தமிழ் ஈழ மக்கள் புலம் பெயர்ந்து வாழுகின்ற நாடுகளில் எல்லாம் தமது மொழி, கலை, கலாச்சாரம் ஆலய வழிபாடு என்பவற்றை மறவாது கண்ணும் கருத்துமாகப் பேணிவருகிறார்கள். Nஐர்மனி எஸசன் நகர் வாழ் இந்து மக்களின் பெரு முயர்ச்சியால் 1989 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆலயத்தில் வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 18.30 அபிசேகத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 19.00 மணிக்கு பூiஐ நடைபெறுவதுடன் அடியார்களின் தரிசனத்திற்காக இரவு 21.00 மணிவரை ஆலயம் திறந்திருக்கிறது.
இங்கு ஸ்கந்த ஷஷ்டி மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப் படுகிறது. மற்றும் நவராத்திரி, திருவம்பாவை மற்றும் ஏனைய விரத பண்டிகை நாட்கள் என்பனவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மூல மூhத்தி யாக 1993ம் ஆண்டு பிரதிஸ்டை செய்யப்பட்ட ஞானசக்தி வேலனுடன் காட்சி தரும் எம் பெருமானின் கும்பாபிசேக தினமான வைகாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் அஷ்டோத்தர சத சங்காபிசேகமும் விசேடமாகக் கொண்டாடப்பட்டு வருவது அறிய முடிகிறது.
இவ் ஆலயம் எஸன் புகையிரத நிலையத்திலிருந்து 15 நிமிட நடைதூரத்திலும், 40ம் இலக்க நெடும்சாலையில் (குசடைநனெழசக) வெளியேறும் பாதையிலிருந்து 1500 மீற்றர் தூரத்திலும் உள்ளது.
ஆலய விலாசம்:- GoldSchmidt Str 5, 45127 Essan.
தொலைபேசி :- 0201 248 74 79
No comments:
Post a Comment