Tuesday, March 18, 2008

முருகன்

இறைவன் ஞான வடிவினன். ஞான பண்டிதன் சக்தியின் துணைகொண்டு உலகைப் படைத்துக் காத்து ரட்சிக்கின்றான். அதைவிளக்கும் சொருபமே முருகன். முருகன் ஞான சொருபம். வள்ளி இச்சா சக்தி (விருப்பம், ஆசை). தெய்வானை கிரியா சக்தி (செயலாற்றல்). வள்ளித் திருமணத்தில் சிறந்த தத்துவம் அடங்கியுள்ளது. இறைவன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன். இறைவன் சாதி வித்தியாசங்களைப் பார்ப்பதில்லை. ஆகவே இந்து சமயம் சாதி வித்தியாசக் கொள்கையை ஆதாரிக்கவில்லை என்பதை வள்ளித்திருமணம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் வள்ளித்திருமணம் வள்ளியாகிய சீவன், போரின்பமாகிய சிவத்துடன் கலப்பதை விளக்குகிறது.

முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இக பர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்க வேண்டும். அவ்வறிவைத் தருபவன் .. வாலறிவனாகிய .. இறைவனே.

இதையே திருவள்ளுவர் ..

'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"

... என்கிறார்.

முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும்.

கூவுகின்ற கோழி நாத வடிவானது. கோழிக்கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன். மயில் மனத்தின் சின்னம். பாரிசுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது.

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன். ஆகவே அவனை வைத்தியநாதன் என்றும் வாழ்த்துகின்றோம். கிடைக்காத பொருட்களையும், பேறுகளையும் வேண்டும் பக்தர்களுக்கு வழங்குகின்றவனாதலால் வரதராசன் என்றும் பெயர் பெற்றவன் முருகன்.

முருகன் மூன்று அசுரர்களை அழிக்கின்றார் என்று கந்த புராணத்தில் கூறப்படுகின்றது. மனிதனின் மனத்தை வாட்டுகின்ற ஆணவம், மலம், மாயை .. எனப்படும் மூன்று மலங்களே அந்த அசுரர்கள். நமது மனதிலே தோன்றி, நம்முடைய மனதிலே இருக்கின்ற நல்ல எண்ணங்களை வளர்த்து, தீய எண்ணங்களை வென்று, சிறப்பாக வாழ முயற்சிக்கின்றான். அதற்காக இறைவனை வணங்குகின்றான். கந்தர் சஷ்டி விரதம் அனுஷ்டிப்பதும் மனதைக் கட்டுப்படுத்தி நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளும் பொருட்டே.

முருகனின் சிறப்புக்களை புகழ்ந்து பாடி அவனருளைப்பெற அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை .. முதலிய பாடல்களில் சிலவற்றையாவது பாராயணம் செய்தல் நலந்தரும்.

'ஆறுதலை முருகன் ஆறுதலைத் தருவான்."

பக்நாங் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம்

ஆலயம். ஆ! இந்த லயம்தான் எம் இதயத்தைக்கூட இதமாக இயங்க வைக்கிறது. இந்த லயத்தை அழகு என்றும் கொள்ளலாம், ஒழுங்கென்றும் ஒழுகலாம். உலகில் உறவுகள் எத்தனை இருந்தாலும் இனிய உறவு தாயுறவே.அழகிய உறவும் அதுதான். முதுமை எட்டாத புதுமை உறவு. எனவேதான் தெய்வதரி சனங்களிலும் அப்பாள் தரிசனம் ஒரு தாயும் சேயும் சந்திக்கும் ஒரு இன்ப தரிசனத்திற்கு ஒப்பாகிறது.பக்நாங் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம் அடியவர்கள் கேட்கும் நல்வரங்களை நல்கி பக்தர்கள் உள்ளத்தில் ஆட்சி புரிகின்றாள் மீனாட்சியாக.இந்த ஆலயம் 1994ம் ஆண்டு பங்குனி உத்தரத்தில் சிவாய சுப்பிரமணிய சுவாமிகளது ஆசியுடன் ஆரம்பிக்கப் பட்டது. யேர்மனி நாட்டில் சுற்காட் நகரில் பக்நாங் கிராமத்தில் அமைந்தள்ளது.81 பெரும் தெரிவில் ஸ்ருட்காட்டை நோக்கிச் செல்கையில். அல்லது கல்புறோன் நோக்கிச் செல்கையில் 13வது வெளியேற்றுப் பாதையில் இறக்கி 16கி.மீ வரை செல்ல, அம்பாள் காட்சி தருவாள். போகும் பாதை இருமருங்கிலும் களனிகள். கிராமத்தின் வனப்புள் சென்று, அம்பாளின் வதனத்ததைத் தரிக்கலாம். அம்மனுக்குரிய விஷேட தினங்கள் முறையாக பூஜிக்கப்படுகின்றன. வருடம் தோறும் கௌரிக்காப்பு விரதம் மிகவும் அற்புதமாக நடைபெற்றுவருகின்றது.பக்தர்கள் மெய்மறந்து வணங்குவதும், ஆனந்தக் கண்ணீர் பொழிவதும், பக்தர்களின் வேண்டுதலுக்கு அருள் கொடுக்கும், அம்மனின் தரிசனத்தை பெற்றதாகவே கொள்ளவேண்டும்.அம்பாள் அலங்கரியாக,அகம்பாவம் ஒழித்து, பூமணம் கமழ அழகுத்தேவதையாக, அருள் வடிவாக உள் வீதியை வலம் வரும்போது உள்ளம் மெய்மறக்கும். எங்கள் தேவைகளை தாயிடம் முறையிடுவதுபோல் இந்தத்தாயிடம் கேட்டு வந்தால், நின்மதி கிட்டும.; ஆனந்தப்பெருவாழ்வு மலரும். .
Sri Meenadchi Temple e.v
Eberhard Str.8
71522 Backnang Germany
Tel:07191/88627-Handy:0179 799 6052

மஞ்சள் குங்கும மகிமை

நம் பண்பாட்டில் மஞ்சள் ஒரு மங்கலகரமான பொருள். எல்லா முக்கிய விழாக்களிலும் மஞ்சள் இடம் பெறும்.அந்தக் காலத்தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது சிறுவர் முதல் பெரியவர் வரை மேற்கொள்ளும் வழக்கத்தில் இருந்தது .பூப்பு நன்னீராட்டு விழா திருமணச்சடங்கு புதுமனை புகுவிழா ஆகிய மங்கள நிகழ்ச்சிகளில் மஞ்சள் கரைத்து தெளிக்கப்படுகிறது. மஞ்சளில் தண்ணீர் சேர்த்து இறுக்கமாக பிள்ளையார் பிடித்து வழிபடுகிறோம். இப்படியாக மஞ்சள் பலவிதத்திலும் நம் பண்பாட்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சளின் தாவரவியல் பெயர் உரஉஅயடழபெய .மஞ்சள் ஒரு கிழங்கு! இதன் முக்கியமான தன்மை கிருமி அழிப்பு சக்தி. எத்தகைய கிருமிகளையும் அழிக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதன் காரணமாகவே பலவகை புண்கள் மீது மஞ்சள் வேப்பிலை கலந்து பற்றுப் போடும் நாட்டு வைத்தியம் இருக்கிறது.மேலும் மஞ்சளை பூசி குளிப்பதால் தோல் மினுமினுப்பாகும் பருக்கள் வராது தேவையற்ற ரோமம் வளராது என்னும் அனுபவ நன்மைகளும் உண்டு.
இந்த மஞ்சள் பற்றி நம் முன்னோர்கள் அன்றே அறிந்திருந்த உண்மைகளை நவீன உலகின் ஐரோப்பியரும் அமெரிக்கரும் அண்மையில் தான் அறிந்துள்ளார்கள்.அமெரிக்க சுகாதார அறநிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி பண்டாரு ரெட்டி என்பவர் இது பற்றி ஆய்வு நடாத்தி சமயலில் பயண்படும் மஞ்சள் தூளில் கர்கியுமின் எனும் வேதவியல் கலவை உள்ளது, அது பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது என்று கண்டறிந்துள்ளார்.
குங்குமம்
மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது .தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிகிறார்கள் நெற்றியில் புருவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும் .நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது. இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.
நெற்றியின் புருவ மத்திக்கு நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக piநெயட படயனெ எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது. இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள். இதனை நெற்றிக்கண் எனலாம். இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவதும் இப்பகுதியாகும். தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும். யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும். ஞானக் கண் என்றம் அழைக்கப்படும். அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.
அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டனர். இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.
குங்கமத்தை ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது .இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.
நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஸ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும். ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.
மின்கடத்தும் தன்மை நமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். வேப்பிலை, மாவிலை, துளசி, எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடுதான் உபயோகிக்கிறார்கள். அதுமட்டுமல்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன்.
ஆர்த்தி
மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து அந்த மஞ்சள் கரைசலில் கொஞ்சம் சுண்ணாம்பை கலந்தால் அது சிவப்பு நிறமாக மாறும். அதுவே ஆர்த்தியாகும். இவ்வாறு கரைத்த ஆர்த்தியை அகன்ற தாம்பாளத்தில் ஊற்றி அதனை புதுமணமக்களின் முகத்துக்கெதிரே அல்லது புது வீட்டின் வாசல்படி முன்பு அல்லது மங்கள நிகழ்ச்சியின் முக்கிய நபரின் முன்பு காட்டி தட்டை மூன்று முறை சுற்றி பின் ஆர்த்தி நீரை வீட்டுக்கு வெளியே ஊற்றி விடுவார்கள். இந்த செயல்பாட்டில் பல அறிவியல் காரணங்கள் அடங்கியுள்ளன.
1.மஞ்சள் ஒரு கிருமிநாசினி.2.ஒளியுடல் மீது பாதிப்பு.3.மின் காந்த சக்தியலைகள் சீரமைப்பு.
சந்தனம்
குங்குமம் போலவே சந்தனமும் சக்தி வாய்ந்தது. கோயில்களில் திருநீற்றோடு குழைத்த சந்தனத்தையும் குங்குமத்தையும் கொடுப்பார்கள். திருநீறு பூசி சந்தனம் இட்டு அதன் மேல் குங்குமத்தை வைப்பது நம் வழக்கம்.
சந்தன மரத்தில் இருந்து கிடைக்கும் சந்தன கட்டையை அரைத்து சந்தனம் தயாரிக்கப்படுகிறது. சந்தனம் அணிவதால் தெய்வீக உணர்வு மேம்பட்டு நினைத்ததை நிறைவேற்றும் மந்திர சக்தி அதிகரிக்கும். மேலும் சந்தனம் தோலுக்கு மிகவும் நல்லது .சுத்தமான சந்தன தூளையும் கொஞ்சம் மஞ்சளையும் தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி வைத்து காய்ந்த பின் முகத்தை கழுவினால் முகத்தோல் புதுப் பொலிவு பெறும்.

Sunday, March 16, 2008

இல்லறத்தில் ஆன்மீகம்

இறையுணர்வு என்பதே அன்புவுணர்வுதான். அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்.அன்பு என்பது கடவுளிடம் மட்டும் அன்றி கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும். அருள் நெறி என்பது அன்பு நெறியின் நீடிய தோன்றமாகும்.
எனவேதான் அருள் என்னும் அன்பு ஈன்று குழுவி என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துது இறைவனுக்கு ஆற்றும் தொண்டிற்கு சமமாகும். உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும். அருள் நெறி என்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமய வாழ்வு வாழ்கிறோம் எனில் அது சமுதாய வாழ்வுடன் இணைந்ததாக அமையவேண்டும். இந்த வகையில் இல்லறத்தில் என்றும் இறைவனை அடையலாம் என்பதை இந்து சமயம் காட்டுகிறது.
இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை- என்கிறார் வள்ளுவர்
இல்வாழ்க்கையின் பண்பு அன்புடமை. பயன் அறனுடையமையாகும். மனைவி சுற்றம் என்று வி¡¢யும் அன்பிலே வாழும் ஒருவன் உலகனைத்தின் பாலும் வி¡¢ந்த அன்பு பூணும் மனப்பக்குவம் அடைகிறான். மனைவியும் அதே அன்புசால் மனப்பக்குவம் அடைகிறாள்.உலகனைத்தையும் அன்புக்கண்களிலே காணும் இந்த வி¡¢ந்த மனோபக்குவம் அடைய இல்லறம் வழிகாட்டுகிறது. அன்பும், அறனும் இல்வாழ்க்கையினை சிறப்பாக்குகிறது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் -வள்ளுவர்.
இல்லறம் நடத்தியே இறைவனை அடைந்தாகச் சொல்லப்படும் நாயன்மார்களுடைய கதைகளிலும், ழ்வார் கதைகளிலும் தனை நாம் அறியலாம்.
"காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றிஓடே எடுத்தென்ன? உள்ளன்பில்லாதவர் ஓங்கு செல்லநாடேயிடை மருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர் பால்வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுமே"
இங்கு இல்லறத்தானும் வீடுபேறு பெறமுடியுமென கூறப்படுகிறது.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்ததை ஒழித்துவிடின் -
இதைதான் சமயம் கூறுகிறது. உனக்கிட்ட கடமைகளை ஒழுங்காக செய். அதுவே உன்னை உயர்நிலையை அடையும் தகுதியை வளர்த்துக் கொடுக்கும்.
இந்து தர்மத்தின் முக்கிய நூலாக போற்றப்படுவது பகவத்கீதை. இந்த கீதையை உபதேசித்தவனும் கேட்டவனும் சந்யாசிகள் அல்லர். குடும்பவாழ்விலிருந்தோர்,மன்னாளும் மன்னர்கள்.
கீதையிலே பரமாத்மா கிருஷ்ணன் சொல்கிறான் :
"அர்சுனா, மூன்று உலகங்களிலும் இனி மிஞ்சிற்கும் செயல்,செய்கை ஒன்றும் எனக்குக் கிடையாது. அடையத்தக்கது, அடையப்படாது என ஒரு பேறுமில்லை.எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் தொழில்செய்யாது வாளாவிருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும், என் வழியையே பின் பற்றும்.அதனால் இந்த உலகம் அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஓயாமல் தொழில் செய்பவன் சிறந்த கர்மயோகி. அவன் ஜிவாத்மாவை இடைவிடாது துதிக்கிறான். சம்சாரத்தை நேசிக்கிறான். குடும்பத்தை காக்கிறான். மனைவி, மக்களை காக்கிறான்.சுற்றதாத்தாரை, அயலவரை போற்றுகிறான். எல்லாவற்றையும் துறந்து சென்றால் அவன் முத்திக்கு தகுதியுடைவனாக மாட்டான். எல்லாவற்றையும் துறந்து செல்கிறவன் கடவுளுடைய இயற்கை விதிகளை துறந்து செல்பவனாகிறான்...
இவ்வாறு நாம் பாக்கும் போது இல்வாழ்க்கையில் முற்று முழுதாக விடின் இறைவனை அடையலாமா? என்ற கேள்வி எழும். வாழ்வில் பற்றை விலக்க வேண்டுமே ஒழிய வேண்டியதில்லை. 'படகு தண்ணீரில் இருக்கலாம். தண்ணீர் படகினுள் இருக்ககூடாது'என்று அருமையாக வழிகாட்டுகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
இல்லறத்துறவை காட்டிலும், உள்ளத்துறவு சதகோடி மடங்கு மேலானதாகும்.இல்லாள் அகத்திருக்க இல்லாததது ஒன்றில்லை. கற்புடைய மனைவியைகாதலுற்று, அறம்பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கைகையாகும்.கடவுள் அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு உற்றார்,உறவினர், உலகத்தாருக்கும் உபசாரம் செய்து கொண்டு அறவழியில் இன்பங்களை அனுபவித்து ஆண்டவனை தொழுது அதனால் மனிதத் துன்பங்களில் இருந்து விடுபட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வது மேலான வழியாகும்.
இதனை வள்ளுவப் பெருந்தகை அன்புடைமை, வாழ்க்கை துணைநலம், புதல்வரைப் பெறுதல், விருந்தோம்பல், இனியவை கூறல் என்ற அதிகாரங்களில் வாழ்வின் ஆன்மீக வழிகாட்டியில் காணலாம்.
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்போ ஓய்ப் பெறுவதெவன் "
இல்லறத்தினை ஒழுங்காக நடத்துபவன் துறவறத்திற்கு போய் பயன் ஒன்றுமில்லை.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் முயல்வாருள் எல்லாம் தலை"
இல்லறத்தை சாரியாக நடத்துகிறவன் புலன்களை அடக்கி முயல்கிற எல்லாரினும் தலை சிறந்தவன்.
"அற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து"
சாரியான முறையில் இல்லறம் நடத்துகிறவன் , துறவறத்தானை விட பொறுப்புகளும் சகிப்புகளும் உள்ளவன். இல்லறத்தான் பிறருக்குக்குற்ற துன்பங்களையும் தனக்கு வந்தது போல் எண்ணி அதை நோக்கும் பொறுப்புடையவனாகிறான்.
"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அ•தும்பிறன் பழிப்ப தில்லாயின் நன்று"
மனிதனுக்கு அறம் என்று நூல்களால் தீர்மானிக்கப்பட்டதே இல்லறம் ஆகவே, இல்லறத்தை சாரியாக நடாத்துகிறவன் வானுறையும் தெய்வதுள்வைக்கப்படுவான்.
எதனைத்தைப் பற்றி ஆராய்ச்சி இல்லாமலே கர்ம ஒழுக்கங்ளினால்இல்லறத்தில் நின்று வீடுபேறு அடைய முடியும். இல்லறம் பொறுப்புகளும்,சகிப்புத் தன்மையும் உடையது. இல்லறத்தை நாம் கர்மயோகமாக கருதினால் அதுவே சமுதாயத்துக்கு பயனுள்ளது.
பொரியபுராண வரலாறு மூலம் "அடியார்கள் இல்லறத்தை நடத்தி இறைவனை அடைந்ததைக் காணலாம்."இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணக் கடை"
என்பதற்கேற்ப நன் மனைவியைப் பெற்ற இளையான் குடிமாற நாயனார், இல்லறத்தில் அன்று வறுமை வந்துற்றபோதும் , காரைக்காலம்மையால் வரலாறும் இல்லறத்தில் நின்று கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து போ¢ன்ப பெருவாழ்வு பெற்றதை அறியலாம்.இல்லற வாழ்விலே தர்மத் தளத்தில் நின்று செய்யும் கடமைகள் ஆன்மீக உணர்விற்குவழிவகுக்கும் என்பதை அறியலாம்.
ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் எனில் அது மக்கள் வாழ்க்கை நலத்துடன் இணைந்ததா¡க இருக்க வேண்டும். அவ்வாறு அமைவதற்கு இல்லறம் சிறந்த வழியாகும். இந்துமத தத்துவக் கருத்துக்கள் மூலமும் இவற்றை நாம் உய்த்துணரலாம்.

Saturday, March 15, 2008

ஸ்டுக்கார்ட் சித்திவிநாயகர் ஆலயம்



30 ஜூலை 2002 அன்று ஸ்டுட்கார்ட் ஜெர்மனியில் சித்தி விநாயகர் ஆலயம் ஒன்று உருவாக்கப்பட்டு கும்பாபிஷேகத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நகரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் ஏறக்குறைய ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த ஆலயம் இருக்கும் நகரம் ஸ்டுட்கார்ட் (தெற்கு ஜெர்மனியின் ஒரு நகரம்). இங்கு இந்த ஆலயம் ஏறக்குறைய 12 ஆண்டுகளாக இருந்து வருகின்றது. ஆனால் இதற்கு முன்பதாக ஆலயம் வேறு இடத்தில் 3ம் மாடியில் ஒரு அறையில் வாடகைக்கு இருந்து வந்தது. விநாயகர் விக்ரகமும் மற்றும் படங்களும் அலமாரிக்குள் வைக்கப்பட்டு வாரம் ஒரு முறை இங்கு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆலயத்திற்குத் தனியாக நிலம் வாங்கி அதற்காக ஒரு முழு ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆலய நிர்வாகம் இயங்கிக் கொண்டிருந்தது.
தற்பொழுது இந்த ஆலயம் ஸ்டுட்கார்ட் நகரத்தில் வைப்லிங்கர் சாலையில் இரண்டாம் மாடியில் அமைந்துள்ளது. மூல மூர்த்தியாக விநாயகரும், பரிகார தேவதைகளாக மகாலஷ்மியும் முருகனும் இருக்கின்றனர். கருவரை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரகார மூர்த்தி, உற்சவமூர்த்தி, பரிகார தெய்வங்கள் ஆகியவற்றின் சிலைகள் எல்லாம் தனி நபர்கள் முயற்சியில் கும்பகோணத்திலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றன் நவகிரங்களும் கூட உள்ளன.
இந்த 2ம் மாடியில் நீண்ட விஸ்தாரமான 2 அறைகளும் 2 சிறிய அறைகளும் இருக்கின்றன. இப்பொழுது ஆலயம் வாடகை கட்டிடத்தில் தான் அமைந்திருக்கின்றது. வெகு விரைவில் தக்க நிலத்தை வாங்கி அங்கு ஆலாயத்தை அமைக்க வேண்டும் என்று தற்போதைய ஆலய நிர்வாகம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.
கும்பாபிஷேகத்திற்காக விசேஷமாக இலங்கை இனியலிலிருந்து பிரதான குருக்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். அவரது தலைமயில் இந்த விழா சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை (30.6.2002) நடைபெற்றது. ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட தமிழர்களும் ஜெர்மானியர்களும் (சிலர்) இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பூஜையின் போது மிக விரிவாகத் தேவாரப் பாடல்கள் பற்பல பதிகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஓதப்பட்டது சிறப்பாக இருந்தது. உதாரணமாக தாழ் திறப்பதற்கான பதிகம் மங்களப் பதிகம் போன்றவற்றைச் சொல்லலாம். அத்தோடு பிரதான குருக்கள், தான் செய்கின்ற ஒவ்வொரு பூஜைக்குமான விளக்கத்தையும் ஆரம்பத்திலேயே கூறி தெளிவாக மக்கள் இப்பூஜைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் செய்வித்தார்.
ஆலய நிர்வாகம் தொடர்ந்து சைவ சமய விளக்க பாடங்களையும் யோகப் பயிற்களையும் ஒவ்வொரு வாரமும் நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக, முதலில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை எனும் வகையில் சமய தத்துவ வகுப்புக்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Wednesday, March 12, 2008

இறைவன் ஏன் இதயத்தில் இருக்கிறான்?

ஆண்டவன் இந்த உலகத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் பூமிக்கு வந்தாராம். இறைவனை அடையாளம் கண்டு கொண்ட பக்தர்கள் சுற்றுலாப் பயணிகளைக் காசு கேட்டுத் துரத்தும் உள்ளூர்ப் பிச்சைக்காரர்கள் போல ஆக்கி விட்டார்கள். எனக்கு நிறைய நகை கொடு பணம் கொடு என்று வகை வகையாகக் கேட்டு ஆண்டவனைத் துரத்த ஆரம்பித்தார்கள். இவர்களைச் சமாளிக்க முடியாமல் மண்டபம், சத்திரம், கிராமம்;, நகரம் என்று எங்கெங்கோ ஒடிப் பார்த்தார் ஆண்டவன். ஆனால் அவரால் மனிதர்களின் அதைக்கொடு, இதைக்கொடு என்ற பிக்கல் பிடுங்கல்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை. அவர் கோயிலை நோக்கி ஒடினாராம்.
அங்கேயும் தட்டு ஏந்தியவாறு எதிர்கொண்டது பிச்சைக்காரர்கள் கூட்டம். ஆண்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசியில் அவருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. மனிதன் தான் உள்நோக்கிச் சிந்திப்பதே இல்லையே.. சுயமதிப்பீடும் செய்துக் கொள்வதில்லையே! தன்னுடைய இதயத்தைத் தான் எந்த மனிதனும் பார்ப்பதே இல்லையே! அதனால் அங்கே ஒளிந்து கொண்டால் யாருமே தன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று எண்ணி மனிதனின் இதயத்திலே போய் ஒளிந்து கொண்டாராம்.
கடவுள் ஏன் நம் இதயத்திலே குடியிருக்கிறார்? என்ற சீரியஸான கேள்விக்கு கிண்டலாகச் சொல்லப்படுகிற கதை இது.‘
‘யாரிடமிருந்து எதை வாங்கலாம்.. பெறலாம் என்ற மனநிலையிலேயே நம்மில் பலர் இருந்து வருகிறோம். அதனால் பிறருக்கு என்ன கொடுக்கலாம் என்றே நினைப்பது இல்லை. தப்பித் தவறி நாம் கோயிலுக்கு ஒரு டியூப் லைட் வாங்கிக் கொடுத்தால், லைட் வெளிச்சமே வராத அளவிற்கு அதன் மேல் நம் பெயரைக் கொட்டை எழுத்துக்களில் எழுதி விடுவோம்.‘
இந்து சாத்திரப்படி ஒரு பொருளை தானமாகக் கொடுக்கும் போது ‘இனிமேல் இது என்னுடையது இல்லை‘ என்று சொல்லி விட்டுத் தான் கொடுக்க வேண்டும்.
சுமஸ்கிருதத்தில் ‘நம்மா‘ என்றால் என்னுடையது இல்லை என்று பொருள். என்னுடையது இல்லை என்று சொல்லி ஒரு டியூப் லைட்டைக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்து விட்டு ‘இது என்னுடையது‘ என்று பெருமைப்பட்டுக் கொள்வது எந்த வகையில் தர்மம்?
யோசித்துப் பாருங்கள்.. காலையில் எழுந்தவுடன் பல் விளக்க நாம் பயன்படுத்தும் பற்பசையிலிருந்து இரவு தூங்கும் போது உபயோகப்படுத்தும் கொசுவத்திச் சுருள் வரை கண்ணுக்குத் தெரியாத யார் யாரோ நமக்காகச் செய்து கொடுத்திருக்கும் பொருட்கள் எத்தனை? எத்தனை?இந்தச் சமூகத்திடமிருந்து இத்தனை பொருட்களை இன்று பெற்றுக் கொண்ட நான், அதற்கு பதிலாக இந்த உலகத்துக்கு என்ன கொடுத்தேன்?‘ என்று யோசித்துப் பார்த்தாலே போதும். நாம் இந்த உலகுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்பது புரியும்!
அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த உலகில் இருக்கும் அத்தனை தலை சிறந்த விஞ்ஞானிகளும் ஒன்று கூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஒர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார்!
நாம் உண்ணும் உணவிலிருந்து உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை, நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறோமா? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடங்களில் முக்கியமானது நன்றியோடு இருக்கக் கற்றுக் கொள்‘ என்பது தான். ‘நமஹா‘ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் ‘போற்றி‘ என்றாலும் இதை நன்றிப் பெருக்கோடு தான் உச்சரிக்க வேண்டும்!
ஆனால் உதட்டளவில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கணக்கிலெடுத்தால், அந்த வரிசையில் முதலில் நிற்பது ‘நன்றி‘.
ஒரு முறை நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், பயணிகளே பயப்படாதீர்கள். விமானத்தில் சின்னக் கோளாறு தான். விமானி சரி செய்து சமாளித்து விடுவார் என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக விமானம் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாகப் பறக்க ஆரம்பிக்கிறது.
அப்போது, அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமை மிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும் விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறி விடப் போகிறது எங்கள் ஏர்லைன்° விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி‘ என்று சொல்லி பயணிகளை அதோகதியாக விட்டுவிட்டு விமானப் பணிப்பெண் பாராசூட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்து விட்டாளாம்.
நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் நன்றி பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன நன்றி மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது!.
நன்றி - வெப் உலகம் சுவாமி சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் பிளீஸ் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.

Saturday, March 8, 2008

ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் கனோபர்

இந்த நகரத்தில் கிட்டத்தட்ட 5000 இந்துக்கள் வாழ்கின்றனர். இந்த மாநகரத்தின் தலைநகரில் 1994ம் அண்டு தமிழ் இந்துக் கலாச்சார அமைப்பு ஒன்றை அமைத்தார்கள். இவ் அமைப்பில் 300 அங்கத்தவாகள் உள்ளாhகள். இதில் அதிகமானோர் இலங்கைத்தமிழரும் குறைந்தளவில் தமிழ் நாட்டவரும் அங்கத்தவர்களாக உள்ளனர்.
இவ் ஆலயம் கட்டிடம் கட்டி முடித்து 28.08.1995 அன்று கும்பாபிசேகம் நடைபெற்றது.
தினமும் மாலை 18.00 மணிக்கு பூiஐ நடைபெறுகிறது. தினமும் ஆலயம் 17.00 மணிதொடங்கி 19.00 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் 16.00 மணியிலிருந்து 20.00 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத்தில் அனைத்து இந்து சமய விசேடதினங்களும் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றன.
ஆலய முகவரி:- Sri Muthumari Amman temple
Empelder str 96
30455 Hannover
Tel:- 0511 47 11 49

வுநட:- 0511 47 11 49
zwani.com myspace graphic comments