Saturday, February 2, 2008
இறைவன் 'சொல்லற் கரியான்" சொல்லுவதற்கும் 'அறியான்"
சிவபுராணத்தில் மணிவாசகப் பெருந்தகை முடிக்கும்போது சிவபெருமானுக்கு '' சொல்லற்கு அரியானை '' என்று ஒரு அடைமொழி அளிக்கிறார்கள். இதற்கு சொற்களால் வருணித்து கூற இயலாதவன் என்று பொருள். சிறிய ' ரி ' க்கு பதிலாக பெரிய ' றி ' போட்டால் பொருள் மாறிவிடும், '' சொல்லவதற்கு அறியான் 'என்றாகி விடும் இதற்கு" சொல்லுவதற்கு தெரியாதவன்" என்று பொருள் வரும். எல்லாம் அறிந்த பரம் பொருளுக்கு சொல்லத் தெரியாது என்று சொல்லலாமா எனக் கேட்டால் அப்படியும் சொல்லலாம் என்றே தோன்றுகிறது. அவருக்கு 'இல்லை"எனச் சொல்லத் தெரியாது. கேட்டவர்க்கு கேட்டபடி இல்லை எனச் சொல்லாமல் வாரி வழங்குபவன் இறைவன், அந்த வகையில் அவன் சொல்லத் தெரியாதவனே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment