அறனுடையமையாகும். மனைவி சுற்றம் என்று வி¡¢யும் அன்பிலே வாழும் ஒருவன் உலகனைத்தின் பாலும் வி¡¢ந்த அன்பு பூணும் மனப்பக்குவம் அடைகிறான். மனைவியும் அதே அன்புசால் மனப்பக்குவம் அடைகிறாள்.உலகனைத்தையும் அன்புக்கண்களிலே காணும் இந்த வி¡¢ந்த மனோபக்குவம் அடைய இல்லறம் வழிகாட்டுகிறது. அன்பும், அறனும் இல்வாழ்க்கையினை சிறப்பாக்குகிறது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் -வள்ளுவர்.
இல்லறம் நடத்தியே இறைவனை அடைந்தாகச் சொல்லப்படும் நாயன்மார்களுடைய கதைகளிலும், ழ்வார் கதைகளிலும் தனை நாம் அறியலாம்.
"காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றிஓடே எடுத்தென்ன? உள்ளன்பில்லாதவர் ஓங்கு செல்லநாடேயிடை மருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர் பால்வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுமே"
இங்கு இல்லறத்தானும் வீடுபேறு பெறமுடியுமென கூறப்படுகிறது.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்ததை ஒழித்துவிடின் -
இதைதான் சமயம் கூறுகிறது. உனக்கிட்ட கடமைகளை ஒழுங்காக செய். அதுவே உன்னை உயர்நிலையை அடையும் தகுதியை வளர்த்துக் கொடுக்கும்.
இந்து தர்மத்தின் முக்கிய நூலாக போற்றப்படுவது பகவத்கீதை. இந்த கீதையை உபதேசித்தவனும் கேட்டவனும் சந்யாசிகள் அல்லர். குடும்பவாழ்விலிருந்தோர்,மன்னாளும் மன்னர்கள்.
கீதையிலே பரமாத்மா கிருஷ்ணன் சொல்கிறான் :
"அர்சுனா, மூன்று உலகங்களிலும் இனி மிஞ்சிற்கும் செயல்,செய்கை ஒன்றும் எனக்குக் கிடையாது. அடையத்தக்கது, அடையப்படாது என ஒரு பேறுமில்லை.எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் தொழில்செய்யாது வாளாவிருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும், என் வழியையே பின் பற்றும்.அதனால் இந்த உலகம் அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஓயாமல் தொழில் செய்பவன் சிறந்த கர்மயோகி. அவன் ஜிவாத்மாவை இடைவிடாது துதிக்கிறான். சம்சாரத்தை நேசிக்கிறான். குடும்பத்தை காக்கிறான். மனைவி, மக்களை காக்கிறான்.சுற்றதாத்தாரை, அயலவரை போற்றுகிறான். எல்லாவற்றையும் துறந்து சென்றால் அவன் முத்திக்கு தகுதியுடைவனாக மாட்டான். எல்லாவற்றையும் துறந்து செல்கிறவன் கடவுளுடைய இயற்கை விதிகளை துறந்து செல்பவனாகிறான்...
இவ்வாறு நாம் பாக்கும் போது இல்வாழ்க்கையில் முற்று முழுதாக விடின் இறைவனை அடையலாமா? என்ற கேள்வி எழும். வாழ்வில் பற்றை விலக்க வேண்டுமே ஒழிய வேண்டியதில்லை. 'படகு தண்ணீரில் இருக்கலாம். தண்ணீர் படகினுள் இருக்ககூடாது'என்று அருமையாக வழிகாட்டுகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
இல்லறத்துறவை காட்டிலும், உள்ளத்துறவு சதகோடி மடங்கு மேலானதாகும்.இல்லாள் அகத்திருக்க இல்லாததது ஒன்றில்லை. கற்புடைய மனைவியைகாதலுற்று, அறம்பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கைகையாகும்.கடவுள் அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு உற்றார்,உறவினர், உலகத்தாருக்கும் உபசாரம் செய்து கொண்டு அறவழியில் இன்பங்களை அனுபவித்து ஆண்டவனை தொழுது அதனால் மனிதத் துன்பங்களில் இருந்து விடுபட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வது மேலான வழியாகும்.
இதனை வள்ளுவப் பெருந்தகை அன்புடைமை, வாழ்க்கை துணைநலம், புதல்வரைப் பெறுதல், விருந்தோம்பல், இனியவை கூறல் என்ற அதிகாரங்களில் வாழ்வின் ஆன்மீக வழிகாட்டியில் காணலாம்.
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்போ ஓய்ப் பெறுவதெவன் "
இல்லறத்தினை ஒழுங்காக நடத்துபவன் துறவறத்திற்கு போய் பயன் ஒன்றுமில்லை.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் முயல்வாருள் எல்லாம் தலை"
இல்லறத்தை சாரியாக நடத்துகிறவன் புலன்களை அடக்கி முயல்கிற எல்லாரினும் தலை சிறந்தவன்.
"அற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து"
சாரியான முறையில் இல்லறம் நடத்துகிறவன் , துறவறத்தானை விட பொறுப்புகளும் சகிப்புகளும் உள்ளவன். இல்லறத்தான் பிறருக்குக்குற்ற துன்பங்களையும் தனக்கு வந்தது போல் எண்ணி அதை நோக்கும் பொறுப்புடையவனாகிறான்.
"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அ•தும்பிறன் பழிப்ப தில்லாயின் நன்று"
மனிதனுக்கு அறம் என்று நூல்களால் தீர்மானிக்கப்பட்டதே இல்லறம் ஆகவே, இல்லறத்தை சாரியாக நடாத்துகிறவன் வானுறையும் தெய்வதுள்வைக்கப்படுவான்.
எதனைத்தைப் பற்றி ஆராய்ச்சி இல்லாமலே கர்ம ஒழுக்கங்ளினால்இல்லறத்தில் நின்று வீடுபேறு அடைய முடியும். இல்லறம் பொறுப்புகளும்,சகிப்புத் தன்மையும் உடையது. இல்லறத்தை நாம் கர்மயோகமாக கருதினால் அதுவே சமுதாயத்துக்கு பயனுள்ளது.
பொரியபுராண வரலாறு மூலம் "அடியார்கள் இல்லறத்தை நடத்தி இறைவனை அடைந்ததைக் காணலாம்."இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணக் கடை"
என்பதற்கேற்ப நன் மனைவியைப் பெற்ற இளையான் குடிமாற நாயனார், இல்லறத்தில் அன்று வறுமை வந்துற்றபோதும் , காரைக்காலம்மையால் வரலாறும் இல்லறத்தில் நின்று கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து போ¢ன்ப பெருவாழ்வு பெற்றதை அறியலாம்.இல்லற வாழ்விலே தர்மத் தளத்தில் நின்று செய்யும் கடமைகள் ஆன்மீக உணர்விற்குவழிவகுக்கும் என்பதை அறியலாம்.
ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் எனில் அது மக்கள் வாழ்க்கை நலத்துடன் இணைந்ததா¡க இருக்க வேண்டும். அவ்வாறு அமைவதற்கு இல்லறம் சிறந்த வழியாகும். இந்துமத தத்துவக் கருத்துக்கள் மூலமும் இவற்றை நாம் உய்த்துணரலாம்.
எனவேதான் அருள் என்னும் அன்பு ஈன்று குழுவி என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துது இறைவனுக்கு ஆற்றும் தொண்டிற்கு சமமாகும். உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும். அருள் நெறி என்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமய வாழ்வு வாழ்கிறோம் எனில் அது சமுதாய வாழ்வுடன் இணைந்ததாக அமையவேண்டும். இந்த வகையில் இல்லறத்தில் என்றும் இறைவனை அடையலாம் என்பதை இந்து சமயம் காட்டுகிறது.
இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை- என்கிறார் வள்ளுவர்
இல்வாழ்க்கையின் பண்பு அன்புடமை. பயன் அறனுடையமையாகும். மனைவி சுற்றம் என்று வி¡¢யும் அன்பிலே வாழும் ஒருவன் உலகனைத்தின் பாலும் வி¡¢ந்த அன்பு பூணும் மனப்பக்குவம் அடைகிறான். மனைவியும் அதே அன்புசால் மனப்பக்குவம் அடைகிறாள்.உலகனைத்தையும் அன்புக்கண்களிலே காணும் இந்த வி¡¢ந்த மனோபக்குவம் அடைய இல்லறம் வழிகாட்டுகிறது. அன்பும், அறனும் இல்வாழ்க்கையினை சிறப்பாக்குகிறது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் -வள்ளுவர்.
இல்லறம் நடத்தியே இறைவனை அடைந்தாகச் சொல்லப்படும் நாயன்மார்களுடைய கதைகளிலும், ழ்வார் கதைகளிலும் தனை நாம் அறியலாம்.
"காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றிஓடே எடுத்தென்ன? உள்ளன்பில்லாதவர் ஓங்கு செல்லநாடேயிடை மருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர் பால்வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுமே"
இங்கு இல்லறத்தானும் வீடுபேறு பெறமுடியுமென கூறப்படுகிறது.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்ததை ஒழித்துவிடின் -
இதைதான் சமயம் கூறுகிறது. உனக்கிட்ட கடமைகளை ஒழுங்காக செய். அதுவே உன்னை உயர்நிலையை அடையும் தகுதியை வளர்த்துக் கொடுக்கும்.
இந்து தர்மத்தின் முக்கிய நூலாக போற்றப்படுவது பகவத்கீதை. இந்த கீதையை உபதேசித்தவனும் கேட்டவனும் சந்யாசிகள் அல்லர். குடும்பவாழ்விலிருந்தோர்,மன்னாளும் மன்னர்கள்.
கீதையிலே பரமாத்மா கிருஷ்ணன் சொல்கிறான் :
"அர்சுனா, மூன்று உலகங்களிலும் இனி மிஞ்சிற்கும் செயல்,செய்கை ஒன்றும் எனக்குக் கிடையாது. அடையத்தக்கது, அடையப்படாது என ஒரு பேறுமில்லை.எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் தொழில்செய்யாது வாளாவிருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும், என் வழியையே பின் பற்றும்.அதனால் இந்த உலகம் அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஓயாமல் தொழில் செய்பவன் சிறந்த கர்மயோகி. அவன் ஜிவாத்மாவை இடைவிடாது துதிக்கிறான். சம்சாரத்தை நேசிக்கிறான். குடும்பத்தை காக்கிறான். மனைவி, மக்களை காக்கிறான்.சுற்றதாத்தாரை, அயலவரை போற்றுகிறான். எல்லாவற்றையும் துறந்து சென்றால் அவன் முத்திக்கு தகுதியுடைவனாக மாட்டான். எல்லாவற்றையும் துறந்து செல்கிறவன் கடவுளுடைய இயற்கை விதிகளை துறந்து செல்பவனாகிறான்...
இவ்வாறு நாம் பாக்கும் போது இல்வாழ்க்கையில் முற்று முழுதாக விடின் இறைவனை அடையலாமா? என்ற கேள்வி எழும். வாழ்வில் பற்றை விலக்க வேண்டுமே ஒழிய வேண்டியதில்லை. 'படகு தண்ணீரில் இருக்கலாம். தண்ணீர் படகினுள் இருக்ககூடாது'என்று அருமையாக வழிகாட்டுகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
இல்லறத்துறவை காட்டிலும், உள்ளத்துறவு சதகோடி மடங்கு மேலானதாகும்.இல்லாள் அகத்திருக்க இல்லாததது ஒன்றில்லை. கற்புடைய மனைவியைகாதலுற்று, அறம்பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கைகையாகும்.கடவுள் அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு உற்றார்,உறவினர், உலகத்தாருக்கும் உபசாரம் செய்து கொண்டு அறவழியில் இன்பங்களை அனுபவித்து ஆண்டவனை தொழுது அதனால் மனிதத் துன்பங்களில் இருந்து விடுபட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வது மேலான வழியாகும்.
இதனை வள்ளுவப் பெருந்தகை அன்புடைமை, வாழ்க்கை துணைநலம், புதல்வரைப் பெறுதல், விருந்தோம்பல், இனியவை கூறல் என்ற அதிகாரங்களில் வாழ்வின் ஆன்மீக வழிகாட்டியில் காணலாம்.
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்போ ஓய்ப் பெறுவதெவன் "
இல்லறத்தினை ஒழுங்காக நடத்துபவன் துறவறத்திற்கு போய் பயன் ஒன்றுமில்லை.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் முயல்வாருள் எல்லாம் தலை"
இல்லறத்தை சாரியாக நடத்துகிறவன் புலன்களை அடக்கி முயல்கிற எல்லாரினும் தலை சிறந்தவன்.
"அற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து"
சாரியான முறையில் இல்லறம் நடத்துகிறவன் , துறவறத்தானை விட பொறுப்புகளும் சகிப்புகளும் உள்ளவன். இல்லறத்தான் பிறருக்குக்குற்ற துன்பங்களையும் தனக்கு வந்தது போல் எண்ணி அதை நோக்கும் பொறுப்புடையவனாகிறான்.
"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அ•தும்பிறன் பழிப்ப தில்லாயின் நன்று"
மனிதனுக்கு அறம் என்று நூல்களால் தீர்மானிக்கப்பட்டதே இல்லறம் ஆகவே, இல்லறத்தை சாரியாக நடாத்துகிறவன் வானுறையும் தெய்வதுள்வைக்கப்படுவான்.
எதனைத்தைப் பற்றி ஆராய்ச்சி இல்லாமலே கர்ம ஒழுக்கங்ளினால்இல்லறத்தில் நின்று வீடுபேறு அடைய முடியும். இல்லறம் பொறுப்புகளும்,சகிப்புத் தன்மையும் உடையது. இல்லறத்தை நாம் கர்மயோகமாக கருதினால் அதுவே சமுதாயத்துக்கு பயனுள்ளது.
பொரியபுராண வரலாறு மூலம் "அடியார்கள் இல்லறத்தை நடத்தி இறைவனை அடைந்ததைக் காணலாம்."இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணக் கடை"
என்பதற்கேற்ப நன் மனைவியைப் பெற்ற இளையான் குடிமாற நாயனார், இல்லறத்தில் அன்று வறுமை வந்துற்றபோதும் , காரைக்காலம்மையால் வரலாறும் இல்லறத்தில் நின்று கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து போ¢ன்ப பெருவாழ்வு பெற்றதை அறியலாம்.இல்லற வாழ்விலே தர்மத் தளத்தில் நின்று செய்யும் கடமைகள் ஆன்மீக உணர்விற்குவழிவகுக்கும் என்பதை அறியலாம்.
ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் எனில் அது மக்கள் வாழ்க்கை நலத்துடன் இணைந்ததா¡க இருக்க வேண்டும். அவ்வாறு அமைவதற்கு இல்லறம் சிறந்த வழியாகும். இந்துமத தத்துவக் கருத்துக்கள் மூலமும் இவற்றை நாம் உய்த்துணரலாம்.
Saturday, March 15, 2008
ஸ்டுக்கார்ட் சித்திவிநாயகர் ஆலயம்

30 ஜூலை 2002 அன்று ஸ்டுட்கார்ட் ஜெர்மனியில் சித்தி விநாயகர் ஆலயம் ஒன்று உருவாக்கப்பட்டு கும்பாபிஷேகத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நகரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் ஏறக்குறைய ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த ஆலயம் இருக்கும் நகரம் ஸ்டுட்கார்ட் (தெற்கு ஜெர்மனியின் ஒரு நகரம்). இங்கு இந்த ஆலயம் ஏறக்குறைய 12 ஆண்டுகளாக இருந்து வருகின்றது. ஆனால் இதற்கு முன்பதாக ஆலயம் வேறு இடத்தில் 3ம் மாடியில் ஒரு அறையில் வாடகைக்கு இருந்து வந்தது. விநாயகர் விக்ரகமும் மற்றும் படங்களும் அலமாரிக்குள் வைக்கப்பட்டு வாரம் ஒரு முறை இங்கு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆலயத்திற்குத் தனியாக நிலம் வாங்கி அதற்காக ஒரு முழு ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆலய நிர்வாகம் இயங்கிக் கொண்டிருந்தது.
தற்பொழுது இந்த ஆலயம் ஸ்டுட்கார்ட் நகரத்தில் வைப்லிங்கர் சாலையில் இரண்டாம் மாடியில் அமைந்துள்ளது. மூல மூர்த்தியாக விநாயகரும், பரிகார தேவதைகளாக மகாலஷ்மியும் முருகனும் இருக்கின்றனர். கருவரை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரகார மூர்த்தி, உற்சவமூர்த்தி, பரிகார தெய்வங்கள் ஆகியவற்றின் சிலைகள் எல்லாம் தனி நபர்கள் முயற்சியில் கும்பகோணத்திலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றன் நவகிரங்களும் கூட உள்ளன.
இந்த 2ம் மாடியில் நீண்ட விஸ்தாரமான 2 அறைகளும் 2 சிறிய அறைகளும் இருக்கின்றன. இப்பொழுது ஆலயம் வாடகை கட்டிடத்தில் தான் அமைந்திருக்கின்றது. வெகு விரைவில் தக்க நிலத்தை வாங்கி அங்கு ஆலாயத்தை அமைக்க வேண்டும் என்று தற்போதைய ஆலய நிர்வாகம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.
கும்பாபிஷேகத்திற்காக விசேஷமாக இலங்கை இனியலிலிருந்து பிரதான குருக்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். அவரது தலைமயில் இந்த விழா சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை (30.6.2002) நடைபெற்றது. ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட தமிழர்களும் ஜெர்மானியர்களும் (சிலர்) இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பூஜையின் போது மிக விரிவாகத் தேவாரப் பாடல்கள் பற்பல பதிகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஓதப்பட்டது சிறப்பாக இருந்தது. உதாரணமாக தாழ் திறப்பதற்கான பதிகம் மங்களப் பதிகம் போன்றவற்றைச் சொல்லலாம். அத்தோடு பிரதான குருக்கள், தான் செய்கின்ற ஒவ்வொரு பூஜைக்குமான விளக்கத்தையும் ஆரம்பத்திலேயே கூறி தெளிவாக மக்கள் இப்பூஜைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் செய்வித்தார்.
ஆலய நிர்வாகம் தொடர்ந்து சைவ சமய விளக்க பாடங்களையும் யோகப் பயிற்களையும் ஒவ்வொரு வாரமும் நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக, முதலில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை எனும் வகையில் சமய தத்துவ வகுப்புக்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நகரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் ஏறக்குறைய ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த ஆலயம் இருக்கும் நகரம் ஸ்டுட்கார்ட் (தெற்கு ஜெர்மனியின் ஒரு நகரம்). இங்கு இந்த ஆலயம் ஏறக்குறைய 12 ஆண்டுகளாக இருந்து வருகின்றது. ஆனால் இதற்கு முன்பதாக ஆலயம் வேறு இடத்தில் 3ம் மாடியில் ஒரு அறையில் வாடகைக்கு இருந்து வந்தது. விநாயகர் விக்ரகமும் மற்றும் படங்களும் அலமாரிக்குள் வைக்கப்பட்டு வாரம் ஒரு முறை இங்கு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆலயத்திற்குத் தனியாக நிலம் வாங்கி அதற்காக ஒரு முழு ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆலய நிர்வாகம் இயங்கிக் கொண்டிருந்தது.
தற்பொழுது இந்த ஆலயம் ஸ்டுட்கார்ட் நகரத்தில் வைப்லிங்கர் சாலையில் இரண்டாம் மாடியில் அமைந்துள்ளது. மூல மூர்த்தியாக விநாயகரும், பரிகார தேவதைகளாக மகாலஷ்மியும் முருகனும் இருக்கின்றனர். கருவரை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரகார மூர்த்தி, உற்சவமூர்த்தி, பரிகார தெய்வங்கள் ஆகியவற்றின் சிலைகள் எல்லாம் தனி நபர்கள் முயற்சியில் கும்பகோணத்திலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றன் நவகிரங்களும் கூட உள்ளன.
இந்த 2ம் மாடியில் நீண்ட விஸ்தாரமான 2 அறைகளும் 2 சிறிய அறைகளும் இருக்கின்றன. இப்பொழுது ஆலயம் வாடகை கட்டிடத்தில் தான் அமைந்திருக்கின்றது. வெகு விரைவில் தக்க நிலத்தை வாங்கி அங்கு ஆலாயத்தை அமைக்க வேண்டும் என்று தற்போதைய ஆலய நிர்வாகம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.
கும்பாபிஷேகத்திற்காக விசேஷமாக இலங்கை இனியலிலிருந்து பிரதான குருக்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். அவரது தலைமயில் இந்த விழா சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை (30.6.2002) நடைபெற்றது. ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட தமிழர்களும் ஜெர்மானியர்களும் (சிலர்) இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பூஜையின் போது மிக விரிவாகத் தேவாரப் பாடல்கள் பற்பல பதிகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஓதப்பட்டது சிறப்பாக இருந்தது. உதாரணமாக தாழ் திறப்பதற்கான பதிகம் மங்களப் பதிகம் போன்றவற்றைச் சொல்லலாம். அத்தோடு பிரதான குருக்கள், தான் செய்கின்ற ஒவ்வொரு பூஜைக்குமான விளக்கத்தையும் ஆரம்பத்திலேயே கூறி தெளிவாக மக்கள் இப்பூஜைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் செய்வித்தார்.
ஆலய நிர்வாகம் தொடர்ந்து சைவ சமய விளக்க பாடங்களையும் யோகப் பயிற்களையும் ஒவ்வொரு வாரமும் நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக, முதலில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை எனும் வகையில் சமய தத்துவ வகுப்புக்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
Wednesday, March 12, 2008
இறைவன் ஏன் இதயத்தில் இருக்கிறான்?
ஆண்டவன் இந்த உலகத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் பூமிக்கு வந்தாராம். இறைவனை அடையாளம் கண்டு கொண்ட பக்தர்கள் சுற்றுலாப் பயணிகளைக் காசு கேட்டுத் துரத்தும் உள்ளூர்ப் பிச்சைக்காரர்கள் போல ஆக்கி விட்டார்கள். எனக்கு நிறைய நகை கொடு பணம் கொடு என்று வகை வகையாகக் கேட்டு ஆண்டவனைத் துரத்த ஆரம்பித்தார்கள். இவர்களைச் சமாளிக்க முடியாமல் மண்டபம், சத்திரம், கிராமம்;, நகரம் என்று எங்கெங்கோ ஒடிப் பார்த்தார் ஆண்டவன். ஆனால் அவரால் மனிதர்களின் அதைக்கொடு, இதைக்கொடு என்ற பிக்கல் பிடுங்கல்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை. அவர் கோயிலை நோக்கி ஒடினாராம்.
அங்கேயும் தட்டு ஏந்தியவாறு எதிர்கொண்டது பிச்சைக்காரர்கள் கூட்டம். ஆண்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசியில் அவருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. மனிதன் தான் உள்நோக்கிச் சிந்திப்பதே இல்லையே.. சுயமதிப்பீடும் செய்துக் கொள்வதில்லையே! தன்னுடைய இதயத்தைத் தான் எந்த மனிதனும் பார்ப்பதே இல்லையே! அதனால் அங்கே ஒளிந்து கொண்டால் யாருமே தன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று எண்ணி மனிதனின் இதயத்திலே போய் ஒளிந்து கொண்டாராம்.
கடவுள் ஏன் நம் இதயத்திலே குடியிருக்கிறார்? என்ற சீரியஸான கேள்விக்கு கிண்டலாகச் சொல்லப்படுகிற கதை இது.‘
‘யாரிடமிருந்து எதை வாங்கலாம்.. பெறலாம் என்ற மனநிலையிலேயே நம்மில் பலர் இருந்து வருகிறோம். அதனால் பிறருக்கு என்ன கொடுக்கலாம் என்றே நினைப்பது இல்லை. தப்பித் தவறி நாம் கோயிலுக்கு ஒரு டியூப் லைட் வாங்கிக் கொடுத்தால், லைட் வெளிச்சமே வராத அளவிற்கு அதன் மேல் நம் பெயரைக் கொட்டை எழுத்துக்களில் எழுதி விடுவோம்.‘
இந்து சாத்திரப்படி ஒரு பொருளை தானமாகக் கொடுக்கும் போது ‘இனிமேல் இது என்னுடையது இல்லை‘ என்று சொல்லி விட்டுத் தான் கொடுக்க வேண்டும்.
சுமஸ்கிருதத்தில் ‘நம்மா‘ என்றால் என்னுடையது இல்லை என்று பொருள். என்னுடையது இல்லை என்று சொல்லி ஒரு டியூப் லைட்டைக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்து விட்டு ‘இது என்னுடையது‘ என்று பெருமைப்பட்டுக் கொள்வது எந்த வகையில் தர்மம்?
யோசித்துப் பாருங்கள்.. காலையில் எழுந்தவுடன் பல் விளக்க நாம் பயன்படுத்தும் பற்பசையிலிருந்து இரவு தூங்கும் போது உபயோகப்படுத்தும் கொசுவத்திச் சுருள் வரை கண்ணுக்குத் தெரியாத யார் யாரோ நமக்காகச் செய்து கொடுத்திருக்கும் பொருட்கள் எத்தனை? எத்தனை?இந்தச் சமூகத்திடமிருந்து இத்தனை பொருட்களை இன்று பெற்றுக் கொண்ட நான், அதற்கு பதிலாக இந்த உலகத்துக்கு என்ன கொடுத்தேன்?‘ என்று யோசித்துப் பார்த்தாலே போதும். நாம் இந்த உலகுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்பது புரியும்!
அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த உலகில் இருக்கும் அத்தனை தலை சிறந்த விஞ்ஞானிகளும் ஒன்று கூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஒர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார்!
நாம் உண்ணும் உணவிலிருந்து உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை, நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறோமா? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடங்களில் முக்கியமானது நன்றியோடு இருக்கக் கற்றுக் கொள்‘ என்பது தான். ‘நமஹா‘ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் ‘போற்றி‘ என்றாலும் இதை நன்றிப் பெருக்கோடு தான் உச்சரிக்க வேண்டும்!
ஆனால் உதட்டளவில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கணக்கிலெடுத்தால், அந்த வரிசையில் முதலில் நிற்பது ‘நன்றி‘.
ஒரு முறை நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், பயணிகளே பயப்படாதீர்கள். விமானத்தில் சின்னக் கோளாறு தான். விமானி சரி செய்து சமாளித்து விடுவார் என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக விமானம் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாகப் பறக்க ஆரம்பிக்கிறது.
அப்போது, அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமை மிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும் விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறி விடப் போகிறது எங்கள் ஏர்லைன்° விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி‘ என்று சொல்லி பயணிகளை அதோகதியாக விட்டுவிட்டு விமானப் பணிப்பெண் பாராசூட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்து விட்டாளாம்.
நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் நன்றி பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன நன்றி மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது!.
நன்றி - வெப் உலகம் சுவாமி சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் பிளீஸ் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.
அங்கேயும் தட்டு ஏந்தியவாறு எதிர்கொண்டது பிச்சைக்காரர்கள் கூட்டம். ஆண்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசியில் அவருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. மனிதன் தான் உள்நோக்கிச் சிந்திப்பதே இல்லையே.. சுயமதிப்பீடும் செய்துக் கொள்வதில்லையே! தன்னுடைய இதயத்தைத் தான் எந்த மனிதனும் பார்ப்பதே இல்லையே! அதனால் அங்கே ஒளிந்து கொண்டால் யாருமே தன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று எண்ணி மனிதனின் இதயத்திலே போய் ஒளிந்து கொண்டாராம்.
கடவுள் ஏன் நம் இதயத்திலே குடியிருக்கிறார்? என்ற சீரியஸான கேள்விக்கு கிண்டலாகச் சொல்லப்படுகிற கதை இது.‘
‘யாரிடமிருந்து எதை வாங்கலாம்.. பெறலாம் என்ற மனநிலையிலேயே நம்மில் பலர் இருந்து வருகிறோம். அதனால் பிறருக்கு என்ன கொடுக்கலாம் என்றே நினைப்பது இல்லை. தப்பித் தவறி நாம் கோயிலுக்கு ஒரு டியூப் லைட் வாங்கிக் கொடுத்தால், லைட் வெளிச்சமே வராத அளவிற்கு அதன் மேல் நம் பெயரைக் கொட்டை எழுத்துக்களில் எழுதி விடுவோம்.‘
இந்து சாத்திரப்படி ஒரு பொருளை தானமாகக் கொடுக்கும் போது ‘இனிமேல் இது என்னுடையது இல்லை‘ என்று சொல்லி விட்டுத் தான் கொடுக்க வேண்டும்.
சுமஸ்கிருதத்தில் ‘நம்மா‘ என்றால் என்னுடையது இல்லை என்று பொருள். என்னுடையது இல்லை என்று சொல்லி ஒரு டியூப் லைட்டைக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்து விட்டு ‘இது என்னுடையது‘ என்று பெருமைப்பட்டுக் கொள்வது எந்த வகையில் தர்மம்?
யோசித்துப் பாருங்கள்.. காலையில் எழுந்தவுடன் பல் விளக்க நாம் பயன்படுத்தும் பற்பசையிலிருந்து இரவு தூங்கும் போது உபயோகப்படுத்தும் கொசுவத்திச் சுருள் வரை கண்ணுக்குத் தெரியாத யார் யாரோ நமக்காகச் செய்து கொடுத்திருக்கும் பொருட்கள் எத்தனை? எத்தனை?இந்தச் சமூகத்திடமிருந்து இத்தனை பொருட்களை இன்று பெற்றுக் கொண்ட நான், அதற்கு பதிலாக இந்த உலகத்துக்கு என்ன கொடுத்தேன்?‘ என்று யோசித்துப் பார்த்தாலே போதும். நாம் இந்த உலகுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்பது புரியும்!
அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த உலகில் இருக்கும் அத்தனை தலை சிறந்த விஞ்ஞானிகளும் ஒன்று கூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஒர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார்!
நாம் உண்ணும் உணவிலிருந்து உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை, நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறோமா? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடங்களில் முக்கியமானது நன்றியோடு இருக்கக் கற்றுக் கொள்‘ என்பது தான். ‘நமஹா‘ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் ‘போற்றி‘ என்றாலும் இதை நன்றிப் பெருக்கோடு தான் உச்சரிக்க வேண்டும்!
ஆனால் உதட்டளவில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கணக்கிலெடுத்தால், அந்த வரிசையில் முதலில் நிற்பது ‘நன்றி‘.
ஒரு முறை நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், பயணிகளே பயப்படாதீர்கள். விமானத்தில் சின்னக் கோளாறு தான். விமானி சரி செய்து சமாளித்து விடுவார் என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக விமானம் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாகப் பறக்க ஆரம்பிக்கிறது.
அப்போது, அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமை மிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும் விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறி விடப் போகிறது எங்கள் ஏர்லைன்° விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி‘ என்று சொல்லி பயணிகளை அதோகதியாக விட்டுவிட்டு விமானப் பணிப்பெண் பாராசூட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்து விட்டாளாம்.
நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் நன்றி பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன நன்றி மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது!.
நன்றி - வெப் உலகம் சுவாமி சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் பிளீஸ் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.
Saturday, March 8, 2008
ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் கனோபர்
இந்த நகரத்தில் கிட்டத்தட்ட 5000 இந்துக்கள் வாழ்கின்றனர். இந்த மாநகரத்தின் தலைநகரில் 1994ம் அண்டு தமிழ் இந்துக் கலாச்சார அமைப்பு ஒன்றை அமைத்தார்கள். இவ் அமைப்பில் 300 அங்கத்தவாகள் உள்ளாhகள். இதில் அதிகமானோர் இலங்கைத்தமிழரும் குறைந்தளவில் தமிழ் நாட்டவரும் அங்கத்தவர்களாக உள்ளனர்.
இவ் ஆலயம் கட்டிடம் கட்டி முடித்து 28.08.1995 அன்று கும்பாபிசேகம் நடைபெற்றது.
தினமும் மாலை 18.00 மணிக்கு பூiஐ நடைபெறுகிறது. தினமும் ஆலயம் 17.00 மணிதொடங்கி 19.00 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் 16.00 மணியிலிருந்து 20.00 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத்தில் அனைத்து இந்து சமய விசேடதினங்களும் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றன.
ஆலய முகவரி:- Sri Muthumari Amman temple
Empelder str 96
30455 Hannover
Tel:- 0511 47 11 49
வுநட:- 0511 47 11 49
இவ் ஆலயம் கட்டிடம் கட்டி முடித்து 28.08.1995 அன்று கும்பாபிசேகம் நடைபெற்றது.
தினமும் மாலை 18.00 மணிக்கு பூiஐ நடைபெறுகிறது. தினமும் ஆலயம் 17.00 மணிதொடங்கி 19.00 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் 16.00 மணியிலிருந்து 20.00 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத்தில் அனைத்து இந்து சமய விசேடதினங்களும் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றன.
ஆலய முகவரி:- Sri Muthumari Amman temple
Empelder str 96
30455 Hannover
Tel:- 0511 47 11 49
வுநட:- 0511 47 11 49
Wednesday, February 27, 2008
யார் பிராமணன்
இந்த உபநிஷதம் சாம வேதத்தைச் சார்ந்ததாகும். இது அறியாமையைத் தகர்ப்பதாகும். பிரம்ம ஞானம் விளங்கப் பெறாதவரை இடிப்பதாகும். ஆனால் அறிவு மேம்பாட்டுடையோரை ஏத்துவதாகும். இவ் வஜ்ரசூசிக் கொள்கை இவையே. வர்ணாசிரம தர்மத்தை, அதாவது பிரமணன், சாத்திரியன், வைசியன், சூத்திரன் எனும் நான்கு பிரிவுகளை வேதங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. ஸ்மிருதிகளும் நீதி நூல்களுங் கூட ஒப்புக் கொண்டுள்ளன. உண்மையில் யார் பிராமணன்? அவன் ஜீவனா அல்லது உடலா? அல்லது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு வகுப்பா? அறிவால் ஒருவன் பிராமணனா? அல்லது தொழிலால் ஒருவன் பிராமணனா? சுயக்கிரியைகள் புரிவதால் ஒருவன் பிராமணனா? சமயக் கிரியைகள் புரிவதால் இங்கு ஒருவன் பிராமணனா? இவற்றுள் ஜீவன் பிராமணனாக இருக்க முடியாது. முற் பிறப்பான முந்தைய உடல்களிலும் ஜீவன் ஒன்றே. அது ஒன்றாக இருந்தாலும், முந்தைய கர்மங்களால் உந்தப்பட்டு, அனேக உடல்களைத் தாங்கும் நிலை அதற்குண்டு. எல்லா உடல்களிலும் ஜீவபாகம் ஒன்று தானே, அதன் ஜீவன் பிராமணனாக இருக்க முடியாது என்றாகி விட்டது. பிறகு, உடல்தான் பிராமணன் என்றால் அதுவும் இல்லை. மானிட வகுப்புகள் அனைத்தும் ஐம்பூதங்களால் ஆன உடல்களைக் கொண்டவையே. இத்தன்மையான ஒருமையாலும் மற்றும் முதுமை, மரணம், குணம், குற்றம் எனும் பொது நிலைகளாலும், இன்னும் இவை போன்ற பிற பொதுமைகளாலும் உடல் பிராம்மணன் இல்லை என்றாகி விட்டது. பிறப்பால் தான் பிராமணன் என்றால், அதுவும் இல்லை. அந்தக் கால முனிவர்கள் அநேகர் வௌ;வேறு வகையான மூலம் உடையவராயுள்ளனர். மானிட இனமன்றி, அநேக உயிரினங்களை மூலமாகக் கொண்டவர்களும் உண்டு. ரிஷ்ய சிருங்கர் ஒரு மானிலிருந்து பிறந்தவர். கௌசிகர் செய்புல்லிலிருந்து பிறந்தவர். வால்மீகி எறும்புப் புற்றிலிருந்தும், ஜாம்புகர் ஒரு நரியிலிருந்து உதித்தவர்கள். வியாசர் ஒரு மீனவப் பெண்ணினின்றும், கௌதமர் ஒரு முயலில் முதுகுலிருந்தும் தோன்றியவர்கள். வசிஷ்டர், ஊர்வசி என்கிற ஒரு காந்தர்வப் பெண்ணிடம் தோன்றினார்; அகஸ்தியர் ஒரு மண் குடுவையினின்று தோன்றினார் என்று தான் புனித நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு பிறந்தவர்களாயிருந்தும், இவருள் அறிவொளி வீசத் திகழ்ந்ததால் மிக உயர்ந்த பதவி பெற்றனர். இதனால் பிறப்பு ஒருவனை பிராமணன் ஆக்குவதில்லை என்று ஆகிவிட்டதல்லவா! அறிவால் ஒருவன் பிராமணன் ஆகிறான் என்றால் அதுவும் இல்லை. மற்ற மூன்று வர்ணத்தாருள்ளும் சாத்திரியர், வைசியர், சூத்திரர் பரம்பொருளைக் கண்டவரும், உன்னத உண்மையை அறிந்தவரும், அறிவொளி பெற்று திகழ்ந்தவரும் பலர் உளர். அதனால் அறிவு ஒருவனை பிராமணனாக ஆக்குவதில்லை என்றாகி விட்டதல்லவா? தொழில் தான் ஒருவனை பிராமணனாக்குகிறது என்றால் அதுவும் இல்லை. கடந்த பிறவியில் செய்திருந்த பணிகளும், இப்பிறவியில் செய்யத் தொடங்கிய பணியும், இனி வரும் பிறப்பில் செய்ய இருக்கின்ற பணிகளும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாகவே உள்ளது. நன் மக்கள், முற்பிறவிக் ஹகர்மா'வால் உந்தப்பட்ட நற்செயல்கள் புரிகின்றனர். ஆதலால், செயல் ஒருவனை பிராமணனாக்குவதில்லை. சமயக் கடன்கள் புரிவதால் ஒருவன் பிராமணன் ஆகிறான் என்றால் அதுவும் இல்லை. சமயக் கடனில் ஒன்றான பொன்னை வாரிக் கொடுத்தல், செய்திருக்கும் சாத்திரியர், வைசியர், சூத்திரர் பலர் உண்டு. அதனால் சமயச் சடங்குகள் செய்வோன் பிராமணன் ஆகமாட்டான். இவ்வண்ணம் பல வகையிலிலும் பிராமணன் இல்லை என்றால், உண்மையில் யார் தான் பிராமணன்? ஆத்மாவைத் தெளிவாக அறிந்தவன் பிராமணன். பிறப்பு, இயல்பு, செயல் எனும் வேற்றுமைகளற்றவன் பிராமணன். ஆறு பலவீனங்கள், அறு நிலை என்பன போன்ற குறைகளில்லாதவன் பிராமணன். உண்மை, அறிவொளி, மகிழ்ச்சி, அழிவின்மை இவற்றின் வடிவமாயிருந்து தீர்மானங்கள் ஏதுமற்று எண்ணில்லாத் தீர்மானங்களுக்கு அடிப்படையாய் அமைய, எவன், எல்லா உயிருள்ளும், உறைந்திருக்கும் விழுப் பொருளாய்ச் செயல்படுகின்றானோ அவன் பிராமணன். மகிழ்ச்சியியல்பு, பகுக்க வொண்ணாத்தன்மை, அளப்பரிய நிலை, தன் சொந்த அனுபவத்தால் மட்டுமே உணர முடிவது போன்ற தன்மையுடையவனாய் எவன் வான்வெளி போல் அனைத்தின் உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்திருக்கிறானோ... எவன் தன்னை நேராய் தன் ஆத்மாவாய் வெளிப்படுத்துபவனோ, எவன் தன் இயல்பின் நிறைவேற்றத்தின் மூலம் ஆசை, பாவம் இவை போன்றவற்றின் குற்றங் குறைகளை நீக்கக் கண்டவனோ, எவன் அமைதியே உருவானவனாய், ஆசை முதலான ஐந்து கொடுநிலைகளைக் களைந்தவனோ, எவன் வீண் பகட்டு, நான், எனது என்பதற்ற மனத்தினாய் வாழ்பவனோ, அவனே பிராமணனாவான். இக்குணங்கள் கொண்டிருப்பவர் மட்டுமே பிராமணன். அந்தணன், அறவோன் ஆவான். இதுவே, வேத முடிவாகும்.
Friday, February 22, 2008
துளசி மஹிமை
1. நாரத மகாரிசி ப்ருது மஹாராஜாவுக்குச் சொல்கிறார்:-
சகல தேவதைகளும் தங்களுக்கு ஒரு காரியம் சித்திக்க வேண்டி பராசக்தியை போற்றுகிறார்கள். அப்போது ஆகாயத்தில் உலகெங்கும் பிரகாசிக்கும் தேஜோ மண்டலத்தைக் கண்டார்கள். அங்கே தோன்றிய ஆகாச வாணியையும் செவியுற்றனர்.
2. தேவதைகளால் பிரார்த்திக்கப்பட்ட சக்தியானவள், ''ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று வித குணங்களால் நான்தான் கௌரீ, லக்ஷ்மி, சரஸ்வதி என்கிற மூன்று வித பேதத்தை அடைந்திருக்கிறேன். தேவர்களே!அங்கே செல்லுங்கள். உங்களுக்குக் காரிய சித்தி உண்டாகும் என்று ஆக்ஞை இட்டாள்.
3. அதற்குப் பிறகு சகல தேவர்களும் பராசக்தியின் வாக்கியப் படி மிகவும் பக்தியுடன் கௌரீ முதலான மூன்று பேர்களையும் வந்தனம் செய்தார்கள்.
4. கௌரீ முதலானவர்கள் தேவதைகளிடம்; சில விதைகளைக் கொடுத்து, 'இந்த விதைகளை ஸ்ரீ விஷ்ணு இருக்கும் இடத்தில் விதைத்தால் உங்கள் காரியம் சித்திக்கும்' என்று சொன்னார்கள். தேவர்களும் அப்படியே விதைத்தார்கள்.
5. ஸ்ரீ பார்வதி தேவியின் அம்சமாக ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்களோடும் கூடிய துளசி அங்கே உண்டாயிற்று. அதைப் பார்த்து விஷ்ணு மிகவும் சந்தோஷத்துடன் அதை எடுத்துக்கொன்டு வைகுண்டம் சென்றார். விஷ்ணுவுக்குத் துளசியிடம் அதிகமான ப்ரீதி உண்டு. துளசியின் அடியில் ஸ்ரீவிஷ்ணுவைப் பூஜித்தால் விசேஷமான பலன்கள் உண்டாகும்.
6. எந்தக் இடத்தில் துளசி வனம் இருக்கின்றதோ, அந்த அரசனே! மிகவும் பரிசுத்தமானவர் அந்தக் கிருகத்தில் யம தூதர்கள் வரமாட்டார்கள்.
7. சகல பாபங்களையும் போக்கும்; சகல இஷ்டங்களையும் அளிக்கும். துளசி வனத்தை யார் உண்டுபண்ணுகிறார்களோ அவர்கள் யமனை அடைய மாட்டார்கள்.
8. நர்மதா நதியின் தரிசனம்;கங்கை ஸ்நானம் துளசி வனத்தின் சம்பந்தம் இம்மூன்றும் சமமான பலனைக் கொடுக்கும்.
9. துளசியை வளர்த்து, காப்பாற்றி, தரிசிப்பதால் வாக்கு, மனம், சரீரம் மூன்றினாலும் செய்த பாபங்கள் போகும்.
10.துளசியால் ஸ்ரீPமகாவிஷ்ணுவையோ, பரமேசுவரனையோ பூஜிக்கிறவன் முக்தியையடைகிறான். மறுபடியும் பிறவியை அடையமாட்டான்.
11. புஷ்கரம் கங்கை முதலான புண்ய தீர்த்தங்கள், விஷ்ணு முதலான தேவதைகள் எல்லோரும் துளசி தளத்தில் எப்பொழுதும் வசிக்கிறார்கள்.
12. துளசியைச் சிரசில் தரித்துக்கொண்டு பிராணனை விடுபவன் அநேக பாபங்கள் செய்திருந்தாலும் வைகுண்டத்தை அடைகிறான்.
13. துளசிக் கட்டையால் அரைத்த சந்தனத்தை, எவன் தரிக்கிறானோ, அவன் பாபம் செய்ய மாட்டான்.
14. துளசி தளங்களுடைய நிழல்படும் இடங்களில், சிராத்தம் (திதி) செய்ய வேண்டும். அதனால் பித்ருக்களுக்குத் திருப்தி ஏற்படும் என்று பத்ம புராணம் கூறுகின்றது. துளசி விஷயமான புராணக் கதை இது:
ஒரு கிராமத்தில் வைதிகாசாரமற்ற ஒரு வேதியன், பயிரிடும் தொழிலில் ஆவல்கொண்டு அத்தொழிலையே நடத்திவந்தான். ஒரு சமயம் அரண்யத்தில் மாட்டுப் புல்லுக்காகச் செல்லுங்கால், சில துளசிச் செடிகளைச் கண்ணுற்றான். அவைகளின் சிறந்த வாசனையில் விருப்பங் கொண்டான். சில செடிகளை அப்புல்லோடு சேர்த்துக்கட்டினான். இந்தச் சமயத்தில் அவன் ஆயுளின் முடிவோ என்னவோ!ஒரு கிருஷ்ண ஸர்ப்பம் அந்தப் புற்கட்டில் ஒளிந்துகொண்டிருந்தது. அது அவனுக்குத் தெரியாது. ஆனால் அவனைத் தீண்ட இவ்வரவத்திற்குச் சக்தி இல்லை. துளசிக் கட்டை கீழே போடும் சமயத்தை எதிர்பார்த்திருந்தது அது.
இந்தப் பிராம்மணனின் வீட்டிற்கருகிலுள்ள ஒருவர் சிறந்த தவ வலிமை உள்ள ஞானியாக விளங்கி வந்தார். அவர் ஸ்ரீமகாவிஷ்ணுவைத் துளசீ பத்திரங்களால் தினந்தோறும் பக்தியுடன் நன்கு ஆராதிக்கிறவர். புல்லுக்கட்டைச் சுமந்து செல்லும் அவன் பின்னால் யம தூதர்களைக் கண்ட அவர், ''எதற்காக நீங்கள் இவனைப் பின்பற்றுகிறீர்க''ளென்று வினவினார். உடனே அவர்கள், ''கிருஷ்ண சர்ப்பத்தின் மூலம் அவன் பிராணனை அபகரித்து யம லோகத்திற்குக் கொண்டுபோக வேண்டி நாங்கள் பின்தொடருகிறோம். துளசிச் செடிகளை அவன் தூக்கிச் செல்வதால் இப்பொழுது ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்தச் செடிகளை எப்பொழுது கீழே போடப்போகிறான் என்று சமயத்தை எதிர் பார்த்துக்கொண்டு பின் செல்லுகிறோம்''என்று விடை பகர்ந்தார்கள். இவ்வசனத்தை செவியுற்ற அவ்வேதிய சிரோமணி மிகவும் மனவருத்தம் அடைந்தார். ஆபத்தை எவ்விதத்திலும் போக்க வேண்டுமென்று கருதி அதற்குத் தகுந்த உபாயம் ஒன்றும் தோன்றாமல் அருகிலிருக்கும் எம கிங்கரர்களையே இதற்கு என்ன செய்யலாமென்று வினவினார். ''அவர்கள், ''தவசிரேஷ்டரே! ஒவ்வொரு நாளும் துளசி தளங்களால் ஸ்ரீPபகவானை அர்ச்சித்து எவ்வளவு புண்ணி;யம் சம்பாதித்திருக்கிறீர்களோ, அந்தப் புண்ணி;யத்தை இவன் பொருட்டுக் கொடுத்தால் இந்த ஆபத்திலிருந்து இவன் விலகுவான்'' என்று கூறினார்கள்.
தமக்குப் பரோபகாரம் செய்வதற்குத் தகுந்த சமயம் கிடைத்ததே என்று அடங்கா மகிழ்ச்சியுடன் தம் புண்யத்தை அளித்தார். உடனே புல்லுக்கட்டைச் சுமந்து வந்த பிராம்மணன் இங்கு நடந்த சகல சமாசாரங்களையும் இவ்வேதியர் வாயிலாக அறிந்து, அன்று முதல் ஒவ்வொரு தினமும் நியமமாகத் துளசி தளங்களால் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைப் பூஜித்து முடிவில் உத்தமமான பதவியைப் பெற்றான். ஆகையால் நாமும் நம்மால் இயன்றவரை துளசி அர்ச்சனை செய்து ஜன்ம ஸாபல்யத்தை அடைவோமாக!
சகல தேவதைகளும் தங்களுக்கு ஒரு காரியம் சித்திக்க வேண்டி பராசக்தியை போற்றுகிறார்கள். அப்போது ஆகாயத்தில் உலகெங்கும் பிரகாசிக்கும் தேஜோ மண்டலத்தைக் கண்டார்கள். அங்கே தோன்றிய ஆகாச வாணியையும் செவியுற்றனர்.
2. தேவதைகளால் பிரார்த்திக்கப்பட்ட சக்தியானவள், ''ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று வித குணங்களால் நான்தான் கௌரீ, லக்ஷ்மி, சரஸ்வதி என்கிற மூன்று வித பேதத்தை அடைந்திருக்கிறேன். தேவர்களே!அங்கே செல்லுங்கள். உங்களுக்குக் காரிய சித்தி உண்டாகும் என்று ஆக்ஞை இட்டாள்.
3. அதற்குப் பிறகு சகல தேவர்களும் பராசக்தியின் வாக்கியப் படி மிகவும் பக்தியுடன் கௌரீ முதலான மூன்று பேர்களையும் வந்தனம் செய்தார்கள்.
4. கௌரீ முதலானவர்கள் தேவதைகளிடம்; சில விதைகளைக் கொடுத்து, 'இந்த விதைகளை ஸ்ரீ விஷ்ணு இருக்கும் இடத்தில் விதைத்தால் உங்கள் காரியம் சித்திக்கும்' என்று சொன்னார்கள். தேவர்களும் அப்படியே விதைத்தார்கள்.
5. ஸ்ரீ பார்வதி தேவியின் அம்சமாக ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்களோடும் கூடிய துளசி அங்கே உண்டாயிற்று. அதைப் பார்த்து விஷ்ணு மிகவும் சந்தோஷத்துடன் அதை எடுத்துக்கொன்டு வைகுண்டம் சென்றார். விஷ்ணுவுக்குத் துளசியிடம் அதிகமான ப்ரீதி உண்டு. துளசியின் அடியில் ஸ்ரீவிஷ்ணுவைப் பூஜித்தால் விசேஷமான பலன்கள் உண்டாகும்.
6. எந்தக் இடத்தில் துளசி வனம் இருக்கின்றதோ, அந்த அரசனே! மிகவும் பரிசுத்தமானவர் அந்தக் கிருகத்தில் யம தூதர்கள் வரமாட்டார்கள்.
7. சகல பாபங்களையும் போக்கும்; சகல இஷ்டங்களையும் அளிக்கும். துளசி வனத்தை யார் உண்டுபண்ணுகிறார்களோ அவர்கள் யமனை அடைய மாட்டார்கள்.
8. நர்மதா நதியின் தரிசனம்;கங்கை ஸ்நானம் துளசி வனத்தின் சம்பந்தம் இம்மூன்றும் சமமான பலனைக் கொடுக்கும்.
9. துளசியை வளர்த்து, காப்பாற்றி, தரிசிப்பதால் வாக்கு, மனம், சரீரம் மூன்றினாலும் செய்த பாபங்கள் போகும்.
10.துளசியால் ஸ்ரீPமகாவிஷ்ணுவையோ, பரமேசுவரனையோ பூஜிக்கிறவன் முக்தியையடைகிறான். மறுபடியும் பிறவியை அடையமாட்டான்.
11. புஷ்கரம் கங்கை முதலான புண்ய தீர்த்தங்கள், விஷ்ணு முதலான தேவதைகள் எல்லோரும் துளசி தளத்தில் எப்பொழுதும் வசிக்கிறார்கள்.
12. துளசியைச் சிரசில் தரித்துக்கொண்டு பிராணனை விடுபவன் அநேக பாபங்கள் செய்திருந்தாலும் வைகுண்டத்தை அடைகிறான்.
13. துளசிக் கட்டையால் அரைத்த சந்தனத்தை, எவன் தரிக்கிறானோ, அவன் பாபம் செய்ய மாட்டான்.
14. துளசி தளங்களுடைய நிழல்படும் இடங்களில், சிராத்தம் (திதி) செய்ய வேண்டும். அதனால் பித்ருக்களுக்குத் திருப்தி ஏற்படும் என்று பத்ம புராணம் கூறுகின்றது. துளசி விஷயமான புராணக் கதை இது:
ஒரு கிராமத்தில் வைதிகாசாரமற்ற ஒரு வேதியன், பயிரிடும் தொழிலில் ஆவல்கொண்டு அத்தொழிலையே நடத்திவந்தான். ஒரு சமயம் அரண்யத்தில் மாட்டுப் புல்லுக்காகச் செல்லுங்கால், சில துளசிச் செடிகளைச் கண்ணுற்றான். அவைகளின் சிறந்த வாசனையில் விருப்பங் கொண்டான். சில செடிகளை அப்புல்லோடு சேர்த்துக்கட்டினான். இந்தச் சமயத்தில் அவன் ஆயுளின் முடிவோ என்னவோ!ஒரு கிருஷ்ண ஸர்ப்பம் அந்தப் புற்கட்டில் ஒளிந்துகொண்டிருந்தது. அது அவனுக்குத் தெரியாது. ஆனால் அவனைத் தீண்ட இவ்வரவத்திற்குச் சக்தி இல்லை. துளசிக் கட்டை கீழே போடும் சமயத்தை எதிர்பார்த்திருந்தது அது.
இந்தப் பிராம்மணனின் வீட்டிற்கருகிலுள்ள ஒருவர் சிறந்த தவ வலிமை உள்ள ஞானியாக விளங்கி வந்தார். அவர் ஸ்ரீமகாவிஷ்ணுவைத் துளசீ பத்திரங்களால் தினந்தோறும் பக்தியுடன் நன்கு ஆராதிக்கிறவர். புல்லுக்கட்டைச் சுமந்து செல்லும் அவன் பின்னால் யம தூதர்களைக் கண்ட அவர், ''எதற்காக நீங்கள் இவனைப் பின்பற்றுகிறீர்க''ளென்று வினவினார். உடனே அவர்கள், ''கிருஷ்ண சர்ப்பத்தின் மூலம் அவன் பிராணனை அபகரித்து யம லோகத்திற்குக் கொண்டுபோக வேண்டி நாங்கள் பின்தொடருகிறோம். துளசிச் செடிகளை அவன் தூக்கிச் செல்வதால் இப்பொழுது ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்தச் செடிகளை எப்பொழுது கீழே போடப்போகிறான் என்று சமயத்தை எதிர் பார்த்துக்கொண்டு பின் செல்லுகிறோம்''என்று விடை பகர்ந்தார்கள். இவ்வசனத்தை செவியுற்ற அவ்வேதிய சிரோமணி மிகவும் மனவருத்தம் அடைந்தார். ஆபத்தை எவ்விதத்திலும் போக்க வேண்டுமென்று கருதி அதற்குத் தகுந்த உபாயம் ஒன்றும் தோன்றாமல் அருகிலிருக்கும் எம கிங்கரர்களையே இதற்கு என்ன செய்யலாமென்று வினவினார். ''அவர்கள், ''தவசிரேஷ்டரே! ஒவ்வொரு நாளும் துளசி தளங்களால் ஸ்ரீPபகவானை அர்ச்சித்து எவ்வளவு புண்ணி;யம் சம்பாதித்திருக்கிறீர்களோ, அந்தப் புண்ணி;யத்தை இவன் பொருட்டுக் கொடுத்தால் இந்த ஆபத்திலிருந்து இவன் விலகுவான்'' என்று கூறினார்கள்.
தமக்குப் பரோபகாரம் செய்வதற்குத் தகுந்த சமயம் கிடைத்ததே என்று அடங்கா மகிழ்ச்சியுடன் தம் புண்யத்தை அளித்தார். உடனே புல்லுக்கட்டைச் சுமந்து வந்த பிராம்மணன் இங்கு நடந்த சகல சமாசாரங்களையும் இவ்வேதியர் வாயிலாக அறிந்து, அன்று முதல் ஒவ்வொரு தினமும் நியமமாகத் துளசி தளங்களால் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைப் பூஜித்து முடிவில் உத்தமமான பதவியைப் பெற்றான். ஆகையால் நாமும் நம்மால் இயன்றவரை துளசி அர்ச்சனை செய்து ஜன்ம ஸாபல்யத்தை அடைவோமாக!
ஹம் திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன்

ஹம் நகரில் திரு நல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் அடியார்கள் குறைதீர்க்கும் அருள் அழகராகத் திகழ்கிறார். இவ் அருளாலயம் 23.06.99 அடிக்கல் நாட்டப்பெற்று மெய்யடியார்களது எண்ணம்போல் 07.02.2001 மகா கும்பாபிஷேகம் தைப்பூசத் தினத்தில் நடாத்தப்பெற்றது. ஒவ்வொரு மாதமும் கார்த்திகைத் திதியில் விஷேட பூiஐகள் நடைபெறுகி ன்றன. மற்றும் கந்தஷஸ்டி, தைப்பூசம், கார்த்திகை தீபம் போன்ற விஷேடதினங்களிலும் மற்றய அனைத்துச் சைவ சமய பண்டிகை நாட்களிலும் பூiஐகள் நடைபெறுகின்றன.
ஆலயம் தினந்தோறும் காலை 9:30மணியிலிருந்து மாலை 8-30 வரை பக்தர்களுக்காகத் திறந்தே இருக்கின்றது. பூiஐகள் தினமும் காலை 10.00 மணிக்கும் மாலை 18.30 மணி என இருவேளைகள் இடம் பெறுகின்றது.
எமது தாய் நாட்டில் சரித்திரப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் மஹோற்சவ காலத்திலேயே இங்கும் மஹாற்சவம் நடைபெற்று அங்கு நடைபெறும் தேர்த்திருவிழா அன்று இங்கும் ஆறுமுக வேலழகர் திருவீதி வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரிலே பக்தர்களின் பஐனைப் பாடல்களுடன் அடியார்களின் அரோகரா கோஷத்துடன் நாதஸ்வர மேழ இசை முழங்க எம் பெருமான் தேர் ஏறி பவனி புறப்படும் காட்சி காணும் பக்தர்களின் கண்களில் அனந்தக் கண்ணீர் பெருகுவதையும் பக்தி வெள்ளத்தில் அடியார்கள் மிதப்பதையும் காணலாம். கோவில் அமைந்த சூழலும் தெய்வ அருளும், ஒரு அழகு மயிலைத் தானகவே ஈர்த்து வந்துள்ளது. மழைமேகம் கண்டு ஆடும் மயில் இங்கு பக்தர்களைக் கண்டாலே தோகை விரித்து ஆடும். ஆடும்மயிலின், அற்புதம் காணவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருளும் ஆறுமுகவேலழகரின் அருள்பெறவும் பக்;தர்கள் சூழ்ந்தவண்ணம் இருக்கும் இவ் அருள்ளாலயம் ஹம் நகரில் புகையிரத நிலையத்தில் இருந்து 5 நிமிட நடை தூரத்திலேயே அமைந்துள்து. ஸ்ரீ ஆறுமுகவேலழகன் அருள் வேண்டி இம்மைக்கும் மறு மைக்கும் பேரருள் சேர்ப்போமாக.
ஆலய முகவரி:
Murukan Hindu tempel e.V
Roon Str.2a- -- 59065 Hamm
Tel:02381/29103
Wednesday, February 20, 2008
பக்நாங் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம்

ஆலயம். ஆ! இந்த லயம்தான் எம் இதயத்தைக்கூட இதமாக இயங்க வைக்கிறது. இந்த லயத்தை அழகு என்றும் கொள்ளலாம், ஒழுங்கென்றும் ஒழுகலாம். உலகில் உறவுகள் எத்தனை இருந்தாலும் இனிய உறவு தாயுறவே.அழகிய உறவும் அதுதான். முதுமை எட்டாத புதுமை உறவு. எனவேதான் தெய்வதரி சனங்களிலும் அப்பாள் தரிசனம் ஒரு தாயும் சேயும் சந்திக்கும் ஒரு இன்ப தரிசனத்திற்கு ஒப்பாகிறது.பக்நாங் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம் அடியவர்கள் கேட்கும் நல்வரங்களை நல்கி பக்தர்கள் உள்ளத்தில் ஆட்சி புரிகின்றாள் மீனாட்சியாக.இந்த ஆலயம் 1994ம் ஆண்டு பங்குனி உத்தரத்தில் சிவாய சுப்பிரமணிய சுவாமிகளது ஆசியுடன் ஆரம்பிக்கப் பட்டது. யேர்மனி நாட்டில் சுற்காட் நகரில் பக்நாங் கிராமத்தில் அமைந்தள்ளது.81 பெரும் தெரிவில் ஸ்ருட்காட்டை நோக்கிச் செல்கையில். அல்லது கல்புறோன் நோக்கிச் செல்கையில் 13வது வெளியேற்றுப் பாதையில் இறக்கி 16கி.மீ வரை செல்ல, அம்பாள் காட்சி தருவாள். போகும் பாதை இருமருங்கிலும் களனிகள். கிராமத்தின் வனப்புள் சென்று, அம்பாளின் வதனத்ததைத் தரிக்கலாம். அம்மனுக்குரிய விஷேட தினங்கள் முறையாக பூஜிக்கப்படுகின்றன. வருடம் தோறும் கௌரிக்காப்பு விரதம் மிகவும் அற்புதமாக நடைபெற்றுவருகின்றது.பக்தர்கள் மெய்மறந்து வணங்குவதும், ஆனந்தக் கண்ணீர் பொழிவதும், பக்தர்களின் வேண்டுதலுக்கு அருள் கொடுக்கும், அம்மனின் தரிசனத்தை பெற்றதாகவே கொள்ளவேண்டும்.அம்பாள் அலங்கரியாக,அகம்பாவம் ஒழித்து, பூமணம் கமழ அழகுத்தேவதையாக, அருள் வடிவாக உள் வீதியை வலம் வரும்போது உள்ளம் மெய்மறக்கும். எங்கள் தேவைகளை தாயிடம் முறையிடுவதுபோல் இந்தத்தாயிடம் கேட்டு வந்தால், நின்மதி கிட்டும.; ஆனந்தப்பெருவாழ்வு மலரும்.
Sri Meenadchi Temple e.v
Eberhard Str.8
71522 Backnang Germany
Tel:07191/88627-Handy:0179 799 6052
Saturday, February 9, 2008
வள்ளி தேவா சேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிமணியர் ஆலயம் Essan
தமிழ் ஈழ மக்கள் புலம் பெயர்ந்து வாழுகின்ற நாடுகளில் எல்லாம் தமது மொழி, கலை, கலாச்சாரம் ஆலய வழிபாடு என்பவற்றை மறவாது கண்ணும் கருத்துமாகப் பேணிவருகிறார்கள். Nஐர்மனி எஸசன் நகர் வாழ் இந்து மக்களின் பெரு முயர்ச்சியால் 1989 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆலயத்தில் வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 18.30 அபிசேகத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 19.00 மணிக்கு பூiஐ நடைபெறுவதுடன் அடியார்களின் தரிசனத்திற்காக இரவு 21.00 மணிவரை ஆலயம் திறந்திருக்கிறது.
இங்கு ஸ்கந்த ஷஷ்டி மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப் படுகிறது. மற்றும் நவராத்திரி, திருவம்பாவை மற்றும் ஏனைய விரத பண்டிகை நாட்கள் என்பனவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மூல மூhத்தி யாக 1993ம் ஆண்டு பிரதிஸ்டை செய்யப்பட்ட ஞானசக்தி வேலனுடன் காட்சி தரும் எம் பெருமானின் கும்பாபிசேக தினமான வைகாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் அஷ்டோத்தர சத சங்காபிசேகமும் விசேடமாகக் கொண்டாடப்பட்டு வருவது அறிய முடிகிறது.
இவ் ஆலயம் எஸன் புகையிரத நிலையத்திலிருந்து 15 நிமிட நடைதூரத்திலும், 40ம் இலக்க நெடும்சாலையில் (குசடைநனெழசக) வெளியேறும் பாதையிலிருந்து 1500 மீற்றர் தூரத்திலும் உள்ளது.
ஆலய விலாசம்:- GoldSchmidt Str 5, 45127 Essan.
தொலைபேசி :- 0201 248 74 79
சீசெல்சு அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம்



இந்து சமுத்திரத்தில் சிதறிய முத்துக்கள், விஷஜந்துக்களே இல்லாத சீசெல்சு, திருவோடு காய்கின்ற தெய்வீக நாடு, எந்த விதமான குழப்பமோ சல சலப்போ இன்றி உலகளாவிய பாராட்டை பெற்று எந்த நாட்டிலும் இல்லா ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் அமைதிப் பூங்காவாக வாக விளங்கும் நாடு, இன மத வேறுபாடின்றி மக்கள் புரிந்துணர்வுடன் வாழும் நாடு, இந் நாட்டில் கிட்டத்தட்ட 4000 இந்து சமய மக்கள் இருக்கிறார்கள. இங்கு 1984ம் ஆண்டு ஆனி மாதம் 24ம் நாள் பஞ்சலோகத்தினால் விநாயகர்,நடராசர் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் அபிசேகத்துடன் பூiஐகள் நடைபெற்று வந்தன. பின் அங்குள்ள இந்து மக்களால் ஆலயத்திற்கென வாங்கிய நிலத்தில் மண்டபம் அமைத்து விக்கிரகங்கள் பிரதிஸ்டை பண்ண பெற்று 1992ம் ஆன்டு வைகாசி மாதத்தில் குடமுழுக்கு நடாத்தப்பட்டது. இங்கு எல்லா இந்து சமயவிழக்களும் கொண்டாடப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விசேடமாகக் கொண்டாடப் படுகிறது. இவ் ஆலயத்தில் அண்மையில் கும்பாபிசேகம் கோலாகலமாக நடைபெற்றது.
சீசெல்சு தமிழ் குடும்பத்துச் சிறுவர்களின் தமிழ் கல்வி வளர்ச்சிக்கும் அங்கு வாழும் இந்து சமய மக்களின் கலை, கலாச்சார, சமயரீதியாகவும் அதன் வளர்ச்சிக்காகவும் பெரிதும் ஆர்வம் காட்டுபவர் திரு விஜயரத்தினம் சிவசுப்பிரமணியம் அவர்கள். இவர் முன்பு யாழ்பாணம் இந்துக்கல்லூரியிலும், அளவெட்டி அருணோதயா கல்லூரியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவர் எழுதிய சீசெல்ஸ்சின் பத்தாண்டு வளர்ச்சி என்னும் நூலில் அன்னாட்டைப்பற்றிய முழு விபரங்களையும் காணலாம்.
Saturday, February 2, 2008
ஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள்



காஞ்சியிலே ஒரு காமாட்சி ஜேர்மனி ஹம் நகரிலும் ஓர் காமாட்சி
ஜேர்மனியில் ஹம் (hamm) நகரிலே தேவியின் திருவருளாலும் 'பக்குவத்திருமணி" சிவஸ்ரீ இரேவணசித்த பாஸ்கரக்குருக்களின் பெருமுயர்ச்சியாலும், பக்தர்களின் ஒத்துழைப்பாலும் 1989ம் ஆண்டு அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கு மிகச் சிறிதாக ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. தற்போது ஆலய ஆதீனகர்த்தா கமாட்சி அம்பாளுக்கு சொந்தமாக 4500 சதுர மீட்டர் நிலத்தை வாங்கி அதில் தேவிக்கு 27ஒ27 மீட்டரில் மிகப் பெரிய செலவில் எங்கள் தாய்நாட்டு ஆலயங்கள் போல நிறுவியுள்ளார். இதன் முன் வாயில் இராய கோபுரம் 17 மீட்டர் உயரமும், அம்பிகையினுடைய விமானம் 11 மீட்டர் உயரமும் உள்ளதாக அமைக்கப் பெற்று ஆலயம் அழகாகத் தோற்றமளிக்கிறது.
ஆலயத்தில் மேலும் விநாயகர், சிவலிங்கம், முருகப்பெருமான், ஸ்ரீ மகாவிஷ்ணு, சோம ஸ்கந்தர், ஐயப்பன், நவக்கிரகங்கள், பைரவர், சண்டிகேஸ்வரர், போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனி யாகச் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் ஆலயத்தில் நம் தாய் நாட்டிலுள்ள ஆலயங்களில் நடைபெறும் விசேடபூஜைகள் அனைத்தும் இங்கும் நடைபெறுகின்றன. மஹோற்சவம் நடைபெறும் நாட்களில் மக்கள் வெள்ளம் அலை பாயும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள் நாட்டிலும் பல வெளிநாடுகளிலிருந்தும் காமாட்சி அம்பிகையின் அருளைப்பெறக் கூடுகிறாhகள். Nஐர்மனியில் முதல் முதலாக இவ்வாலயத்தில் தான் அருள் வேண்டிக் காத்திருக்கும் பக்தர்களுக்காக கமாட்சி அம்பாள் தெரு வீதியுலா வந்ததும், தேர் வீதியுலாவந்ததும், சொந்தத்தில் நிலம் வாங்கி ஆலயம் அமைத்ததும் ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தையே சாரும். தினமும் மூன்று காலப் பூiஐகளும் ஆலயம் வரும் அடியவர்க்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
Nஐர்மன் நாட்டில் பல நகரங்களிலிருந்தும் பல வெளி நாடுகளிலிருந்தும் தங்கள் திருமணவிழாக்களை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் ஹம் காமாட்சி அம்பாள் கலியாண மண்டபத்திலேதான் நடாத்த விரும்புவதாக வேண்டுதலுடன் வந்து வசதியாக அமைக்கப்பெற்ற கலியாணமண்டபத்தில் திருமண விழாக்களை நடாத்துகிறார்கள். அதற்கு மெருகூட்ட தாயகத்திலிருந்து தருவித்த அழகான மணவறையுடன் போஷனவசதியும் இங்கு செய்துதருகிறார்கள்.
ஆலயம் ஹம் (ர்யஅஅ) புகையிரத நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் அழகிய சிறு நதியுடன் இயற்கை வளங்கள் யாவும் பெற்ற ருநவெசழி என்னும் கிராமத்திலுள்ளது. ஹம் புகையிரத நி லையத்திலிருந்து ஆலயம் வரை அரசாங்க பேரூந்து சேவைகள் உண்டு. தம் சொந்த வாகனங்களில் வருபவர்கள் இலக்கம் 2 நெடும்சாலையில் டீநைடநகநடன 19 வது இலக்க வெளியேறும் பாதையில் 3 கி.மீ தூரத்தில் ருநவெசழி கிராமத்தில் உள்ளது அருள்மிகு காமாட்சி அம்பாள் ஆலயம்.
ஆலய முகவரி :- Hindu Shankara Sri Kamadchi Ampal Temple e.V
Siegenbeck Str 04-05,
59071 Hamm- Uentrop
தொலைபேசி:- 02388 30 22 23 தொலைநகல் :- 023 88 30 22 24
அருகின் பெருமை
யமனின் மகனாகிய அனலாசுரன் அனைவரையும் விழுங்கி ஆரவாரித்தான். இதைக் கண்டு அஞ்சிய முனிவர்கள், விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டனர். விநாயகர் விசுவரூபமெடுத்து அவனை விழுங்கினார்.
விநாயகரின் வயிற்றிலிருந்த அனலாசுரனின் வெப்பம் அனைவரையும் பொசுக்கியது. அக்னி பகவானே அருகில் வர அஞ்சினான். அனைவரும் பால், தண்ணீர், பன்னீர், சந்தனம் போன்றவற்றினால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யத் தொடங்கினர். இவற்றால் ஒரு பயனும் ஏற்படவில்லை.
அச்சமயத்தில் சில முனிவர்கள், இருபத்தோரு அருகம் புற்களால் கணபதியை அர்ச்சித்தனர். முதல் அருகு பட்டதுமே தணியத் தொடங்கிய வெப்பம், முனிவர்கள் யாவரும் அர்ச்சித்து முடித்தபோது முழுமையாக அகன்றது.
உடனே தேவர்களை நோக்கி விநாயகர், "உங்களது அனைவரின் உபசாரங்களையும்விட உயர்வானது அருகம் புல்லால் செய்யப்படும் அர்ச்சனை. பல வித பூக்கள், பத்ரங்களால் (இலை) எனக்கு அர்ச்சனை செய்தாலும் அருகும், வன்னியுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை' என்று கூறினார். அப்பொழுது முதல், விநாயகர் வழிபாட்டில் அருகுக்கு முக்கிய இடம் வந்தது.
விநாயகரின் வயிற்றிலிருந்த அனலாசுரனின் வெப்பம் அனைவரையும் பொசுக்கியது. அக்னி பகவானே அருகில் வர அஞ்சினான். அனைவரும் பால், தண்ணீர், பன்னீர், சந்தனம் போன்றவற்றினால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யத் தொடங்கினர். இவற்றால் ஒரு பயனும் ஏற்படவில்லை.
அச்சமயத்தில் சில முனிவர்கள், இருபத்தோரு அருகம் புற்களால் கணபதியை அர்ச்சித்தனர். முதல் அருகு பட்டதுமே தணியத் தொடங்கிய வெப்பம், முனிவர்கள் யாவரும் அர்ச்சித்து முடித்தபோது முழுமையாக அகன்றது.
உடனே தேவர்களை நோக்கி விநாயகர், "உங்களது அனைவரின் உபசாரங்களையும்விட உயர்வானது அருகம் புல்லால் செய்யப்படும் அர்ச்சனை. பல வித பூக்கள், பத்ரங்களால் (இலை) எனக்கு அர்ச்சனை செய்தாலும் அருகும், வன்னியுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை' என்று கூறினார். அப்பொழுது முதல், விநாயகர் வழிபாட்டில் அருகுக்கு முக்கிய இடம் வந்தது.
கண்ணில் சிறந்த உறுப்பில்லை
கண்ணில் சிறந்த உறுப்பில்லை
கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
'எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்" என்பது அன்றோர் வாக்கு. 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே" என்பதை தஞ்சை வாணன் கோவை. 'சமஸ்கிருத மொழியிலும், ஸர்யவஸ்ய காத் ரஸ்ய சிரஸ்ப்ரதாநம், ஸ்ர்வேந்திரியானாம் நயநம் ப்ரநாதம்" என்று இக் கருத்தே கூறப்படுகிறது. மக்களின் உடம்பிலுள்ள கருவிகளை இரண்டு வகையாகப் பிரிப்பர். ஒன்று அறிவுக்கருவி, மற்றொன்று தொழிற்கருவி, அறிவுக்கருவிகள் ஐந்து. தொழிற் கருவிகள் ஐந்து. ஊற்றுணர்வுள்ள உடம்பு, சுவையு ணர்வுள்ள நாக்கு, ஒளியுணர்வுள்ள கண் நாற்ற உணர்வுள்ள மூக்கு, ஒலியுணர்வுள்ள காது எனும் அறி வுக்கருவிகளான ஐம் பொறிகளும், அவற்றை உணர்ந்து செயற்படுத்தும் மூளையும் தலையில் இருக்கும் காரணம் பற்றியே ' எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்" என்றனர்.
இவ் ஐம்பெறிகளுள்ளும் கண் சிறந்த இடம் வகிக்கிறது. காரணம் மற்றய பொறிகள் தன்னிடம் வருவனவற்றை அறிந்து மூளைக்கு உணர்த்துவன. ஆனால் கண் மட்டுமே தொலைவிலுள்ள பொருளை யும் சென்றறிந்து அதனை மூளைக்கு உணர்த்தும் திறனுடையது. கண்ணைத் தவிர மற்றய பொறிகள் நினஇறு பற்றுவன. குணஇ மட்டுமே சென்று பற்றும் சிறப்புடையது. இச் சிறப்புக் கருதியே 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே!" என்று தஞ்சை வாணன் கோவையின் ஆசிரியர் பொய்யா மொழிப்புலவர் கூறினார்.
மன்னனே மக்களின் கண்:-
சேக்கிழாரும் மன்னனின் இலக்கணம் கூறவந்த இடத்து
'மண்ணில் வாழ்தரும் மன்னுயிர் கட்கெல்லாம்
கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலன்"
என்று மொழிகின்றார். மன்னனானவன் தன் நாட்டில் வாழும் உயிர்கட்கெல்லாம் உயிராக வாழ்பவன். தன்னிடம் குறைவேண்டியும், முறைவேண்டியும் வருவோர்க்கு ஆவன செய்வதோடல்லாது தானே பல இடங்களுக்கும் சென்று குறைகளையும், முறைகளையும் கண்டும் கேட்டும் அறிந்து அதற்குத் தக்க தீர் வு செய்யும் கட்டுப்பாடுடையவன் என்பது கருத்தாகும். உயிர் நின்று பற்றுவது, கண் சென்று பற்றுவது, மன்னன் உயிராக இருந்து ஒற்றர் வழி அறிந்துமூளையைப்போல் நின்றும் நீதி வழங்க வேண்டும். கண்ணாக இருந்து சென்று நீதி வழங்க வேண்டும் எனும் உட்கருத்தில் தான் சேக்கிழார் பெருமான் 'கண்ணும் ஆவியும் ஆம்பெரும் காவலன்" என்றருளிச் செய்கின்றார்.
இன்ப துன்பத்தை காட்டுவது கண்:-
மேலும் கண்ணிற்குப் பல சிறப்புக்கள் உண்டு. அறிதற் கருவியாக விளங்கும் கண் அறிவுக் கருவிகளிலும் தொழிற் கருவிகளாகிய கை, கால், வாக்கு, எருவாய், கருவாய் எனும் உடலுறுப்புக்களி லும் ஏதாவது நன்றோ தீதோ திகழுமாயின் அதனைப் புலப்படுத்துகின்ற நிலையில் இன்ப துன்பக் கண்ணீர் வடிப்பதும் அக் கண்ணின் சிறப்பாகும். மனிதனின் உள்ளத்திற்குள் நிகழும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் கருவியாக இலங்கும் சிறப்புடையது கண். ஒரு செயலை ஏற்று இசைவுதருவதும் புறக்கணிப்பதும் கண்ணின் புலப்பாட்டிலேயே அறிந்து கொள்ள இயலும். அத்தகைய சிறப்புடைய கண் திருடனைக் காட்டிக் கொடுக்கவும் ஒழுக்கம் இல்லாதவனை உலகுக்கு உணர்த்தவும் உரிய கருவியாக விளங்குகின்றது.
கற்பினைக் காட்டுவது கண் :-
இதனால்தான் சீதாபிராட்டியின் கற்புத்திறனை இராமபிரானுடன் கூறிவந்த அனுமான் ' கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்" என்று விளக்குகின்றான். சீதை உயிரோடுதான் இருக்கின்றார் பிறர் கூறக் கேட்டு வரவில்லை. நானே என் கண்களால் கண்டுவந்தேன். என்று அனுமான் கூறுகின்றார். என்பதாகப் பொருள் கூறலாம். ஆனால் அம்மையார் கற்போடுதான் இருக்கிறார் என்பதை எங்ஙனம் கூற முடியும் என்பதற்கு விளக்கம் கூறவே இத்தொடருக்கு இன்னும் ஆழமாகச் சிந்தித்துப் பொருள் விளக்கம் காணுதல் அவசியமாகின்றது. 'கண்டனன்" என்பதற்கு அனுமன் தான் தன் கண்களால் பார்த் தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் பார்த்தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் என்னும் சொல்லிற்குச் சீதையின் கண்களால் கற்பினுக் கணியாக இருப்பதைப் பார்த்தே ன் என்னும் பொருளும் கொள்ளுதல் ஒருவகை. மேலும் அனுமன் கண்களால் சீதாபிராட்டியை கண்டன ன் என்றும், சீதாபிராட்டியின் கண்களால் அவரது கற்புநெறி பிறளாது அணியாகத் திகழ்வதைக் கண்டனன் என்றும் கொள்ளுதல் சிறப்பாகும்.
எனவே கண்ணானது மற்றப் பொருள்களை அறிந்து மூளைக்கு உணர்த்துவதோடல்லாது கண்களையுடைய மனிதனின் உள்ள உணர்ச்சிகளைச் சமுதாயத்திற்கு உணர்த்தும் உயர் கருவியாக வும் விளங்குகின்றது.
காக்கவேண்டிய சிறப்பினது கண் :-
இத்தகைய சிறப்புக்கள் பலவுடைய கண்களைக் காண்பதற்கு இறைவனே தக்க பாதுகாப்பு கொடு த்திருக்கின்றார். கண்ணை இமை காப்பது போல் என்று உலகோர் கூறுவதும் ஈண்டு நினைவு கூரத்தக் கது. காக்கும் இமையை கொடுத்துக் காத்துக் கொள் என்று ஆண்டவனே அறிவுறுத்தியுள்ள கண்ணை இன்று பலர் பல காரணங்களினால் கெடுத்துக் கொள்கிறார்கள்.
கண்கெடுவதற்குரிய காரணங்கள் பலவாகும். பொதுவாக மனித வாழ்வில் ஒழுங்கு நெறிமுறைகள் கெடுமானால் அவை கண்களைப் பாதிக்கும். குறிப்பாக ஒழுக்கக் கேட்டினாலும், பொய் சொல்லுவதாலும், கோவப்படுவதாலும், திரைப்படம் தொலைக்காட்சி பார்ப்பதனாலும் கண் கெடும். மற்ற க் காரணங்கள் தெளிவாக விளங்கினாலும் பொய் சொல்வதினால் கண் பாதிக்கும் என்பது பலருக்குப் பரிவதில்லை. பொய் சொல்லுகின்ற போது அவனது மனம் அவனை உறுத்துகின்றது. அதனால் உடம்பிலுள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இவ் வகையில் கண் கெடுகின்றது.
சுந்தரர் வாழ்வில் கண் :-
பொச்சாட்சி சொன்னவர்களுக்கும் கண் தெரியாமல் போய்விடும். ஏனெனின்; 'சாட்சி" என்றாலேயே கண்ணால் கண்டதை கூறுதல் என்பது பொருளாகும். “சட்சு” என்னும் சொல்லுக்குக் கண் என்பது பொ ருளாகும். அதன் அடிப்படையில் வந்ததே “சாட்சி” என்னும் சொல். ஆதலின் சாட்சி சொல்லும் பொழுது தன் கண்களால் காணாத ஒன்றைக் கூறுவானேயானால் இது அவனது மனத்தை உறுத்திப் பின்னே தண்டனைக் குரியதாகிப் கண்களைப் பாதிக்கும். சபதம் பொயத்தாலும் கண் கெடும் என்பதற்கு நாம் ஆசாரிய மூhத்தியாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருள் வரலாற்றை இவ் வகையில் எடுத்துக் கொள்ள லாம். இது தவறுடையது எனினும் வாழ்விய நெறிமுறைகளை விளக்கிக் கொள்வதற்கும் கடவுளின் நடுநிலைத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கும் பயன்படும் என்ற வகையில் அடக்கத்தோடும் அச்சத் தோடும் அவ்வரலாற்றை சிந்திக்கலாம்.
எறும்புக்குக் கண் இல்லை :-
இதுவரை சிந்தித்த கருத்துக்களால் கண் கெடுவதற்குரிய காரணங்களை எண்ணியது போல இனிக் கண்ணைப் பாதுகாத்தற்குரிய சில வழிமுறைகளையும் சிந்திப்போம். கண் நன்கு தெரிவதற்குப் பொதுவாகக் கீரை வகைகளைக் குறிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. மேலும் அறநோக்குப்படி பார்த்தால் கண்பார்வை இல்லாத ஜீவராசிகளுக்கு உணவு அளித்தலும் கண்ணைக் காப்பாற்றும். உலக உயிர்களில் கண்பார்வையில்லாத உயிர் எறும்பாகும். தோல்காப்பியர் ஓரறிவுயிர், ஈரறிவுயிர் என்பது பற்றி ஒரு நூற்பாக் கூறுகின்றார்.
எறும்பு தின்றால் கண் தெரியும் :-
இத்தகைய கண் பார்வையில்லாத உயிருக்கு நெல் முதலிய தானியங்களைப் புற்றில் இடுதலும், வீடுகளின் முன்னர் அரிசி மாக்கோலம் போடுதலும், காரணமாக உணவுதரும் அறச்செயல்கள் நாட்டில் தொன்று தொட்டு நடைபெறுகின்றன. அரிசி மாக்கோலம் போடும் நிலையில் இப்பொழுது மாறுதலாகக் கல்லாலான மாவைக் கொண்டு கோலம் போடுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.அறத்தின் நோக்கத்திற்கே புறம்பானது ஆகும்.
இங்ஙனம் எறும்பு போன்ற கண்பார்வை இல்லாத உயிரினங்களக்கு உணவை இட்டால் கண்பார் வை நன்கு தெரியும் எனும் பொருளில் தான் உலக வழக்கில் 'எறும்பு தின்றால் கண் தெரியும்" என் னும் பழமொழி வழங்கி வருகிறது. ஆனால் இப் பழமொழியன் உண்மைப் பொருள் அறியாத சிலர் உணவுப் பண்டங்களில் எறும்பு இருந்தால் 'பரவாயில்லை சாப்பிடுங்கள் கண் தெரியும்" என்று மாற்றுப் பொருள் கூறி வருகின்றனர். இது தவறு. எறும்பு தின்றால் கண் தெரியும் என்றால் எறும்பு நாம் போடும் உணவைத் தின்றால் நமக்குக் கண் தெரியும் என்ற பொருளே தவிர எறும்பையே தின்றால் தின்பவருக் கு கண் தெரியும் என்பது பொருளில்லை. பழமொழிகளை விழங்கக் கற்றுக் கொண்ட மக்கள் அவற்றின் உண்மைப் பொருளையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
'எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்" என்பது அன்றோர் வாக்கு. 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே" என்பதை தஞ்சை வாணன் கோவை. 'சமஸ்கிருத மொழியிலும், ஸர்யவஸ்ய காத் ரஸ்ய சிரஸ்ப்ரதாநம், ஸ்ர்வேந்திரியானாம் நயநம் ப்ரநாதம்" என்று இக் கருத்தே கூறப்படுகிறது. மக்களின் உடம்பிலுள்ள கருவிகளை இரண்டு வகையாகப் பிரிப்பர். ஒன்று அறிவுக்கருவி, மற்றொன்று தொழிற்கருவி, அறிவுக்கருவிகள் ஐந்து. தொழிற் கருவிகள் ஐந்து. ஊற்றுணர்வுள்ள உடம்பு, சுவையு ணர்வுள்ள நாக்கு, ஒளியுணர்வுள்ள கண் நாற்ற உணர்வுள்ள மூக்கு, ஒலியுணர்வுள்ள காது எனும் அறி வுக்கருவிகளான ஐம் பொறிகளும், அவற்றை உணர்ந்து செயற்படுத்தும் மூளையும் தலையில் இருக்கும் காரணம் பற்றியே ' எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்" என்றனர்.
இவ் ஐம்பெறிகளுள்ளும் கண் சிறந்த இடம் வகிக்கிறது. காரணம் மற்றய பொறிகள் தன்னிடம் வருவனவற்றை அறிந்து மூளைக்கு உணர்த்துவன. ஆனால் கண் மட்டுமே தொலைவிலுள்ள பொருளை யும் சென்றறிந்து அதனை மூளைக்கு உணர்த்தும் திறனுடையது. கண்ணைத் தவிர மற்றய பொறிகள் நினஇறு பற்றுவன. குணஇ மட்டுமே சென்று பற்றும் சிறப்புடையது. இச் சிறப்புக் கருதியே 'கண்ணில் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே!" என்று தஞ்சை வாணன் கோவையின் ஆசிரியர் பொய்யா மொழிப்புலவர் கூறினார்.
மன்னனே மக்களின் கண்:-
சேக்கிழாரும் மன்னனின் இலக்கணம் கூறவந்த இடத்து
'மண்ணில் வாழ்தரும் மன்னுயிர் கட்கெல்லாம்
கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலன்"
என்று மொழிகின்றார். மன்னனானவன் தன் நாட்டில் வாழும் உயிர்கட்கெல்லாம் உயிராக வாழ்பவன். தன்னிடம் குறைவேண்டியும், முறைவேண்டியும் வருவோர்க்கு ஆவன செய்வதோடல்லாது தானே பல இடங்களுக்கும் சென்று குறைகளையும், முறைகளையும் கண்டும் கேட்டும் அறிந்து அதற்குத் தக்க தீர் வு செய்யும் கட்டுப்பாடுடையவன் என்பது கருத்தாகும். உயிர் நின்று பற்றுவது, கண் சென்று பற்றுவது, மன்னன் உயிராக இருந்து ஒற்றர் வழி அறிந்துமூளையைப்போல் நின்றும் நீதி வழங்க வேண்டும். கண்ணாக இருந்து சென்று நீதி வழங்க வேண்டும் எனும் உட்கருத்தில் தான் சேக்கிழார் பெருமான் 'கண்ணும் ஆவியும் ஆம்பெரும் காவலன்" என்றருளிச் செய்கின்றார்.
இன்ப துன்பத்தை காட்டுவது கண்:-
மேலும் கண்ணிற்குப் பல சிறப்புக்கள் உண்டு. அறிதற் கருவியாக விளங்கும் கண் அறிவுக் கருவிகளிலும் தொழிற் கருவிகளாகிய கை, கால், வாக்கு, எருவாய், கருவாய் எனும் உடலுறுப்புக்களி லும் ஏதாவது நன்றோ தீதோ திகழுமாயின் அதனைப் புலப்படுத்துகின்ற நிலையில் இன்ப துன்பக் கண்ணீர் வடிப்பதும் அக் கண்ணின் சிறப்பாகும். மனிதனின் உள்ளத்திற்குள் நிகழும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் கருவியாக இலங்கும் சிறப்புடையது கண். ஒரு செயலை ஏற்று இசைவுதருவதும் புறக்கணிப்பதும் கண்ணின் புலப்பாட்டிலேயே அறிந்து கொள்ள இயலும். அத்தகைய சிறப்புடைய கண் திருடனைக் காட்டிக் கொடுக்கவும் ஒழுக்கம் இல்லாதவனை உலகுக்கு உணர்த்தவும் உரிய கருவியாக விளங்குகின்றது.
கற்பினைக் காட்டுவது கண் :-
இதனால்தான் சீதாபிராட்டியின் கற்புத்திறனை இராமபிரானுடன் கூறிவந்த அனுமான் ' கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்" என்று விளக்குகின்றான். சீதை உயிரோடுதான் இருக்கின்றார் பிறர் கூறக் கேட்டு வரவில்லை. நானே என் கண்களால் கண்டுவந்தேன். என்று அனுமான் கூறுகின்றார். என்பதாகப் பொருள் கூறலாம். ஆனால் அம்மையார் கற்போடுதான் இருக்கிறார் என்பதை எங்ஙனம் கூற முடியும் என்பதற்கு விளக்கம் கூறவே இத்தொடருக்கு இன்னும் ஆழமாகச் சிந்தித்துப் பொருள் விளக்கம் காணுதல் அவசியமாகின்றது. 'கண்டனன்" என்பதற்கு அனுமன் தான் தன் கண்களால் பார்த் தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் பார்த்தேன் என்ற பொருளும் பின்னே உள்ள கண்களால் என்னும் சொல்லிற்குச் சீதையின் கண்களால் கற்பினுக் கணியாக இருப்பதைப் பார்த்தே ன் என்னும் பொருளும் கொள்ளுதல் ஒருவகை. மேலும் அனுமன் கண்களால் சீதாபிராட்டியை கண்டன ன் என்றும், சீதாபிராட்டியின் கண்களால் அவரது கற்புநெறி பிறளாது அணியாகத் திகழ்வதைக் கண்டனன் என்றும் கொள்ளுதல் சிறப்பாகும்.
எனவே கண்ணானது மற்றப் பொருள்களை அறிந்து மூளைக்கு உணர்த்துவதோடல்லாது கண்களையுடைய மனிதனின் உள்ள உணர்ச்சிகளைச் சமுதாயத்திற்கு உணர்த்தும் உயர் கருவியாக வும் விளங்குகின்றது.
காக்கவேண்டிய சிறப்பினது கண் :-
இத்தகைய சிறப்புக்கள் பலவுடைய கண்களைக் காண்பதற்கு இறைவனே தக்க பாதுகாப்பு கொடு த்திருக்கின்றார். கண்ணை இமை காப்பது போல் என்று உலகோர் கூறுவதும் ஈண்டு நினைவு கூரத்தக் கது. காக்கும் இமையை கொடுத்துக் காத்துக் கொள் என்று ஆண்டவனே அறிவுறுத்தியுள்ள கண்ணை இன்று பலர் பல காரணங்களினால் கெடுத்துக் கொள்கிறார்கள்.
கண்கெடுவதற்குரிய காரணங்கள் பலவாகும். பொதுவாக மனித வாழ்வில் ஒழுங்கு நெறிமுறைகள் கெடுமானால் அவை கண்களைப் பாதிக்கும். குறிப்பாக ஒழுக்கக் கேட்டினாலும், பொய் சொல்லுவதாலும், கோவப்படுவதாலும், திரைப்படம் தொலைக்காட்சி பார்ப்பதனாலும் கண் கெடும். மற்ற க் காரணங்கள் தெளிவாக விளங்கினாலும் பொய் சொல்வதினால் கண் பாதிக்கும் என்பது பலருக்குப் பரிவதில்லை. பொய் சொல்லுகின்ற போது அவனது மனம் அவனை உறுத்துகின்றது. அதனால் உடம்பிலுள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இவ் வகையில் கண் கெடுகின்றது.
சுந்தரர் வாழ்வில் கண் :-
பொச்சாட்சி சொன்னவர்களுக்கும் கண் தெரியாமல் போய்விடும். ஏனெனின்; 'சாட்சி" என்றாலேயே கண்ணால் கண்டதை கூறுதல் என்பது பொருளாகும். “சட்சு” என்னும் சொல்லுக்குக் கண் என்பது பொ ருளாகும். அதன் அடிப்படையில் வந்ததே “சாட்சி” என்னும் சொல். ஆதலின் சாட்சி சொல்லும் பொழுது தன் கண்களால் காணாத ஒன்றைக் கூறுவானேயானால் இது அவனது மனத்தை உறுத்திப் பின்னே தண்டனைக் குரியதாகிப் கண்களைப் பாதிக்கும். சபதம் பொயத்தாலும் கண் கெடும் என்பதற்கு நாம் ஆசாரிய மூhத்தியாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருள் வரலாற்றை இவ் வகையில் எடுத்துக் கொள்ள லாம். இது தவறுடையது எனினும் வாழ்விய நெறிமுறைகளை விளக்கிக் கொள்வதற்கும் கடவுளின் நடுநிலைத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கும் பயன்படும் என்ற வகையில் அடக்கத்தோடும் அச்சத் தோடும் அவ்வரலாற்றை சிந்திக்கலாம்.
எறும்புக்குக் கண் இல்லை :-
இதுவரை சிந்தித்த கருத்துக்களால் கண் கெடுவதற்குரிய காரணங்களை எண்ணியது போல இனிக் கண்ணைப் பாதுகாத்தற்குரிய சில வழிமுறைகளையும் சிந்திப்போம். கண் நன்கு தெரிவதற்குப் பொதுவாகக் கீரை வகைகளைக் குறிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. மேலும் அறநோக்குப்படி பார்த்தால் கண்பார்வை இல்லாத ஜீவராசிகளுக்கு உணவு அளித்தலும் கண்ணைக் காப்பாற்றும். உலக உயிர்களில் கண்பார்வையில்லாத உயிர் எறும்பாகும். தோல்காப்பியர் ஓரறிவுயிர், ஈரறிவுயிர் என்பது பற்றி ஒரு நூற்பாக் கூறுகின்றார்.
எறும்பு தின்றால் கண் தெரியும் :-
இத்தகைய கண் பார்வையில்லாத உயிருக்கு நெல் முதலிய தானியங்களைப் புற்றில் இடுதலும், வீடுகளின் முன்னர் அரிசி மாக்கோலம் போடுதலும், காரணமாக உணவுதரும் அறச்செயல்கள் நாட்டில் தொன்று தொட்டு நடைபெறுகின்றன. அரிசி மாக்கோலம் போடும் நிலையில் இப்பொழுது மாறுதலாகக் கல்லாலான மாவைக் கொண்டு கோலம் போடுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.அறத்தின் நோக்கத்திற்கே புறம்பானது ஆகும்.
இங்ஙனம் எறும்பு போன்ற கண்பார்வை இல்லாத உயிரினங்களக்கு உணவை இட்டால் கண்பார் வை நன்கு தெரியும் எனும் பொருளில் தான் உலக வழக்கில் 'எறும்பு தின்றால் கண் தெரியும்" என் னும் பழமொழி வழங்கி வருகிறது. ஆனால் இப் பழமொழியன் உண்மைப் பொருள் அறியாத சிலர் உணவுப் பண்டங்களில் எறும்பு இருந்தால் 'பரவாயில்லை சாப்பிடுங்கள் கண் தெரியும்" என்று மாற்றுப் பொருள் கூறி வருகின்றனர். இது தவறு. எறும்பு தின்றால் கண் தெரியும் என்றால் எறும்பு நாம் போடும் உணவைத் தின்றால் நமக்குக் கண் தெரியும் என்ற பொருளே தவிர எறும்பையே தின்றால் தின்பவருக் கு கண் தெரியும் என்பது பொருளில்லை. பழமொழிகளை விழங்கக் கற்றுக் கொண்ட மக்கள் அவற்றின் உண்மைப் பொருளையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
முருகன்
இறைவன் ஞான வடிவினன். ஞான பண்டிதன் சக்தியின் துணைகொண்டு உலகைப் படைத்துக் காத்து ரட்சிக்கின்றான். அதைவிளக்கும் சொருபமே முருகன். முருகன் ஞான சொருபம். வள்ளி இச்சா சக்தி (விருப்பம், ஆசை). தெய்வானை கி¡¢யா சக்தி (செயலாற்றல்). வள்ளித் திருமணத்தில் சிறந்த தத்துவம் அடங்கியுள்ளது. இறைவன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன். இறைவன் சாதி வித்தியாசங்களைப் பார்ப்பதில்லை. ஆகவே இந்து சமயம் சாதி வித்தியாசக் கொள்கையை ஆதா¢க்கவில்லை என்பதை வள்ளித்திருமணம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் வள்ளித்திருமணம் வள்ளியாகிய சீவன், போ¢ன்பமாகிய சிவத்துடன் கலப்பதை விளக்குகிறது.
முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இக பர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்க வேண்டும். அவ்வறிவைத் தருபவன் .. வாலறிவனாகிய .. இறைவனே.
இதையே திருவள்ளுவர் ..
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
... என்கிறார்.
முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்பு¡¢யும்.
கூவுகின்ற கோழி நாத வடிவானது. கோழிக்கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன். மயில் மனத்தின் சின்னம். பா¢சுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது.
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன். ஆகவே அவனை வைத்தியநாதன் என்றும் வாழ்த்துகின்றோம். கிடைக்காத பொருட்களையும், பேறுகளையும் வேண்டும் பக்தர்களுக்கு வழங்குகின்றவனாதலால் வரதராசன் என்றும் பெயர் பெற்றவன் முருகன்.
முருகன் மூன்று அசுரர்களை அழிக்கின்றார் என்று கந்த புராணத்தில் கூறப்படுகின்றது. மனிதனின் மனத்தை வாட்டுகின்ற ஆணவம், மலம், மாயை .. எனப்படும் மூன்று மலங்களே அந்த அசுரர்கள். நமது மனதிலே தோன்றி, நம்முடைய மனதிலே இருக்கின்ற நல்ல எண்ணங்களை வளர்த்து, தீய எண்ணங்களை வென்று, சிறப்பாக வாழ முயற்சிக்கின்றான். அதற்காக இறைவனை வணங்குகின்றான். கந்தர் சஷ்டி விரதம் அனுஷ்டிப்பதும் மனதைக் கட்டுப்படுத்தி நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளும் பொருட்டே.
முருகனின் சிறப்புக்களை புகழ்ந்து பாடி அவனருளைப்பெற அருணகி¡¢நாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை .. முதலிய பாடல்களில் சிலவற்றையாவது பாராயணம் செய்தல் நலந்தரும்.
ஆறுதலை முருகன் ஆறுதலைத் தருவான்.
முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இக பர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்க வேண்டும். அவ்வறிவைத் தருபவன் .. வாலறிவனாகிய .. இறைவனே.
இதையே திருவள்ளுவர் ..
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
... என்கிறார்.
முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்பு¡¢யும்.
கூவுகின்ற கோழி நாத வடிவானது. கோழிக்கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன். மயில் மனத்தின் சின்னம். பா¢சுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது.
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன். ஆகவே அவனை வைத்தியநாதன் என்றும் வாழ்த்துகின்றோம். கிடைக்காத பொருட்களையும், பேறுகளையும் வேண்டும் பக்தர்களுக்கு வழங்குகின்றவனாதலால் வரதராசன் என்றும் பெயர் பெற்றவன் முருகன்.
முருகன் மூன்று அசுரர்களை அழிக்கின்றார் என்று கந்த புராணத்தில் கூறப்படுகின்றது. மனிதனின் மனத்தை வாட்டுகின்ற ஆணவம், மலம், மாயை .. எனப்படும் மூன்று மலங்களே அந்த அசுரர்கள். நமது மனதிலே தோன்றி, நம்முடைய மனதிலே இருக்கின்ற நல்ல எண்ணங்களை வளர்த்து, தீய எண்ணங்களை வென்று, சிறப்பாக வாழ முயற்சிக்கின்றான். அதற்காக இறைவனை வணங்குகின்றான். கந்தர் சஷ்டி விரதம் அனுஷ்டிப்பதும் மனதைக் கட்டுப்படுத்தி நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளும் பொருட்டே.
முருகனின் சிறப்புக்களை புகழ்ந்து பாடி அவனருளைப்பெற அருணகி¡¢நாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை .. முதலிய பாடல்களில் சிலவற்றையாவது பாராயணம் செய்தல் நலந்தரும்.
ஆறுதலை முருகன் ஆறுதலைத் தருவான்.
'ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி"
'ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி"
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி
ஒவ்வொரு மறைப்பாட்டின் முடிவிலும் "ஓம் ஷாந்தி" என்று மூன்றுமுறை இந்தப் பண் பாடப்படுவது - மனிதனை மூன்று ஆபத்திலிருந்து காக்கவே அவையாவன:-
1. அதியாத்மா" - எனும் "தன்னால் உருவாக்கப்பட்ட ஆபத்து
2. அதிபௌதிகம்" - எனும் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட கெடுதல்
3. அதிதெய்வீகம்" - எனும் கடவுள்களாலும் தேவதைகளாலும் ஏற்படுத்தப்பட்ட ஆபத்து
இம்மூன்று ஆபத்துகளிலிருந்தும் நாம் காப்பாற்றப்பட்டு இவைகளில் சிக்காமல் தாண்டிப்போய் 'பரப்ப்ரம்ம" நிலை எனும் முழுமுதற்கடவுளிடம் ஒன்றிவிட வேண்டும் என்ற குறிக்கோளைக் கருதி வேண்டப்படுகிறது.
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி
ஒவ்வொரு மறைப்பாட்டின் முடிவிலும் "ஓம் ஷாந்தி" என்று மூன்றுமுறை இந்தப் பண் பாடப்படுவது - மனிதனை மூன்று ஆபத்திலிருந்து காக்கவே அவையாவன:-
1. அதியாத்மா" - எனும் "தன்னால் உருவாக்கப்பட்ட ஆபத்து
2. அதிபௌதிகம்" - எனும் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட கெடுதல்
3. அதிதெய்வீகம்" - எனும் கடவுள்களாலும் தேவதைகளாலும் ஏற்படுத்தப்பட்ட ஆபத்து
இம்மூன்று ஆபத்துகளிலிருந்தும் நாம் காப்பாற்றப்பட்டு இவைகளில் சிக்காமல் தாண்டிப்போய் 'பரப்ப்ரம்ம" நிலை எனும் முழுமுதற்கடவுளிடம் ஒன்றிவிட வேண்டும் என்ற குறிக்கோளைக் கருதி வேண்டப்படுகிறது.
இறைவன் 'சொல்லற் கரியான்" சொல்லுவதற்கும் 'அறியான்"
சிவபுராணத்தில் மணிவாசகப் பெருந்தகை முடிக்கும்போது சிவபெருமானுக்கு '' சொல்லற்கு அரியானை '' என்று ஒரு அடைமொழி அளிக்கிறார்கள். இதற்கு சொற்களால் வருணித்து கூற இயலாதவன் என்று பொருள். சிறிய ' ரி ' க்கு பதிலாக பெரிய ' றி ' போட்டால் பொருள் மாறிவிடும், '' சொல்லவதற்கு அறியான் 'என்றாகி விடும் இதற்கு" சொல்லுவதற்கு தெரியாதவன்" என்று பொருள் வரும். எல்லாம் அறிந்த பரம் பொருளுக்கு சொல்லத் தெரியாது என்று சொல்லலாமா எனக் கேட்டால் அப்படியும் சொல்லலாம் என்றே தோன்றுகிறது. அவருக்கு 'இல்லை"எனச் சொல்லத் தெரியாது. கேட்டவர்க்கு கேட்டபடி இல்லை எனச் சொல்லாமல் வாரி வழங்குபவன் இறைவன், அந்த வகையில் அவன் சொல்லத் தெரியாதவனே.
தாய்
தாய்
இந்த உலகில் எந்தவொரு உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் ஆண், பெண் என இரண்டு வகை இருக்கும். ஆண், பெண் இருவருக்கும் ஒவ்வொரு காரியத்திலும் சமமான பொறுப்பு இருந்தாலும் தாயைப் பற்றித்தான் (பெண் இனத்தைத்தான்) அதிகமாக, விசேஷமாக, கௌரவமாக எல்லா அறநூல்களிலும் சொல்லப்படுகிறது. (நம்முடைய அறநூலான வேதத்தை எடுத்துக் கொண்டால் "வேத மாதா" என்றுதான் அதை நாம் கூறுகிறோம். அந்த வேதத்திலும் பல உபதேசங்கள் அருளியிருந்தாலும், முதன் முதலில் 'மாத்ருதேவோ பவ' என்று மாதாவை முதன்மையாகச் சொல்லிவிட்டு, அடுத்ததாகத்தான் 'பித்ரு தேவோ பவ' என்று தகப்பனாரைச் சொல்லுகிறது, தேவாரப்பாடல்களிலும் இறைவனைப்பற்றிப் பாடும் போது. அம்மையே. அப்பா. ஒப்பிலா மணியே என்று முதன்முதலில் அம்மாவைத்தான் குறிப்பிடுகிறது, அன்னையும். பிதாவும் முன்னறி தெய்வம் என்று அன்னையைத் தான் முதலில் குறிப்பிடுகிறது, 'தாயிற் சிறந்த தயாபரத் தத்துவனே' என்று சிவ புராணம் கூறுகிறது, தாயுமானவராக இறைவன் திருச்சியில் விளங்குகிறார்.
ஆணையிடும் போது கூடச் சிலர் தாயின் மேல் ஆணை என்றுதான் கூறுவார்கள், கெட்ட பிள்ளை இருப்பான், கெட்ட தாய் ஒரு நாளும் இருக்க மாட்டாள் என்பது பழமொழி, ராமர் காட்டுக்குப் போகும் போது தாயான கௌஸல்யை முதலியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றதாக வரலாறு, மகாபாரத்தைத் தொடங்கும் போது துரியோதனன் தன் தாயான காந்தாரியிடம் ஆசி பெற்று சென்றதாகவும் வரலாறு. பொதுவாக வீரர்கள் யுத்தத்திற்குச் செல்லும் போது ஆண்களுக்கு பெண்கள்தான் வீரத் திலகமிட்டு அனுப்புவார்கள். பெண் குழந்தையைத் தான் நாம் கன்னிகா பூஜை என்று பூஜை செய்கிறோம், வயதான பிறகு சுவாசினி பூஜை என்ற இல்லறத் தாயக்குத்தான் பூஜை செய்கிறோம், இந்து மதத்தில் புருஷர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் பூர்த்தி அடைய வேண்டும் என்றால் கடைசியாக இல்லத்தரசிகள் ஜலத்தைப் புருஷன் கையில் விட்டால்தான் பூர்த்தியடைகிறது.
இந்தக் காலத்தில்தான் ஆண். பெண் இருவரும் சம்பாதிக்கிறார்கள் கொஞ்ச காலம் முன்பு வரை ஆண்கள் சம்பாதிப்பதற்கு மாத்திரம் உரிமையுள்ளவராகக், சம்பாதிக்கும் பணத்தை இல்லத்தரசிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகத்தான் வாழ்க்கைக்குத் தேவையான அவ்வளவும் வரவு. செலவு செய்யப்பட்டன. வீட்டிலுள்ள புருஷன் எவ்வளவோ தவறான வழிகளில் சென்றாலும், இல்லத்தரசிகள் பொறுமையுடன் இருந்து தங்களுக்கு என்று சொந்த எண்ணங்கள், ஆசைகள் இருந்தாலும் அவைகளைக் காட்டிலும் தன்னுடைய கணவனுடைய வாழ்க்கையே பெரிதென மதித்துக் கணவனை நல்வழிப்படுத்துவதில், கணவனைத் திருப்தி செய்விப்பதில். பல பெண்மணிகள் எடுத்துக்காட்டாக இருந்தார்கள்.
சைவ சமயத்தைச் சேர்ந்த அப்பர் பெருமான். ஒரு சமயத்தில் சமண சமயத்தைச் சார்ந்த பொழுது, திரும்பவும் தங்களுடைய சொந்த சமயமான சைவ சமயத்திற்கு அப்பர் பெருமானைக் கொண்டு வருவதற்காக இறைவனிடம் பலவித
பிரார்த்தனைகளெல்லாம் செய்து- தவமிருந்து சோதனைகள் எல்லாம் கடந்து, தம்முடைய சொந்தச் சகோதரரான அப்பர் பெருமானைச் சைவ சமயத்திற்குத் திருப்பிய பெருமை, அவரது சகோதரியான திலகவதியாரையே சாரும்.
இதே போல் மதுரையில் கூன்பாண்டியன் சொந்த சமயமான சைவ சமயத்தை விட்டுச் சமண சமயத்திற்குச் சென்ற போது ரகசியமாகவும். பக்தியோடும் உறுதியோடும் தன் கணவனுக்காக இறைவனைப் பிரார்த்தனை செய்து, தவமிருந்து தன்னுடைய சொந்த சமயமான சைவ சமயத்திற்குத் திருப்பிக் கொண்டு வந்தது, கூன்பாண்டியனின் இல்லத்தரசியான மங்கயைர்க்கரசியாரே ஆகும்.
ஒரு சமயம் காரைக்கால் அம்மையாரிடம் அவரது கணவன் இரண்டு உயர்ந்த மாங்கனிகளைக் கொடுத்தனுப்ப அவைகளிலே ஒன்றை அம்மையார் வீட்டீற்கு வந்த விருந்தாளிக்குக் கொடுக்.க மற்றொரு கனியை. சாப்பிடும் சமயத்தில் தன் கணவனுக்குக் கொடுத்தாள். அந்த மாங்கனியின் சுவையை அனுபவித்த அவள் கணவன் மற்றோரு மாங்கனியையும் கேட்டான். அப்பொழுது காரைக்கால் அம்மையார் மிகவும் பயந்து போய்க் கணவன் கேட்பதைக் கொடுக்க முடியாமல் இருக்கிறதே என வருந்தி, எப்படியும் கணவனின் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என இறைவனிடம் கெஞ்சிப் பிரார்த்தித்தாள். இறைவனும் காரைக்கால் அம்மையாருக்கு கணவனிடம் உள்ள பக்தியும், மரியாதையும், இறைவனிடமுள்ள நம்பிக்கையும் பார்த்துப் பூரித்து ஓர் மாங்கனியை அளித்தார். அந்த மாங்கைனியைப் பெற்ற காரைக்கால் அம்மையார். அதைக்கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வணங்கி. கணவனது இஷ்டத்தை மாங்கனி கொடுப்பது மூலம் நிறைவேற்றினாள்.
அப்பொழுது கணவன் "முன்பு சாப்பிட்ட பழத்தைக் காட்டிலும் இது வேறாகவும் அதிக ருசியுள்ளதாகவும் இருக்கிறதே. இது எப்படி வந்தது?" என்று கேட்டான். அப்பொழுது காரைக்கால் அம்மையார் "தாங்கள் அனுப்பிய பழத்தில் ஒன்றை விருந்தாளிக்குக் கொடுத்தேன். தாங்கள் மற்றுமொரு பழம் கேட்டதும் இறைவனிடம் பக்தி செய்து மனமுருகி இறைவன் மூலம் பெற்றேன். ஆகவே இது வேறு கனியாகவும், அதிக ருசியுள்ளதாகவும் இருக்கிறது" என உண்மை நிலையை விளக்கினார். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில் கூடக் கணவன் மனைவியரிடையே புரிந்து கொள்ளும் தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வரவேண்டும். மனைவி கணவனுக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் பக்தியையும், மன உறுதியையும் கொள்ள வேண்டும், உயர்ந்த தாய் ஸ்தானத்தில் பெண்மணிகள் அன்றும், இன்றும், என்றும் போற்றும் வகையிலே விளங்கி வருகிறார்கள்.
இந்த உலகில் எந்தவொரு உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் ஆண், பெண் என இரண்டு வகை இருக்கும். ஆண், பெண் இருவருக்கும் ஒவ்வொரு காரியத்திலும் சமமான பொறுப்பு இருந்தாலும் தாயைப் பற்றித்தான் (பெண் இனத்தைத்தான்) அதிகமாக, விசேஷமாக, கௌரவமாக எல்லா அறநூல்களிலும் சொல்லப்படுகிறது. (நம்முடைய அறநூலான வேதத்தை எடுத்துக் கொண்டால் "வேத மாதா" என்றுதான் அதை நாம் கூறுகிறோம். அந்த வேதத்திலும் பல உபதேசங்கள் அருளியிருந்தாலும், முதன் முதலில் 'மாத்ருதேவோ பவ' என்று மாதாவை முதன்மையாகச் சொல்லிவிட்டு, அடுத்ததாகத்தான் 'பித்ரு தேவோ பவ' என்று தகப்பனாரைச் சொல்லுகிறது, தேவாரப்பாடல்களிலும் இறைவனைப்பற்றிப் பாடும் போது. அம்மையே. அப்பா. ஒப்பிலா மணியே என்று முதன்முதலில் அம்மாவைத்தான் குறிப்பிடுகிறது, அன்னையும். பிதாவும் முன்னறி தெய்வம் என்று அன்னையைத் தான் முதலில் குறிப்பிடுகிறது, 'தாயிற் சிறந்த தயாபரத் தத்துவனே' என்று சிவ புராணம் கூறுகிறது, தாயுமானவராக இறைவன் திருச்சியில் விளங்குகிறார்.
ஆணையிடும் போது கூடச் சிலர் தாயின் மேல் ஆணை என்றுதான் கூறுவார்கள், கெட்ட பிள்ளை இருப்பான், கெட்ட தாய் ஒரு நாளும் இருக்க மாட்டாள் என்பது பழமொழி, ராமர் காட்டுக்குப் போகும் போது தாயான கௌஸல்யை முதலியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றதாக வரலாறு, மகாபாரத்தைத் தொடங்கும் போது துரியோதனன் தன் தாயான காந்தாரியிடம் ஆசி பெற்று சென்றதாகவும் வரலாறு. பொதுவாக வீரர்கள் யுத்தத்திற்குச் செல்லும் போது ஆண்களுக்கு பெண்கள்தான் வீரத் திலகமிட்டு அனுப்புவார்கள். பெண் குழந்தையைத் தான் நாம் கன்னிகா பூஜை என்று பூஜை செய்கிறோம், வயதான பிறகு சுவாசினி பூஜை என்ற இல்லறத் தாயக்குத்தான் பூஜை செய்கிறோம், இந்து மதத்தில் புருஷர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் பூர்த்தி அடைய வேண்டும் என்றால் கடைசியாக இல்லத்தரசிகள் ஜலத்தைப் புருஷன் கையில் விட்டால்தான் பூர்த்தியடைகிறது.
இந்தக் காலத்தில்தான் ஆண். பெண் இருவரும் சம்பாதிக்கிறார்கள் கொஞ்ச காலம் முன்பு வரை ஆண்கள் சம்பாதிப்பதற்கு மாத்திரம் உரிமையுள்ளவராகக், சம்பாதிக்கும் பணத்தை இல்லத்தரசிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகத்தான் வாழ்க்கைக்குத் தேவையான அவ்வளவும் வரவு. செலவு செய்யப்பட்டன. வீட்டிலுள்ள புருஷன் எவ்வளவோ தவறான வழிகளில் சென்றாலும், இல்லத்தரசிகள் பொறுமையுடன் இருந்து தங்களுக்கு என்று சொந்த எண்ணங்கள், ஆசைகள் இருந்தாலும் அவைகளைக் காட்டிலும் தன்னுடைய கணவனுடைய வாழ்க்கையே பெரிதென மதித்துக் கணவனை நல்வழிப்படுத்துவதில், கணவனைத் திருப்தி செய்விப்பதில். பல பெண்மணிகள் எடுத்துக்காட்டாக இருந்தார்கள்.
சைவ சமயத்தைச் சேர்ந்த அப்பர் பெருமான். ஒரு சமயத்தில் சமண சமயத்தைச் சார்ந்த பொழுது, திரும்பவும் தங்களுடைய சொந்த சமயமான சைவ சமயத்திற்கு அப்பர் பெருமானைக் கொண்டு வருவதற்காக இறைவனிடம் பலவித
பிரார்த்தனைகளெல்லாம் செய்து- தவமிருந்து சோதனைகள் எல்லாம் கடந்து, தம்முடைய சொந்தச் சகோதரரான அப்பர் பெருமானைச் சைவ சமயத்திற்குத் திருப்பிய பெருமை, அவரது சகோதரியான திலகவதியாரையே சாரும்.
இதே போல் மதுரையில் கூன்பாண்டியன் சொந்த சமயமான சைவ சமயத்தை விட்டுச் சமண சமயத்திற்குச் சென்ற போது ரகசியமாகவும். பக்தியோடும் உறுதியோடும் தன் கணவனுக்காக இறைவனைப் பிரார்த்தனை செய்து, தவமிருந்து தன்னுடைய சொந்த சமயமான சைவ சமயத்திற்குத் திருப்பிக் கொண்டு வந்தது, கூன்பாண்டியனின் இல்லத்தரசியான மங்கயைர்க்கரசியாரே ஆகும்.
ஒரு சமயம் காரைக்கால் அம்மையாரிடம் அவரது கணவன் இரண்டு உயர்ந்த மாங்கனிகளைக் கொடுத்தனுப்ப அவைகளிலே ஒன்றை அம்மையார் வீட்டீற்கு வந்த விருந்தாளிக்குக் கொடுக்.க மற்றொரு கனியை. சாப்பிடும் சமயத்தில் தன் கணவனுக்குக் கொடுத்தாள். அந்த மாங்கனியின் சுவையை அனுபவித்த அவள் கணவன் மற்றோரு மாங்கனியையும் கேட்டான். அப்பொழுது காரைக்கால் அம்மையார் மிகவும் பயந்து போய்க் கணவன் கேட்பதைக் கொடுக்க முடியாமல் இருக்கிறதே என வருந்தி, எப்படியும் கணவனின் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என இறைவனிடம் கெஞ்சிப் பிரார்த்தித்தாள். இறைவனும் காரைக்கால் அம்மையாருக்கு கணவனிடம் உள்ள பக்தியும், மரியாதையும், இறைவனிடமுள்ள நம்பிக்கையும் பார்த்துப் பூரித்து ஓர் மாங்கனியை அளித்தார். அந்த மாங்கைனியைப் பெற்ற காரைக்கால் அம்மையார். அதைக்கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வணங்கி. கணவனது இஷ்டத்தை மாங்கனி கொடுப்பது மூலம் நிறைவேற்றினாள்.
அப்பொழுது கணவன் "முன்பு சாப்பிட்ட பழத்தைக் காட்டிலும் இது வேறாகவும் அதிக ருசியுள்ளதாகவும் இருக்கிறதே. இது எப்படி வந்தது?" என்று கேட்டான். அப்பொழுது காரைக்கால் அம்மையார் "தாங்கள் அனுப்பிய பழத்தில் ஒன்றை விருந்தாளிக்குக் கொடுத்தேன். தாங்கள் மற்றுமொரு பழம் கேட்டதும் இறைவனிடம் பக்தி செய்து மனமுருகி இறைவன் மூலம் பெற்றேன். ஆகவே இது வேறு கனியாகவும், அதிக ருசியுள்ளதாகவும் இருக்கிறது" என உண்மை நிலையை விளக்கினார். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில் கூடக் கணவன் மனைவியரிடையே புரிந்து கொள்ளும் தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வரவேண்டும். மனைவி கணவனுக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் பக்தியையும், மன உறுதியையும் கொள்ள வேண்டும், உயர்ந்த தாய் ஸ்தானத்தில் பெண்மணிகள் அன்றும், இன்றும், என்றும் போற்றும் வகையிலே விளங்கி வருகிறார்கள்.
தோப்புக்கரணம்
ஒரு முறை கஜமுகாசுரன் என்பவன் தேவர்களை எல்லாம் அடக்கி ஆண்டு, அவர்கள் தன்னைக் கண்ட போதெல்லாம் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தான்.
அந்த கஜமுகாகரனை விநாயகர் வென்றதும் தேவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்க, "நாங்களும் பெருமானாகிய தங்களைக் காணும் போதெல்லாம் இந்த இரு வழிபாடுகளையும் செய்கிறோம்; விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று வேண்டிக் கொண்டார்கள். அது முதல் அந்த வழிபாடுகள், விநாயகர் உகக்கும் வழிபாடாக ஆகின.
அந்த கஜமுகாகரனை விநாயகர் வென்றதும் தேவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்க, "நாங்களும் பெருமானாகிய தங்களைக் காணும் போதெல்லாம் இந்த இரு வழிபாடுகளையும் செய்கிறோம்; விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று வேண்டிக் கொண்டார்கள். அது முதல் அந்த வழிபாடுகள், விநாயகர் உகக்கும் வழிபாடாக ஆகின.
உலகப் பொதுமறையில் பக்தியுணர்வு
'தமிழுக்கும் அமுதென்று பேர்"…… இத்தொடரில், தமிழ், அமிழ்து இரண்டும் பெற்றுள்ள இடம் தெய்வீகத் தன்மை கொண்டது. பிறப்பு, வாழ்வு, இறப்பு என்பதை அனைத்து உயிர்களுமே உணர்கின்றன. பிறந்த உயிர்கள், உண்டு உயிர்த்து வாழ்ந்து மறைவதைத் தம் வாழ்வின் நோக்கமாகக் கொள்ளுதல் கூடாது. இறைவன், தன் சாயலாக, தன் படைப்பின் மேலான உயர்ந்த படைப்பாக மனிதனைப் படைத்தான். படைத்தவனானதன்னை உணரவேண்டும் என்பதே இறைவன் மனிதனைப் படைத்ததன் நோக்- கம். பிரபஞ்ச தோற்றங்களுக்குப் பின்னால் நித்தியமானதாக, அனைத்துயிர்களின் ஆன்மாவாக ஒரு மெய்- பொருள் உள்ளது. வெவ் வேறு வில்களுக்கு ஒரேகை போலதான் அம்மெய்பொருள். அதனை உணர்பவனே பக்திமான்.
தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ள உதவும் முதல்படி பக்தி. பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற மனிதன் அடைந்துள்ள பெருமைகளுள் சிறப்பானது வணங்கும் தன்மை. தன்னை விட அனைத்திலும் மிக்கவரை வணங்கும் தன்மையுடைய மனிதன், தான் தோன்றியிருக்கும் உலகம், அதன் இயக்கம், அதில் நடைபெறும் சிறப்புக்கள் எல்லாவற்றிற்கும் தலைமையாக ஒரு பொருள் இருந்தல் வேண்டும் எனக்கருதி அதனைப் பேரன்புடன் வழிபடலானான். இப்படி, மனிதன் ஆற்றும் பணிகள் எல்லாம் அன்பினை அடிப்படையாகக் கொண்டுள்ளது எனலாம்.
'அன்பு" என்பதும் மூன்றெழுத்து, அதன் உச்சக்கட்டமான 'பக்தி" என்பதும் மூன்றெழுத்து. 'அன்பு" எனும் சொல் பல பொருள்களில் குறிப்பிடப்படுகிறது. தனக்குச் சமமாக உள்ளோரிடம் காட்டும் அன்பு, 'நட்பு" என்று கூறப்படுகிறது. ( நட்பு மார்க்கத்தில் தன் பக்தியை வெளிப்படுத்திய சுந்தரர் கதையைச் சான்றாகக் கொள்ளலாம். தமக்குக் கீழோரிடம் காட்டம் அன்பு 'இரக்கம்" அல்லது 'அருளுடமை" எனப்ப-டுகிறது. பெரியோர்களிடம் காட்டும் அன்பு 'பக்தி" ஆகிறது.
பெற்றோர் தம் மக்களிடம் காட்டும் அன்பு, 'பாசம்" எனப்படுகிறது. இல்வாழ்க்கையில் இதுவே 'காதல்" எனப்படுகிறது. தாய்மொழி, தாய்நாடு இவற்றின் மீது காட்டப்படும் அன்பைப் 'பற்று" என்பர். அந்த அன்பின் முதிர்ந்த நிலை, இறைவன் நம்மீது காட்டும் அன்பு 'அருள்" எனப்படுகிறது. எல்லா உணர்ச்சிக-ளுக்கும் தாயாக விளங்குவது அன்பு. அன்பின் முதிர்நிலையே பக்தி எனலாம். பக்தியின் வேற்றுருவே அன்பு எனலாம்.
ஆன்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையேயுள்ள உறவைக் குறிப்பது பக்தி. உயிர்கள் ஒவ்வொன்றும் இறைத்தன்மை கொண்டவையே. ஓருயிர் இன்னொரு உயிரிடம் கொள்ளும் பக்திதான் அன்பு, பாசம், கருணை, அருள், பற்று, காதல் என்ற பல பெயர்களைக் கொண்டுள்ளது. நுட்பமும், திட்-பமும் வாய்ந்த அருமையான இவ்வுணர்வைத் தெய்வப்புலவர் தம் உலகப் பொதுமறையில் எங்ஙனம் வெளிப்படுத்தியுள்ளார்.
காலந்தோறும் தோன்றியுள்ள தமிழில் தமிழிலக்கியங்களுள், ஏறக்குறைய உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது என்ற சிறப்பினைப் பெற்றுள்ள தெய்வப் பனுவல், தெய்வப் புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, பக்தியுணர்வை உலகினுக்கீந்த நிலையைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
கடவுள் வாழ்த்தில் பக்தி வெளிப்படுமாறு எழுத்தைக் கொண்டு எழுதியவனை எண்ணிப் பார்க்கிறோம். அதேபோல உலகத்தைக் கொண்டு அதைப்படைத்த இறைவனை எண்ணிப் பாhக்க வேண்டு- ம். அவனை நாம் வேறெங்கும் தேடவேண்டியதில்லை. நம் மனதில் நம் உடனே பிறந்த அவனிடம் அடை-க்கலம் புகுந்தோர் நலமாக வாழ்வர். விருப்பு வெறுப்பு இல்லாமல் அவரைச் சரண் புகுந்தால் நல்வினை தீவினைகளாகிய இரு வினைகளும் நம்மைச் சேரா. விருப்பு வெறுப்புகளை விலக்கி, அவற்றிற்கு காரண- மான ஐம்புலன்களின் ஆசைகளைக் குறைக்க வேண்டும். எத்துணைக்கெத்துணை நன்னெறிகளைப் பின்ப-ற்றுகிறோமோ அத்துணைக்கத்துணை நல்வாழ்வு கிட்டும். தன்னிகரில்லா இறைவனைச் சரணடைந்தோர், தம் மனக்கவலைகளை போக்கிக்கொள்ள முடியும். மனம் என்று ஒன்று இருக்கும் வரை அது சஞ்சலித்துக்கொண்டே இருக்கும். நல்லதோடு கெட்டதையும் நினைக்கத்தான் செய்யும். புண்ணியத்தோடு பாவத்தையும் செய்துகொண்டே இருக்கும். இந்த பாவத்திற்குரிய விளைவாகத்தான் நமக்கு இறைவன் துன் பங்களைத் தந்து கொண்டிருக்கிறான். தமக்கு வரும் துன்பங்களைப் போக்குவதற்காகவே பொதுவாக அனைவரும் பிராத்தனை என்னும் வழிபாடு செய்கின்றனர். இதைத்தான் பக்தி என்று நினைக்கிறோம். எல் லாம் வல்ல இறைவனை சரணடைந்தோர் உலகத் துன்பங்கள் என்னும் கவலைகளை நீந்திக் கடக்க இயலாது. 1. தன் வயத்தனாதல் 2. தூய உடம்பினன் ஆதல் 3. இயற்கை உணர்வினனாதல் 4. முற்றும் உணர்தல் 5. பாசங்களால் பந்தப்படாமல் இருத்தல் 6. பேரருளுடைமை 7. எல்லையில்லா வல்லவனாதல் 8. சச்சிதானந்த மயமாக இருத்தல்.
இப்படிப்பட்ட தன்னிகரில்லா தெய்வத்தின் மீது கொண்ட நம்பிக்கையை தளர விடாமல், அவனையே கதி எனச் சரணடைவோரே பக்தர்கள் இவர்களால் எத்தகு துன்பத்தையும் சமாளிக்க முடியும். இது பொய்யா மொழிச் செய்தி, நாம் அன்றாட வாழ்வில் கடந்து செல்ல ஒவ்வொரு கணத்திலும் பெரிய பொருள் பொதிந்துள்ளது. இது ஆண்டவனுடையது என்ற உணர்ச்சியுடன் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது புனிதமாகி விடுகிறது. இது பொதுமறையின் கடவுள் வாழ்த்து உணர்த்தும் பக்தி உணர்வன்றோ!
தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ள உதவும் முதல்படி பக்தி. பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற மனிதன் அடைந்துள்ள பெருமைகளுள் சிறப்பானது வணங்கும் தன்மை. தன்னை விட அனைத்திலும் மிக்கவரை வணங்கும் தன்மையுடைய மனிதன், தான் தோன்றியிருக்கும் உலகம், அதன் இயக்கம், அதில் நடைபெறும் சிறப்புக்கள் எல்லாவற்றிற்கும் தலைமையாக ஒரு பொருள் இருந்தல் வேண்டும் எனக்கருதி அதனைப் பேரன்புடன் வழிபடலானான். இப்படி, மனிதன் ஆற்றும் பணிகள் எல்லாம் அன்பினை அடிப்படையாகக் கொண்டுள்ளது எனலாம்.
'அன்பு" என்பதும் மூன்றெழுத்து, அதன் உச்சக்கட்டமான 'பக்தி" என்பதும் மூன்றெழுத்து. 'அன்பு" எனும் சொல் பல பொருள்களில் குறிப்பிடப்படுகிறது. தனக்குச் சமமாக உள்ளோரிடம் காட்டும் அன்பு, 'நட்பு" என்று கூறப்படுகிறது. ( நட்பு மார்க்கத்தில் தன் பக்தியை வெளிப்படுத்திய சுந்தரர் கதையைச் சான்றாகக் கொள்ளலாம். தமக்குக் கீழோரிடம் காட்டம் அன்பு 'இரக்கம்" அல்லது 'அருளுடமை" எனப்ப-டுகிறது. பெரியோர்களிடம் காட்டும் அன்பு 'பக்தி" ஆகிறது.
பெற்றோர் தம் மக்களிடம் காட்டும் அன்பு, 'பாசம்" எனப்படுகிறது. இல்வாழ்க்கையில் இதுவே 'காதல்" எனப்படுகிறது. தாய்மொழி, தாய்நாடு இவற்றின் மீது காட்டப்படும் அன்பைப் 'பற்று" என்பர். அந்த அன்பின் முதிர்ந்த நிலை, இறைவன் நம்மீது காட்டும் அன்பு 'அருள்" எனப்படுகிறது. எல்லா உணர்ச்சிக-ளுக்கும் தாயாக விளங்குவது அன்பு. அன்பின் முதிர்நிலையே பக்தி எனலாம். பக்தியின் வேற்றுருவே அன்பு எனலாம்.
ஆன்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையேயுள்ள உறவைக் குறிப்பது பக்தி. உயிர்கள் ஒவ்வொன்றும் இறைத்தன்மை கொண்டவையே. ஓருயிர் இன்னொரு உயிரிடம் கொள்ளும் பக்திதான் அன்பு, பாசம், கருணை, அருள், பற்று, காதல் என்ற பல பெயர்களைக் கொண்டுள்ளது. நுட்பமும், திட்-பமும் வாய்ந்த அருமையான இவ்வுணர்வைத் தெய்வப்புலவர் தம் உலகப் பொதுமறையில் எங்ஙனம் வெளிப்படுத்தியுள்ளார்.
காலந்தோறும் தோன்றியுள்ள தமிழில் தமிழிலக்கியங்களுள், ஏறக்குறைய உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது என்ற சிறப்பினைப் பெற்றுள்ள தெய்வப் பனுவல், தெய்வப் புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, பக்தியுணர்வை உலகினுக்கீந்த நிலையைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
கடவுள் வாழ்த்தில் பக்தி வெளிப்படுமாறு எழுத்தைக் கொண்டு எழுதியவனை எண்ணிப் பார்க்கிறோம். அதேபோல உலகத்தைக் கொண்டு அதைப்படைத்த இறைவனை எண்ணிப் பாhக்க வேண்டு- ம். அவனை நாம் வேறெங்கும் தேடவேண்டியதில்லை. நம் மனதில் நம் உடனே பிறந்த அவனிடம் அடை-க்கலம் புகுந்தோர் நலமாக வாழ்வர். விருப்பு வெறுப்பு இல்லாமல் அவரைச் சரண் புகுந்தால் நல்வினை தீவினைகளாகிய இரு வினைகளும் நம்மைச் சேரா. விருப்பு வெறுப்புகளை விலக்கி, அவற்றிற்கு காரண- மான ஐம்புலன்களின் ஆசைகளைக் குறைக்க வேண்டும். எத்துணைக்கெத்துணை நன்னெறிகளைப் பின்ப-ற்றுகிறோமோ அத்துணைக்கத்துணை நல்வாழ்வு கிட்டும். தன்னிகரில்லா இறைவனைச் சரணடைந்தோர், தம் மனக்கவலைகளை போக்கிக்கொள்ள முடியும். மனம் என்று ஒன்று இருக்கும் வரை அது சஞ்சலித்துக்கொண்டே இருக்கும். நல்லதோடு கெட்டதையும் நினைக்கத்தான் செய்யும். புண்ணியத்தோடு பாவத்தையும் செய்துகொண்டே இருக்கும். இந்த பாவத்திற்குரிய விளைவாகத்தான் நமக்கு இறைவன் துன் பங்களைத் தந்து கொண்டிருக்கிறான். தமக்கு வரும் துன்பங்களைப் போக்குவதற்காகவே பொதுவாக அனைவரும் பிராத்தனை என்னும் வழிபாடு செய்கின்றனர். இதைத்தான் பக்தி என்று நினைக்கிறோம். எல் லாம் வல்ல இறைவனை சரணடைந்தோர் உலகத் துன்பங்கள் என்னும் கவலைகளை நீந்திக் கடக்க இயலாது. 1. தன் வயத்தனாதல் 2. தூய உடம்பினன் ஆதல் 3. இயற்கை உணர்வினனாதல் 4. முற்றும் உணர்தல் 5. பாசங்களால் பந்தப்படாமல் இருத்தல் 6. பேரருளுடைமை 7. எல்லையில்லா வல்லவனாதல் 8. சச்சிதானந்த மயமாக இருத்தல்.
இப்படிப்பட்ட தன்னிகரில்லா தெய்வத்தின் மீது கொண்ட நம்பிக்கையை தளர விடாமல், அவனையே கதி எனச் சரணடைவோரே பக்தர்கள் இவர்களால் எத்தகு துன்பத்தையும் சமாளிக்க முடியும். இது பொய்யா மொழிச் செய்தி, நாம் அன்றாட வாழ்வில் கடந்து செல்ல ஒவ்வொரு கணத்திலும் பெரிய பொருள் பொதிந்துள்ளது. இது ஆண்டவனுடையது என்ற உணர்ச்சியுடன் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது புனிதமாகி விடுகிறது. இது பொதுமறையின் கடவுள் வாழ்த்து உணர்த்தும் பக்தி உணர்வன்றோ!
விவேகானந்தர் உரை (சிகாக்கோ)
ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒரு நாள் அரசி யுதிஷ்டிரரிடம், 'அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும்?' என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், 'தேவி, இதோ, இந்த இமயமலையைப் பார். எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது! நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அதுபோலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூல காரணம். அன்பு செலுத்தப்பட வேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம்போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்தவேண்டும். அன்பை விலை பேச என்னால் முடியாது' என்றார்.
இறைவனின் பெருமை
இறைவனின் பெருமையை விளக்குவது என்பது இயலாது. மனித அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டது அந்த மாட்சி. இறைவனின் புகழ்பாடி தொண்ணூற்றொன்பது தொகுப்புக்களை எழுதி முடித்த பேரறிஞர்ஒருவர் நூறாவது இறுதித் தொகுப்பினை எழுதத் தொடங்கிய போது அவரது தோட்டத்தில் இரண்டு குருவிகள் தென்பட்டன. அந்த Nஐhடிப்பறவைகள் இந்த அறிஞரின் முன் அடிபணிர்ந்து நின்றன. அப்போது அவ் அறிஞர் குருவிகளைப்பார்த்து என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு குருவிகள் தோட்டத்திலு-ள்ள தாமரைக் குளத்தை நிரப்புவதற்காக தொலைவில் உள்ள நதியிலிருந்து தங்கள் அலகுகளில் நீரைக் கொண்டுவந்து சேர்ப்பதாய் குருவிகள் கூறின.
அறிஞர் சிரித்தார் “மடப் பறவைகளே! நதியோ அதிகதூரத்தில் இருக்கிறது உங்கள் அலகுகளோ மிகச்சிறியன. குளமோ மிகப் பெரியது இந்தக் குளத்தை நிரப்ப உங்களால் எப்படி முடியும்? அதற்கு அந்தக் குருவிகள் சொல்லின இறைவனின் புகழை எழுத நீஙகள் செய்யும் முயர்ச்சிபோல் தான் இதுவும். உங்கள் உள்ளம் மிகச் சிறியது. இறைவனின் புகழ் அளவிற்கு அப்பால் பட்டது. அதனை எழுதுவதற்கு உங்களுக்கு உள்ள ஆற்றல் மிகக் குறைவானது. என்றாலும் அந்த இறைவனைப் பற்றி எழுதுவது சாத்தியப்படுமானால், அதிக தூரத்திலிருக்கும் நதியிலிருந்து எங்கள் அலகுகளில் நீரைக் கொண்டுவந்து குளத்தை நிரப்புவது அசாத்தியமானதல்ல என்றன.
“ஏகாந்த வெளியைச் சிருஷ்டி செய்திருக்கும் சிற்பியே“ என்று இறைவனை வர்ணிக்கின்றார் அகஸ்திய மகாரிஷி. கால்பந்து மைதானம் எவ்வளவு பெரியது? என்றாலும் மக்களின் கவனத்தைக் கவர்வது இரு அணிகளுக்கிடையே உதைபடும் பந்துதான். அதே போல சுற்றிச் சுழலும் நூறாயிரம் கோடிக்கு மேற்பட்ட கோள்களையும் நட்சத்திரங்களையும் தான் மனிதர்கள் பார்க்கிறார்கள். அவற்றைவிட சுழலுவதற்கு உண்டாக்கப்பட்டுள்ள வெட்ட வெளி முக்கியமல்லவா? வெறும் சூனியத்திலிருந்து இத்தனை பெரிய கோள்கள் நட்சத்திரங்களைத் தோற்றுவித்து ஒன்றோடொன்று மோதாமல் சுற்றவிடும் இறைவனை எப்படி புகழ்வது?
இந்த அழகிய உலகை நமக்குரிய வீடாக இறைவன் படைத்திருக்கிறார். நாம் வசதியாக வாழவும் செயல்படவும் எண்ணற்ற சாதனங்களைப் படைத்திருக்கின்றார். மிக மிகத் தொலைவிலிருந்த நமக்கு ஒளி - வெப்பம் நமக்கு அளப்பரும் வேகத்தில் வருகிறது. சுவாசிப்பதற்குக் காற்று, குடிப்பதற்கு நீர், தட்பவெட்ப நிலைகள் உயிர்வாழ்வதற்கு அளவான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
இறைவனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்றில்லை. மழை பெய்யும் பொழுது நல்லவர் தீயவர் என்று பார்ப்பதில்லை. எல்லோரிடமும் இறைவன் அன்பு கொண்டிருக்கிறார். நாம் வாழும் ஒவ்வொரு தினமும் அந்த அன்பு சுரந்தபடியே இருக்கின்றது. நமது உடல் உயிர் வாழவேண்டும், ஊட்டம் பெறவேண்டும் என்பதற்காக இறைவன் தினமும் மறைந்து கொண்டே இருக்கின்றார். தம்மில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் முறைக்குமேல் தினமும் மறைகிறார். இறைவன் படைத்த பொருட்களைத் தினமும் நாம் உண்டு வசிக்கிறோம். ஒவ்வொரு தானியத்திலும், காயிலும், கனியிலும் இறைவன் இரு-க்கின்றார். நாம் அவற்றை உண்ணும் போது அவர் மறைகிறார். நாம் வாழ வேண்டும் என்பதற்காக அவர் அருளுகிறார்.
பச்சைப் பசும் இலைகள், வண்ணமலர்கள், காய் கனிகள் தரும் செடி கொடிகள் எல்லாம் தங்கள் வேர் மூலம் கிடைக்கும் நீரைக்கொண்டு தழைத்து வாழ்கின்றன. நாமும் அதேபோல் இறைவனிடம் ஊட்டமும் சக்தியும் பெறுகிறோம்.
இறைவனிடம் சிலர் எனக்கு இதனை இவ்வாறு செய்து கொடுத்தால் நான் இவ்வாறு பூiஐ செய்கிறேன் என்று பேரம் பேசுவோர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். நாம் அளிப்பவற்றை இறைவன் ஏற்கிறாரா? என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. பிராத்தனை பலித்துவிட்டால் அதை பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இறைவன் இணங்கிவிட்டார் என்ற மகிழ்கிறார்கள். பணத்தினால் இறைவன் அன்பை வாங்க முடியாது. முழுமையான சரணாகதிமூலம் நம்மை ஒப்படைத்து மெஞ்ஞான ஒளியை நம் இதயத்தில் இயக்கிவைத்து உண்மையான அன்பின் மூலம் இறை ஒளியை நம் இதயத்தில் ஏற்கவேண்டும்.
அறிஞர் சிரித்தார் “மடப் பறவைகளே! நதியோ அதிகதூரத்தில் இருக்கிறது உங்கள் அலகுகளோ மிகச்சிறியன. குளமோ மிகப் பெரியது இந்தக் குளத்தை நிரப்ப உங்களால் எப்படி முடியும்? அதற்கு அந்தக் குருவிகள் சொல்லின இறைவனின் புகழை எழுத நீஙகள் செய்யும் முயர்ச்சிபோல் தான் இதுவும். உங்கள் உள்ளம் மிகச் சிறியது. இறைவனின் புகழ் அளவிற்கு அப்பால் பட்டது. அதனை எழுதுவதற்கு உங்களுக்கு உள்ள ஆற்றல் மிகக் குறைவானது. என்றாலும் அந்த இறைவனைப் பற்றி எழுதுவது சாத்தியப்படுமானால், அதிக தூரத்திலிருக்கும் நதியிலிருந்து எங்கள் அலகுகளில் நீரைக் கொண்டுவந்து குளத்தை நிரப்புவது அசாத்தியமானதல்ல என்றன.
“ஏகாந்த வெளியைச் சிருஷ்டி செய்திருக்கும் சிற்பியே“ என்று இறைவனை வர்ணிக்கின்றார் அகஸ்திய மகாரிஷி. கால்பந்து மைதானம் எவ்வளவு பெரியது? என்றாலும் மக்களின் கவனத்தைக் கவர்வது இரு அணிகளுக்கிடையே உதைபடும் பந்துதான். அதே போல சுற்றிச் சுழலும் நூறாயிரம் கோடிக்கு மேற்பட்ட கோள்களையும் நட்சத்திரங்களையும் தான் மனிதர்கள் பார்க்கிறார்கள். அவற்றைவிட சுழலுவதற்கு உண்டாக்கப்பட்டுள்ள வெட்ட வெளி முக்கியமல்லவா? வெறும் சூனியத்திலிருந்து இத்தனை பெரிய கோள்கள் நட்சத்திரங்களைத் தோற்றுவித்து ஒன்றோடொன்று மோதாமல் சுற்றவிடும் இறைவனை எப்படி புகழ்வது?
இந்த அழகிய உலகை நமக்குரிய வீடாக இறைவன் படைத்திருக்கிறார். நாம் வசதியாக வாழவும் செயல்படவும் எண்ணற்ற சாதனங்களைப் படைத்திருக்கின்றார். மிக மிகத் தொலைவிலிருந்த நமக்கு ஒளி - வெப்பம் நமக்கு அளப்பரும் வேகத்தில் வருகிறது. சுவாசிப்பதற்குக் காற்று, குடிப்பதற்கு நீர், தட்பவெட்ப நிலைகள் உயிர்வாழ்வதற்கு அளவான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
இறைவனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்றில்லை. மழை பெய்யும் பொழுது நல்லவர் தீயவர் என்று பார்ப்பதில்லை. எல்லோரிடமும் இறைவன் அன்பு கொண்டிருக்கிறார். நாம் வாழும் ஒவ்வொரு தினமும் அந்த அன்பு சுரந்தபடியே இருக்கின்றது. நமது உடல் உயிர் வாழவேண்டும், ஊட்டம் பெறவேண்டும் என்பதற்காக இறைவன் தினமும் மறைந்து கொண்டே இருக்கின்றார். தம்மில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் முறைக்குமேல் தினமும் மறைகிறார். இறைவன் படைத்த பொருட்களைத் தினமும் நாம் உண்டு வசிக்கிறோம். ஒவ்வொரு தானியத்திலும், காயிலும், கனியிலும் இறைவன் இரு-க்கின்றார். நாம் அவற்றை உண்ணும் போது அவர் மறைகிறார். நாம் வாழ வேண்டும் என்பதற்காக அவர் அருளுகிறார்.
பச்சைப் பசும் இலைகள், வண்ணமலர்கள், காய் கனிகள் தரும் செடி கொடிகள் எல்லாம் தங்கள் வேர் மூலம் கிடைக்கும் நீரைக்கொண்டு தழைத்து வாழ்கின்றன. நாமும் அதேபோல் இறைவனிடம் ஊட்டமும் சக்தியும் பெறுகிறோம்.
இறைவனிடம் சிலர் எனக்கு இதனை இவ்வாறு செய்து கொடுத்தால் நான் இவ்வாறு பூiஐ செய்கிறேன் என்று பேரம் பேசுவோர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். நாம் அளிப்பவற்றை இறைவன் ஏற்கிறாரா? என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. பிராத்தனை பலித்துவிட்டால் அதை பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இறைவன் இணங்கிவிட்டார் என்ற மகிழ்கிறார்கள். பணத்தினால் இறைவன் அன்பை வாங்க முடியாது. முழுமையான சரணாகதிமூலம் நம்மை ஒப்படைத்து மெஞ்ஞான ஒளியை நம் இதயத்தில் இயக்கிவைத்து உண்மையான அன்பின் மூலம் இறை ஒளியை நம் இதயத்தில் ஏற்கவேண்டும்.
Thursday, January 31, 2008
ஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்

ஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் 1990ம் ஆண்டு ஹம் தமிழ் மக்களால் முதலில் நிலவறையில் திரு உருவப்படம் வைத்து சித்திரைப் புத்தாண்டில் ஆரம்பிக்கப்பட்டு பிரதி வெள்ளிக்கிழமைகளிலும், சிவரா த்திரி, நவராத்திரி, கந்தசஷ்டி, திருவொம்பாவை போன்ற விசேடதினங்களில் மாலை நேரங்களில் மட்டுமே பூiஐகள் ஆராதனைகள் செய்யப்பட்டு வந்தன.
1993ம் ஆண்டு ஹவாய் தீவிலிருந்து சற்குரு சிவயோக சுவாமிகளின் பிரதம சிஷ்யராகிய சற்குரு சிவாய சுப்பிரமணிய சுவாமிகள் வருகை தந்து, நில மட்டத்திற்கு கீழ் தெய்வத்தை வைத்து, மக்கள் நிலமட்டத்திற்கு மேலே இருந்துகொண்டு தெய்வத்தை வைத்து வணங்குவது முறை இல்லை என்றும் ஆலயத்தை வெளியே கொண்டு வரும்படி கூறி விநாயகர் திரு உருவச்சிலையை தானே தருவதாகக் கூறினார். அப்படியே அடியார்களின் உதவியுடன் ஆலய கட்டடம் கட்டப்பட்டு 1994ம் ஆண்டு வைகாசி மாதம் 12ம் திகதி புனர்பூச நட்சத்திரத்தில் சுப்பிரமணிய சவாமிகள் ஆசீர்வாதத்துடன் கும்பாபிசேகம் நடைபெற்று, தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகமும் நடைபெற்று இன்று வரை காலை 10.00 மணிக்கும் மாலை 18.00 மணிக்கும், மற்றும் இந்துக்களின் விசேட தினங்களிலும் இங்கு விசேடமாக பூiஐகள் நடைபெறுகின்றன.
விசேட தினங்களில் எம்பெருமான் வண்ணமலர் மாலைகளினால் அலங்காரம் செய்யப்பெற்று பக்தர்களின் தேவார பாராயணத்துடன் உள் வீதி வலம் வரும் அற்புதக் காட்சிகாணக் ;கோடி கண்கள் வேண்டும். சித்தி விநாயகர் அருள் பெற்ற அனேக அடியார்களையும், அவர் அருள் வேண்டி ஆலயம் வரும் அனேக பக்தர்களையும் அங்கு தினமும் காணலாம்.
1996ம் ஆண்டிலிருந்து மஹோற்சவம் நடைபெற்று வருகின்றது. தேர்த்திருவிழா இன்று வரை ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமையே நடைபெற்றுவருவாதாக அறியக் கூடியதாக உள்ளது.
ஆலயம் ஹம் புகையிரத நிலையத்திற்கு மிக அருகே உள்ளது.
ஆலய விலாசம் :- Ferdinand Poggel str 25,
59065 Hamm
ஆலய தொலைபேசி இல:- 02381 162 686
மயூரபதி ஸ்ரீ முருகன் ஆலயம் பேர்லின்
இந்த நூற்றான்டின் போர் பேரழிவுகளுக்கு கால்கோள் எடுத்தது ஜேர்மனியின் தலைநகரம் பேர்லினே. இன உணர்வின் எல்லை கடந்த கொடுமைகள் பலவற்றை இது தாராளமாகக் கண்டுகளித்தது இன்று பல நாட்டு பல இன மக்களையும் பக்குவமாய் போற்றிவரும் பெருமைக்கு அருகதைபெற்று வளாந்து பொலிந்து வருகிறது. இங்கு ஒரு காலத்தில் கிறீஸ்தவ தேவாலயங்களுடன் யூதரின் ஆலயங்களும், முகமதியர்களின் மசூதிகளும், பௌத்தாகளின் விகாரை ஒன்றும் தலைநிமிர்ந்து நின்றன. அவற்றோடு நகரின் முக்கிய பகுதியில் பெரியதொரு தெரு அருகில் நிலக்கீழ் மண்டபத்தில் திகழ்கிறது மயூரபதி ஸ்ரீ முருகன் ஆலயம்.
"மூர்த்தி சிறிதேனும் கீர்த்தி பெரிது" என்பது போல் சிறிய ஆலயமாயிருப்பினும் பெருமைகள் பல நிறைந்ததாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு வாழும் ஈழத்தமிழ்ச் சமூகத்தினரின் ஒன்பது பேரின் முதல் முயர்ச்சியில் தோன்றிய இச் சிறு ஆலயம், இன்று இந் நகரத்து இந்துப் பெருமக்கள் அனைவரி னதும் பொதுச் சொத்தாக விளங்குகிறது. இந்து மக்களுக்கு மட்டுமன்றி, இந்த மதம் பற்றி அறிய விரும்பும் வேற்றுமத தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இன்னும் ஆத்மீக தாகங்கொண்ட அனைத்து இனமக்களும் ஆலயத்திற்கு வருகைதருகிறார்கள். இவ்வாலயத்தில் நித்திய பூiஐ வழிபாடு கள் மற்றும் இந்துக்களின் எல்லா முக்கிய விசேட தினங்களும், பண்டிகைகளும் சிறப்பாக அனுட்டிக்கப்படுகின்றன. தாய்நாட்டில் நல்லூகந்தன் வருடாந்த மஹோற்சவத்தையொட்டி அதே நாட்களி ல் இங்கும் திருவிழா நடைபெற்று தேர் திருவிழாவன்று இங்கும் முருகன் வெளிவீதி உலாவந்து அருள் பாலிப்பது வளக்கம். இவ்வாலயத்தில் கற்பூர தீபத்திற்குப் பதிலாக நெய் தீபமே காட்டப்படுகிறது. நெய் தீபம் சுகாதரத்திற்கும் சுற்றாடலுக்கும் உகந்ததாகவும் வழிமண்டலத்தைத் தூய்மைப்படுத்தி சுகாதாரத்தைப் பேணக்கூடியது என்றும், கற்பூரம் கலப்படமில்லாத நிலையில் பயன் படுத்தினால் சாதக மான நன்மைகள் உண்டென்றும் கற்பூரம் பெருமளவில் தூயதாய் கிடைப்பதில்லை என்றும் அறியக் கூடியதாக உள்ளது.
கற்பூரம் சிறிய பொருளாய் இருந்து பெரிய Nஐhதியை தோற்றுவிக்கும் என்பதால் எரிந்தபின் மீதி ஏதும் இல்லாதிருப்பதால் ஆத்மீக இலக்கான Nஐhதியுடன் கலக்கும் தத்துவத்தின் வெளிப்பாடாக கற்பூரம் எரி க்கப்பட்டு வந்திருக்கிறது. இன்று கற்பூரம் கலப்படமாகி வெறும் வியாபாரமாகிவிட்டது.
ஆலயத்தில் வாரம் தோறும் அன்னதானமும், நம் வழிபாடு சிறக்க, நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள நாளாந்தம் கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் வாரம் தோறும் இங்கு போதிக்கப்படுகிற து. தியான வழிபாட்டிற்கு தயாh படுத்தும் ஆரம்ப பயிர்ச்சிகள், இசை வழிபாடு, சொல் வழிபாடு, தியான வழிபாடு என நடாத்தப்படும். இப் பிராத்தனைகளில் பல சிறந்த ஆன்மீக இதயங்கள் ஈடுபட்டு கலந்து சிறப்பிக்கின்றனர்.
ஆலய விலாசம்:- Urban Str 176, 10961 Berlin.
தொலைபேசி இல:- 030 694 89 00
"மூர்த்தி சிறிதேனும் கீர்த்தி பெரிது" என்பது போல் சிறிய ஆலயமாயிருப்பினும் பெருமைகள் பல நிறைந்ததாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு வாழும் ஈழத்தமிழ்ச் சமூகத்தினரின் ஒன்பது பேரின் முதல் முயர்ச்சியில் தோன்றிய இச் சிறு ஆலயம், இன்று இந் நகரத்து இந்துப் பெருமக்கள் அனைவரி னதும் பொதுச் சொத்தாக விளங்குகிறது. இந்து மக்களுக்கு மட்டுமன்றி, இந்த மதம் பற்றி அறிய விரும்பும் வேற்றுமத தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இன்னும் ஆத்மீக தாகங்கொண்ட அனைத்து இனமக்களும் ஆலயத்திற்கு வருகைதருகிறார்கள். இவ்வாலயத்தில் நித்திய பூiஐ வழிபாடு கள் மற்றும் இந்துக்களின் எல்லா முக்கிய விசேட தினங்களும், பண்டிகைகளும் சிறப்பாக அனுட்டிக்கப்படுகின்றன. தாய்நாட்டில் நல்லூகந்தன் வருடாந்த மஹோற்சவத்தையொட்டி அதே நாட்களி ல் இங்கும் திருவிழா நடைபெற்று தேர் திருவிழாவன்று இங்கும் முருகன் வெளிவீதி உலாவந்து அருள் பாலிப்பது வளக்கம். இவ்வாலயத்தில் கற்பூர தீபத்திற்குப் பதிலாக நெய் தீபமே காட்டப்படுகிறது. நெய் தீபம் சுகாதரத்திற்கும் சுற்றாடலுக்கும் உகந்ததாகவும் வழிமண்டலத்தைத் தூய்மைப்படுத்தி சுகாதாரத்தைப் பேணக்கூடியது என்றும், கற்பூரம் கலப்படமில்லாத நிலையில் பயன் படுத்தினால் சாதக மான நன்மைகள் உண்டென்றும் கற்பூரம் பெருமளவில் தூயதாய் கிடைப்பதில்லை என்றும் அறியக் கூடியதாக உள்ளது.
கற்பூரம் சிறிய பொருளாய் இருந்து பெரிய Nஐhதியை தோற்றுவிக்கும் என்பதால் எரிந்தபின் மீதி ஏதும் இல்லாதிருப்பதால் ஆத்மீக இலக்கான Nஐhதியுடன் கலக்கும் தத்துவத்தின் வெளிப்பாடாக கற்பூரம் எரி க்கப்பட்டு வந்திருக்கிறது. இன்று கற்பூரம் கலப்படமாகி வெறும் வியாபாரமாகிவிட்டது.
ஆலயத்தில் வாரம் தோறும் அன்னதானமும், நம் வழிபாடு சிறக்க, நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள நாளாந்தம் கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் வாரம் தோறும் இங்கு போதிக்கப்படுகிற து. தியான வழிபாட்டிற்கு தயாh படுத்தும் ஆரம்ப பயிர்ச்சிகள், இசை வழிபாடு, சொல் வழிபாடு, தியான வழிபாடு என நடாத்தப்படும். இப் பிராத்தனைகளில் பல சிறந்த ஆன்மீக இதயங்கள் ஈடுபட்டு கலந்து சிறப்பிக்கின்றனர்.
ஆலய விலாசம்:- Urban Str 176, 10961 Berlin.
தொலைபேசி இல:- 030 694 89 00
Subscribe to:
Posts (Atom)