Friday, February 22, 2008
ஹம் திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன்
ஹம் நகரில் திரு நல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் அடியார்கள் குறைதீர்க்கும் அருள் அழகராகத் திகழ்கிறார். இவ் அருளாலயம் 23.06.99 அடிக்கல் நாட்டப்பெற்று மெய்யடியார்களது எண்ணம்போல் 07.02.2001 மகா கும்பாபிஷேகம் தைப்பூசத் தினத்தில் நடாத்தப்பெற்றது. ஒவ்வொரு மாதமும் கார்த்திகைத் திதியில் விஷேட பூiஐகள் நடைபெறுகி ன்றன. மற்றும் கந்தஷஸ்டி, தைப்பூசம், கார்த்திகை தீபம் போன்ற விஷேடதினங்களிலும் மற்றய அனைத்துச் சைவ சமய பண்டிகை நாட்களிலும் பூiஐகள் நடைபெறுகின்றன.
ஆலயம் தினந்தோறும் காலை 9:30மணியிலிருந்து மாலை 8-30 வரை பக்தர்களுக்காகத் திறந்தே இருக்கின்றது. பூiஐகள் தினமும் காலை 10.00 மணிக்கும் மாலை 18.30 மணி என இருவேளைகள் இடம் பெறுகின்றது.
எமது தாய் நாட்டில் சரித்திரப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் மஹோற்சவ காலத்திலேயே இங்கும் மஹாற்சவம் நடைபெற்று அங்கு நடைபெறும் தேர்த்திருவிழா அன்று இங்கும் ஆறுமுக வேலழகர் திருவீதி வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரிலே பக்தர்களின் பஐனைப் பாடல்களுடன் அடியார்களின் அரோகரா கோஷத்துடன் நாதஸ்வர மேழ இசை முழங்க எம் பெருமான் தேர் ஏறி பவனி புறப்படும் காட்சி காணும் பக்தர்களின் கண்களில் அனந்தக் கண்ணீர் பெருகுவதையும் பக்தி வெள்ளத்தில் அடியார்கள் மிதப்பதையும் காணலாம். கோவில் அமைந்த சூழலும் தெய்வ அருளும், ஒரு அழகு மயிலைத் தானகவே ஈர்த்து வந்துள்ளது. மழைமேகம் கண்டு ஆடும் மயில் இங்கு பக்தர்களைக் கண்டாலே தோகை விரித்து ஆடும். ஆடும்மயிலின், அற்புதம் காணவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருளும் ஆறுமுகவேலழகரின் அருள்பெறவும் பக்;தர்கள் சூழ்ந்தவண்ணம் இருக்கும் இவ் அருள்ளாலயம் ஹம் நகரில் புகையிரத நிலையத்தில் இருந்து 5 நிமிட நடை தூரத்திலேயே அமைந்துள்து. ஸ்ரீ ஆறுமுகவேலழகன் அருள் வேண்டி இம்மைக்கும் மறு மைக்கும் பேரருள் சேர்ப்போமாக.
ஆலய முகவரி:
Murukan Hindu tempel e.V
Roon Str.2a- -- 59065 Hamm
Tel:02381/29103
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment